Sunday, December 4, 2016

ஸ்ரீவாஞ்சியம் (Srivanchiyam)

வாழ்வில் ஒரு முறையேனும்
சென்று தரிசிக்க வேண்டிய தலம்.


உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவராக விளங்கும் பூலோக கைலாயம் என அழைக்கப்படும் ஸ்ரீவாஞ்சிநாத சுவாமி. 

உலகிலேயே எம தர்ம ராஜனுக்காக தனிக்கோயில் அமைக்கப்பட்டு வழிபடும் தலமாக சிறப்பு பெற்றது ஸ்ரீ வாஞ்சியம்

 காசிக்கு ஒப்பான சிறப்புடையதாக ஆறு தலங்கள் போற்றப்படுகிறது:

(திருவெண்காடு, திருவையாறு, சாயாவனம், மயிலாடுதுறை, திருவிடை மருதூர், ஸ்ரீவாஞ்சியம்). இந்த ஆறு தலங்களுள் அளப்பரிய மகிமை பொருந்திய தலமாகத் திகழ்வது திருவாரூர் மாவட்டம்  நன்னிலத்தில் அமைந்துள்ள ஸ்ரீவாஞ்சியம்.



Srivanchiyam Temple



பிரளய காலத்தில் உலகம் அழிந்த போது சிவபெருமானும் பார்வதியும்
கைலாயத்திலிருந்து புறப்பட்டுப் பிரளயத்தில் அழியாது தப்பிப் பிழைத்த
காசியைப் பார்த்து வியந்தனர். அது போலவே தப்பிய இடங்கள் வேறு எங்கெங்கே உள்ளன என்று தேடித் தென் திசைக்கு வந்தனர். அப்போது தான் காவிரிக் கரையில்திருவாஞ்சியம் என்னும் ஊரைக் கண்டு அதன் அழகில் மயங்கி லிங்க வடிவில் சுயம்புவாகச் சிவபெருமானும் ஞானசக்தியாகப் பார்வதி தேவியும் அவ்வூரிலேயே கோயில் கொண்டு விட்டனர். இந்த தலத்தை தான் மிகவும் நேசிப்பதாக சிவன் பார்வதியிடம் கூறியதாக புராணங்கள் சொல்கின்றன.
 
Srivanchinathar
Amma Manglaambhigai












இத்தலத்தின் மூலவர் ஒரு சுயம்பு லிங்கத் திருமேனியுடன் காட்சி அளிக்கிறார். உலகிலுள்ள 64 சுயம்பு லிங்கத் திருமேனிகளுள் இதுவே மிகவும்
பழமையானதாகும். தன்னைப் பிரிந்த திருமகளை (ஸ்ரீ) மீண்டும் அடைய விரும்பி (வாஞ்சித்து) விஷ்ணு தவமிருந்து சிவனருள் பெற்ற தலம் இதுவாதலால் இத்தலம் ஸ்ரீ வாஞ்சியம் எனப்படுகிறது.

மேலும் இத்தலத்தில் சிவனை தரிசனம் செய்பவர்களுக்கு மறு பிறப்பில்லாமலும், அமைதியான இறுதிக்காலத்தை தர வேண்டும் என்றும் அருளினார். அவ்வாறே இத்தலத்தில் க்ஷேத்திர பாலகனாக விளங்கும் எமனை முதலில் தரிசனம் செய்த பின்பே இறைவனை தரிசிக்க வேண்டும்
என்ற வரமும் அளித்தார்.

அதன்படி நாள்தோறும் எமதர்ம ராஜனுக்கே முதல் வழிபாடு, ஆராதனைகள்
நடைபெறுகின்றன. இங்குள்ள குப்த கங்கை தீர்த்தத்தில் நீராடி முதலில் யமனை வழிபட்டு பிறகே கோவிலில் மற்றவர்களை வழிபட வேண்டும் என்பது மரபாகும்.

கங்காதேவி

ஒருமுறை கங்காதேவி சிவனிடம், மக்கள் அனைவரும் கங்கையில் நீராடி தங்களது பாவத்தை தீர்ப்பதால் என்னிடம் பாவம் சேர்ந்து விட்டது. இதைப்போக்க தாங்கள் தான் வழி கூறவேண்டும்,என வேண்டினாள். அதற்கு சிவன், உயிர்களை பறிக்கும் எமனுக்கே பாவ விமோசனம் தந்த தலத்தில் சென்று பிரார்த்தனை செய்தால் உன்னிடம் சேர்ந்த பாவங்கள் விலகும் என்றார்.

அதன்படி கங்கை தனது 1000 கலைகளில் ஒரு கலையினை மட்டும் காசியில் விட்டு விட்டு மீதி 999 அம்சங்களுடன் இங்குள்ள தீர்த்தத்தில் ரகசியமாக உறைந்திருப்பதாக ஐதீகம். எனவே குப்த கங்கை என்று இங்குள்ள தீர்த்தத்துக்கு பெயர் வந்தது. எனவே இது காசியை விட பல மடங்கு புண்ணிய
தீர்த்தமாக கருதப்படுகிறது.

மரணபயம், மனச்சஞ்சலம்

மரணபயம், மனச்சஞ்சலம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட அவை நீங்கும்.
இத்தலத்தில் இறப்பவர்களுக்கு எம வேதனை கிடையாது. இத்தலத்தில் எந்த
இடத்தில் இறப்பு நிகழ்ந்தாலும் மற்ற தலங்கள் போல் கோவில் மூடப்படுவதில்லை. தமிழ்நாட்டில் உள்ள க்ஷேத்திரங்களில் திருக்கடவூருக்கு
அடுத்தப்படி நிகரற்ற தலம் திருவாஞ்சியம் ஆகும்.

பாடல் பெற்றுள்ள தலம்

ஸ்ரீவாஞ்சியம் தலம் தேவார மூவராலும் மணிவாசகப் பெருமானாலும் பாடல்
பெற்றுள்ள தலம். அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்ற தலமாகவும்
மேலும் பல சிறப்புக்களை பெற்ற தலமாகவும்  திகழ்கிறது ஸ்ரீவாஞ்சியம்.

மூல மூர்த்தி வாஞ்சிநாதர் எனும் திருநாமத்துடன் எழுந்தருளி உள்ளார்.
அம்பிகையின் திருநாமம் மங்களாம் பிகை. எமன் அருள் பெற்ற . தலமாதலால் இங்கு எமனே சுவாமிக்கும் அம்பிகைக்கும் வாகனத் தொண்டு புரிகிறார். 

Sri Raghu Ketu, Sri Vanchinathar Temple
ஸ்ரீ வாஞ்சியத்தில் மட்டுமே ராகவும் கேதுவும் ஒன்றாக ஓரே சிலையில் பாம்பு
உடலாகவும் மனித முகமாகவும் ஓரே நிலையில் சஞ்சர்க்கின்றனர். ஓரே
மூர்த்தியாக எழுந்தருளியுள்ள ராகு-கேதுவை வழிபட்டால் நாகதோஷம்
காலசர்ப்பதோஷம்
நீங்கி நலம் பெறலாம்.

முக்தி 

 

Sri Yamadharamaraja

இத்தலத்தின் பெயரை சொன்னாலே முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. பொதுவாக கோயில் அருகில் யாராவது இறந்து விட்டால், பிணத்தை எடுக்கும் வரை கோயிலில் நடைபெறும் பூஜைகள் நிறுத்தி வைக்கப் படும். ஆனால் இவ்வூரில் பூஜையை நிறுத்துவதில்லை.

எமதர்மனே இங்கு க்ஷத்திர பாலகராக இருப்பதால் இவ்வாறு நடக்கிறது. மேலும் கோயில் எதிரிலேயே சுடுகாடு இருக்கிறது. பிணத்தை எரியூட்டியவுடன் அங்கிருந்த படியே சுவாமியை வணங்கி இறந்தவர் சிவனடி சேர வேண்டிக்கொள்கிறார்கள். ஒருவர் இறந்த பின், அவரது பிள்ளை களால் செய்யப்பட வேண்டிய பிதுர் காரியங்களை இக்கோயிலில் முன்கூட்டி நாமே செய்து, முக்தி கிடைக்க வழி தேடிக்கொள்ளலாம். 

இதற்கு “ஆத்ம தர்ப்பணம்’ எனப்பெயர். மேலும் இத்தலத்து தீர்த்தத்தை
பருகினால் மரண அவஸ்தைப்படுகிற வர்களுக்கு சிரமம் நீங்கும் என்கிறார்கள். இத்தலத்தில் இறந்தாலும், வேறு இடத்தில் இறந்தவர் களுக்கு இங்கு பிதுர் காரியம் செய்தாலும் சிவனே அவர்களது காதில் பஞ்சாட்சர மந்திரம் (சிவாயநம)கூறி தன்னுள் சேர்த்து கொள்வதாக ஐதீகம்.

பிற தலங்களைப் போல் ஸ்ரீவாஞ்சிய தரிசனப் பேறு எளிதில் கிடைக்கப்
பெறுவதில்லை. தல யாத்திரை மேற்கொள்ள விழையும் அன்பர்களுக்கு இடர்களோ தடங்கல்களோ சோதனைகளாக வந்த வண்ணம் இருக்கும். அல்லது பல காரணங்களால் தாமதப் படவும் வாய்ப்புகள் உண்டு. ஆன்மாக்களின் கர்ம வினைப் பலன்கள் எளிதில் இத்தலத்தை அடைய விடுவதில்லை.

இருப்பினும் ஸ்ரீவாஞ்சிநாத சுவாமியையே உபாயமாகப் பற்றி, உறுதியான
பக்தியோடு முயற்சி மேற்கொள்ளும் அடியவர்களுக்குப் பெருமான் பெரும்
கருணையோடு தரிசனம் தந்தருளி ஆட்கொள்கிறான்.

இத்திருத்தலத்திற்கு எப்படி செல்வது?

இத்திருத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் அமையப் பெற்றுள்ளது. மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீவாஞ்சியம் திருக்கோயில், திருவாரூரில் இருந்து 18 km தொலைவிலும், மயிலாடுதுறை யில் இருந்து 36 km தொலைவிலும்,  கும்பகோணத்தில் இருந்து 28 km தொலைவிலும், நன்னிலத்தில் இருந்து 6 km தொலைவிலும் அமைந்துள்ளது.

Image source and more information (click here)


தேசத்துடன்
குபேரன் ஜோதிடர்

 

Monday, November 21, 2016

பைரவ ஜெயந்தி (Sri Bairava Jayanthi)

எல்லோருக்கும் கிட்டிடாது பைரவ ஜெயந்தி வழிபாடு!


அமாவாசையில் இருந்து கணக்கிடப்படும் எட்டாம் நாளே தேய்பிறை அஷ்டமி. அதுவும் கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமிக்கு தனிச்சிறப்பு உண்டு. இந்நன்னாளில்தான், துர்தேவதைகளையும், துஷ்ட சக்திகளையும் விரட்டியடிக்கும் முகமாக அவதரித்தார் கால பைரவ பெருமகனார்

Arulmigu Sri Dhaksina Kasi Kala Bhairavar, Dharmapuri. Image Source

ஓராயிரம் கொண்ட சிவனின் ஆற்றல் அம்சத்தில், பைரவருக்கு என்று தனிச்சிறப்பிடம் உண்டு. ஏவல், பில்லி, சூனியம், பீடை, துர் தேவதைகளின் ஆதிக்கம் என நம் கண்ணுக்கு புலப்படாத பல்வேறு துஷ்ட சக்திகளின் தாக்கத்தால் பலருக்கு வாழ்க்கை சூன்யமாகிவிடுவது உண்டு. 

வீட்டில் பெரும் சண்டைச் சச்சரவுகள், கடும் வழக்குப் போராட்டம், குடும்ப உறவுகளில் கடும் பிரிவினை என எதிர்மறை நிகழ்வுகளின் உக்கிரம் நம் மனதை சாவின் விளிம்புக்கே கொண்டு சென்று நிறுத்தும். எதைத் திண்றால் பித்தம் தெளியும் என தேடுவதைப் போல, பேதை மனம் இத்தகைய தாக்கங்களில் இருந்து விடுபட ஏங்கும். நிம்மதியான இடத்தைத் தேடி அலையும்.

இதை ஒவ்வொருவரும் தனிமனித வாழ்வில் கடந்தே வந்திருப்பர். சிலர் தற்போது கடந்து கொண்டும் இருப்பர். அவர்களுக்கு எல்லாம் ஒப்பற்ற பரிகாரம்தான் பைரவ வழிபாடு. அதுவும் தேய்பிறை அஷ்டமி இன்னும் சிறப்பு வாய்ந்தது.

அதனினும், மிகச் சிறப்பு வாய்ந்தது, பைரவர் அவதரித்த கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமியாகும். நாளை (திங்கள்கிழமை - 21.11.2016) இந்த அஷ்டமி தினத்தில் அருகில் உள்ளத் திருத்தலங்களுக்குச் சென்று பைரவரின் பார்வையில் பட்டு மனமுருகி பிரார்த்தித்தால், மேற்கூறிய அனைத்து வகை எதிர்மறை தாக்கங்களில் இருந்தும் பரிபூரணமாய் விடுபடுவது திண்ணம். மாலை வேலையில் வழிபடுவது கூடுதல் சிறப்பு மிக்கது.

இத்தகைய அரிய வாய்ப்பு என்பது காலக்கிரகத்தில் எல்லோருக்குமே கிட்டிவிடாத ஒன்று. தீராத நோய்க்கு மருத்துவமும், அறுவைச் சிகிச்சையையும் மேற்கொண்டு வரும் அன்பர்கள், வேகமான வாழ்வில் நிம்மதியை இழந்து தவிக்கும் அன்பர்கள் என அனைவரும் இத்தகைய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன்.

நேசத்துடன்
குபேரன் ஜோதிடர்

Wednesday, November 16, 2016

Arulmigu Thiruporur Kandasamy Temple

திருப்போரூர் கந்தசுவாமி கோயில் – விண்ணேறிய வீரம்

 

காதல், வீரம் என தமிழரின் இரு அணிகலன்களுக்கும் அதிபதியான திருமுருகத் தமிழ்க் கடவுள், அசுரர்களை மூன்று இடங்களில் எதிர்கொள்கிறார். திருச்செந்தூரில் கடல்வழியாக தாக்குதல் நடத்தி சூரனை வதம் செய்கிறார். திருக்கழுக்குன்றத்தில் தரைவழித் தாக்குதலும், மேகங்களில் சென்று ஒளிந்த அசுரர்களை திருப்போரூரில் இருந்து வான்வழியிலும் தாக்கி தர்மத்தை நிலைநாட்டுகிறார். விண்ணில் போர் புரிந்து அசுரர்களின் ஆணவத்தை அடக்கிய முருகனின் பராகிரமத்தைப் பறைசாற்றுகிறது திருப்போரூர் கந்தசுவாமி கோயில்.

Thiruporur Arulmigu Ammai Valli, Ammai Deivanai samedha Kandhasamy . Image source and additional information (English)
சுயம்பு மூர்த்தியாக சுவாமி எழுந்தருளிய சிறப்பு திருப்போரூருக்கு உண்டு. பெண் பனை மரத்தின் அடியில் கந்தவேளன் இருக்கும் நிலையை, மதுரையில் வாழ்ந்த சிதம்பர சுவாமிக்கு கனவில் வந்து தெரியப்படுத்துகிறார் மதுரை மீனாட்சி. யுத்தபுரியில் (திருப்போரூர்) என் குமாரனாகிய கந்தவேளின் திருமேனியை வழிபாட்டுக்குரியதாக்க உத்தரவிடுகிறார். உத்தரவை ஏற்ற சிதம்பர சுவாமி, பெண் பனை மரத்தின் அடியில் முருகரை கண்டெடுத்து, காட்டை சீர்திருத்தி அவ்விடத்தில் பிரதிஷ்டை செய்து புதிய கோயில் எழுப்பினார். ஆண்டுதோறும் வைகாசி விசாகத்தன்று, சுவாமியுடன், சிதம்பர சுவாமி இரண்டற கலக்கும் வைபவம் அரங்கேறும்.

நிலத்தில் இருந்து விண்ணேறி வீரத்தை நிலைநாட்டிய தலம் என்பதால், வெளிநாடு பயணித்தல், வெளிநாடு வணிகங்களில் ஏற்படும் பிணக்குகள், வெளிநாடுகளிலும், வெளிநாடு சம்பந்தமான சட்ட சிக்கல்களில் பாதிக்கப்படுவோருக்கும் இத்தலம் சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. சுயம்பு மூர்த்தி என்பதால் முருகனை அதிதேவதையாகக் கொண்ட செவ்வாய் பகவானை சிறப்பிக்கும் வகையில் கூர்ம பீடத்தின் மீது யந்திரம் (ஸ்ரீ சக்கரம்) பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இங்கே, வழிபாடு நடத்துவது செவ்வாய் தோஷமுள்ளவர்களுக்கும், செவ்வாய் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சிறந்த பரிகாரமாக அமைகிறது.

சிதம்பர சுவாமிகள் மடாலயத் திருக்கோயில்  

 

திருப்போரூரில் இருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் உள்ள கண்ணகப்பட்டு எனும் ஊருக்கு இடம் பெயர்ந்தார் சிதம்பர சுவாமிகள். அங்கு மடாலயம், பூஜை மடம் மற்றும் ஒடுக்க அறை ஆகியவற்றை அமைத்தார். ஆழ்ந்த தவத்தில் ஈடுபட்டார்.  

Sri Chidambara Swamigal. Image source and additional information (English)
திருப்போரூர் முருகப்பெருமானின் ஆலயத்துக்கு வரும் பக்தர்கள், சுவாமிகளை தரிசித்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். சுவாமிகள் தினமும் நீராடிய வள்ளையர் ஓடை, "சரவணப் பொய்கை" எனும் பெயரில் வற்றாத தீர்த்தமாக, முருகப் பெருமான் கோயிலுக்கு முன்னே இன்றும் உள்ளது. 

கி.பி. 1659-ஆம் ஆண்டு வைகாசி மாத விசாக தினத்தில், மடாலயத்தில் ஒடுக்க அறைக்குள் இருந்து சுரங்கம் ஒன்றின் வழியே சமாதிக் குழிக்குள், பூஜா திரவியங்களுடன் சென்று இறைவனை பூஜித்து வழிபட்டு சமாதியின் உள்ளேயே பரிபூரணம் அடைந்தார் சிதம்பர சுவாமிகள். 

இதேநேரத்தில் திருப்போரூர் ஆலயத்தில், மூலவர் கந்தசாமியின் திருச்சந்நிதியை நோக்கி, கூப்பிய கரங்களுடன் சென்று மூலவர் திருமேனியுடன் இரண்டறக் கலந்தார். கண்ணகப்பட்டில் அமைந்த சுவாமிகளின் திருக்கோயில் அதிஷ்டானம் என்றோ ஜீவ சமாதி என்றோ சொல்லப்படுவது இல்லை. “சிதம்பர சுவாமிகள் மடாலயத் திருக் கோயில்” என்றே வழங்கப்படுகிறது. திருப்போரூர் கந்தசாமியை தரிசிப்பவர்கள் தவறாமல் இம்மடாலயம் சென்று வருதல் சிறப்பு.

அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில்
திருப்போரூர் – 603 110
காஞ்சிபுரம் மாவட்டம்
044-2744 6226
90031 27288


நேசத்துடன்
குபேரன் ஜோதிடர்

Monday, November 14, 2016

Kubera Giri Valam (குபேர கிரிவலம்), Thiruvannamalai

குபேர கிரிவலம்


முழு பாவி என்று எவரும் இந்த கலியுகத்தில் பிறப்பதில்லை;
முழு புண்ணிய ஆத்மா என்றும் எவரும் இங்கே பிறப்பதில்லை;

மானுடப்பிறப்பின் நோக்கமே மறுபிறவி இல்லாத முக்திதான். இதை உணராமல் பல கோடி மனித ஆத்மாக்கள் பணத்தின் பின்பாகவும்,புகழைத் தேடியும், அதிகாரத்தை நோக்கியும் ஓடி அரிய மானுட வாழ்க்கையை வீணடித்து விடுகின்றார்கள்.

சில பல ஆன்மீக ரகசியங்களை எப்போதாவது பொது நல நோக்கில் யாராவது புண்ணிய ஆத்மாக்கள் வெளியிடுவது வழக்கம். அதில் ஒன்றுதான் குபேர கிரிவலம்!

Asta Lingams in Thiruvannamalai Arunachaleswarar Temple, Image Source

கார்த்திகை மாதம் வரும் தேய்பிறை சிவராத்திரி அன்று ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குபேரன் தமது குபேரப் பட்டணத்தில் இருந்து பூமிக்கு வருகின்றார். வந்து, திரு அண்ணாமலையில் இருக்கும் குபேர லிங்கத்தினை சூட்சுமமாக வழிபடுகின்றார். அதன் பிறகு, அவர் அங்கிருந்து கிரிவலம் புறப்படுகின்றார். இதுதான் அந்த தெய்வீக ரகசியம்.

Geometery of Asta Lingams, Image Source
நாமும் அதே நேரத்தில் குபேரலிங்கத்தில் ஒரு மணி நேரம் இருந்து நமது தேவைகளை பிராத்தனையாக வைப்போம். அதன் பிறகு அங்கிருந்து நாமும் குபேரலிங்கத்தில் இருந்து கிரிவலம் ஆரம்பித்து குபேரலிங்கத்திலேயே நிறைவு செய்வோம்.  இப்படிச் செய்துவிட்டு வேறு எந்தக் கோவிலுக்கும் செல்லக் கூடாது. எவர் வீட்டிற்கும் செல்லக் கூடாது. நேராக நமது வீட்டிற்குச் செல்ல வேண்டும். அப்படி சென்றுவிட்டால். அடுத்த ஓராண்டுக்கு நமது வளர்ச்சி அபரிதமாக இருக்கும். 


கடந்த 10 ஆண்டுகளில் ஏராளமானவர்கள் குபேரகிரிவலம் வருகை தந்து வளமான வாழ்க்கையை அருணாச்சலேஸ்வரர் அருளாலும், குபேரலிங்கத்தின் ஆசியாலும் பெற்றுள்ளார்கள். (ஒரு வருடம் வரை அசைவம்,மது இரண்டையும் தவிர்த்ததால் வளமான வாழ்க்கையைப் பெற்றார்கள் என்பதை இங்கே நினைவிற்கொள்ளவும்.

இந்த வருடம் குபேரகிரிவலம் 27.11.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அமைகிறது. இந்த நாளில் மாலை 6 முதல் 7 மணி வரை நாம் குபேரலிங்கத்திடம் மனப்பூர்வமாக வேண்டிக் கொள்வோம். அதன் பிறகு, அங்கிருந்து கிரிவலம் புறப்படுவோம். குபேரலிங்கத்திலேயே கிரிவலத்தை நிறைவு செய்வோம். பிறகு,நமது வீடுகளுக்குச் செல்வோம்.

Google Map of Girivalam, Image source, lots of additional information in English could be found here.
தொலைதூர ஊர்களில் வசிப்பவர்களும் இந்த அரிய நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் முன்னதாகவே இந்த நற்செய்தியை பகிர்ந்து கொள்வோம்.

Thiruvannamalai Appan Arulmigu Sri Annamalayar, Annai Arulmigu Sri Unnamulaiammai, Image source


ஓம் அருணாச்சலாய நமஹ🙏

நேசத்துடன்
குபேரன் ஜோதிடர்

Friday, November 11, 2016

சஷ்டி விரதம் (Shasti Vratam)

சஷ்டி விரதம் என்பது மிகப் பெரிய விரதம். திதிகளின் வரிசையில் சஷ்டி ஆறாவதாக வருவதால் அதற்கு மிகப்பெரிய வலிமை உண்டு. ஐஸ்வர்யத்தைக் தரக்கூடியது ஆறு (6) என்ற வழக்கு ஜோதிடத்தில் உள்ளது.
ஜோதிடத்தில் 6 ஆம் எண்ணுக்கு உரிய கிரகம் சுக்கிரன். இவர் லட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறார். திருமணம், வாகனம், வீடு ஆகியவற்றை தரக்கூடியவரும் சுக்கிரன்தான். எனவே, சஷ்டி திதியில் விரதம் இருந்தால் வேண்டிய அனைத்தையும் பெறலாம். 

16 பேறுகளில் ஒன்றாகவே குழந்தைப் பேறு கருதப்படுகிறது. எனவே குழந்தைப்பேறுடன் மீதமுள்ள 15 பேறுகளையும் அளிக்கும் வல்லமை சஷ்டி விரதத்திற்கு உண்டு. இதன் காரணமாக குழந்தைப்பேறு இல்லாதவர்கள் மட்டுமே சஷ்டி விரதம் மேற்கொள்ள வேண்டும் எனக் கூறுவது தவறு.
Arulmigu Sri Bala Subramanaya
சஷ்டி விரத நாட்களில் சிரத்தையாக இருந்து விரதம் மேற்கொள்பவர்கள் அனைத்து சிறப்பையும் பெற முடியும் என்பதை உறுதியுடன் சொல்லலாம். என்னிடம் ஜாதகம் பார்க்க வரும் சிலருக்கு கூட சஷ்டி விரதம் இருக்க வலியுறுத்தியுள்ளேன்.

Thiruchendhur Temple
சஷ்டிக்கு முன்பாக திருச்செந்தூருக்கு சென்று அங்கேயே தங்கியிருந்து சூரியன் மறைவுக்கு பின்னர் சிறிதளவு சாப்பிட்டு விட்டு, இரவில் பால் மட்டும் அருந்தி, மறுநாள் காலை கடுமையான விரதம் இருந்து முருகனை வணங்கி விட்டு வந்தவர்களுக்கு பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. 30 ஆண்டுகளாக தீராத வழக்குகள், 14 ஆண்டுகளாக தீராத நோய் என பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்துள்ளது.
Thayar Valli, Thayar Devanai sametha Appan Murugan

சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் என்பது தமிழில் பரவலாகக் கூறப்படும் பழமொழிகளில் ஒன்று. சஷ்டி (சட்டி) விரதம் இருந்தால் அகப்பையில் (கருப்பையில் குழந்தை) வரும் என்று பொருள் கூறுகின்றனர்.
இங்கு அகப்பை என்பதை கருப்பை என்று மட்டும் பொருள் கொள்ளக் கூடாது. மனசுக்கும் அகம் என்று பொருள் உண்டு என்பதால், மனதளவில் உள்ள குழப்பங்களுக்கும் சஷ்டி விரதம் பலனளிக்கும். இறைவனின் அருள் கிடைப்பதன் மூலமாக பொருள் கிடைக்கலாம்.

 நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
   கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
      தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்
         தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே.


-- திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் - 38 ( நாள் என் செயும்)

சொற்பிரிவு, பதவுரை: கௌமாரம்

Image source
Thiruchendhur Temple Website

நேசத்துடன்
குபேரன் ஜோதிடர்



Thiruvannamalai Arunachaleswarar Temple

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ! ! !

  • திருவண்ணாமலைத் தலம் நடுநாட்டுத் தலங்களுள் முதன்மையானது. பஞ்சபூதத் தலங்களுள் இது அக்னித் தலம். நால்வராலும் பாடப்பட்ட தலம்.எங்கிருந்து நினைத்தாலும் முக்தி கொடுக்கும் தலம் இதுதான்.  
  •  இத்தலத்தில்தான்திருப்புகழ், கந்தர் அனுபூதி, திருவெம்பாவை, திருவம்மானை, அருணாச்சல அஷ்டகம் போன்ற புனித நூல்கள் பிறந்தன.
  •  மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூவகை சிறப்புகள் கொண்ட தலம் இது.
  •  பிரம்மன், திருமாலின் ஆணவம் அழிந்த தலம். 
  • அர்த்தநாரீஸ்வரர் கோலம் கொண்ட தலம்.
  • கார்த்திகை தீபத்தின் மூலத் தலம்.
  •  ஆதாரத் தலங்களுள் இது மணிப்பூரகத் தலம்.

இத்தல மலையுச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தால், இது உலகப் புகழ்பெற்ற தலம்.நகரின் மையத்தில், மலையடிவாரத்தில்!அண்ணாமலையார் ஆலயம் 24 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்துள்ளது.



ஆலயத்தில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன.கோபுரங்கள் மலிந்த ஆலயம் இது.இவ்வாலயத்தின் உள்ளே ஆறு பிராகாரங்கள் உள்ளன.142 சந்நிதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1,000 தூண்கள் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், அதனடியில் பாதாள லிங்கம் (பால ரமணர் தவம் செய்த இடம்), 43 செப்புச் சிலைகள், கல்யாண மண்டபம், அண்ணாமலையார் பாத மண்டபம் என அமைந்த ஆலயம்.

ஆலயத்தின் உள்ளேயே சிவகங்கைத் தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என்ற இரு பெரிய குளங்கள் உள்ளன.

கொடிக்கம்பம் அருகே செந்தூர விநாயகர் பிரம்மாண்டமாக காட்சி தருகிறார். பஞ்ச லிங்கங்களும், நான்கு முகங்கள் கொண்ட பிரம்ம லிங்கமும் உள்ளன.காலபைரவர் சந்நிதியும் உண்டு.


மூன்று இளையனார்!
 இங்கே முருகப்பெருமான்இளையனார் என்னும் பெயரில் மூன்று இடங்களில் வணங்கப் பெறுகிறார். அருணகிரியுடன் சவால் விட்டான் சம்பந் தாண்டான். அதற்காக முருகன் அருணகிரிக்கு கம்பத்தில் காட்சி தந்தார். இவர்தான் கம்பத்திளையனார் என்ற பெயரில் வளைகாப்பு மண்டபத் தூணில் காட்சி தருகிறார்.அருணகிரி வல்லாள கோபுரத்தின் மீதேறி கீழே குதித்து உயிர்விட முயன்றபோது, தடுத்தாட்கொண்டுஅருள்புரிந்து திருப்புகழ் பாட வைத்தவர் கோபுரத்திளையனார்.கோபுரம் அருகிலேயே சந்நிதி. பிச்சை இளையனார் சந்நிதி, கிளிகோபுரம் அருகே யுள்ளது. 

காமதகனம் நடக்கும் சிவாலயம் இது ஒன்றுதான்.ஆடிப்பூரத்தன்றுமாலை, ஆலயத்தின் உள்ளேயே உண்ணாமுலையம்மன்சந்நிதிமுன் தீமிதி விழா நடத்தும் ஆலயமும் இது ஒன்றுதான். திருவிழா நாட்களில் திட்டிவாசல் வழியே உற்சவமூர்த்திகள் வெளிவருவதும் இவ்வாலயத்தில் மட்டும்தான்.அருணகிரிக்கு விழா எடுக்கும் ஆலயமும் இதுதான்.

ஒன்பது கோபுரங்கள்!  
கிழக்கே ராஜகோபுரம் (217 அடி உயரம்), 
வீரவல்லாள கோபுரம்,கிளி கோபுரம் (81 அடி உயரம்);
தெற்கே திருமஞ்சன கோபுரம் (157 அடி உயரம்),
தெற்கு கட்டை கோபுரம் (70 அடி உயரம்);
மேற்கே பேய் கோபுரம் (160 அடி உயரம்),மேற்கு கட்டை கோபுரம் (70 அடி உயரம்);
வடக்கே அம்மணி அம்மன் கோபுரம் (171 அடி உயரம்),வடக்கு கட்டை கோபுரம் (45 அடி உயரம்).

சிவபெருமானே அண்ணாமலையாகக் காட்சி தருகிறார்.இதை காந்த மலை என்பர். காரணம், இம்மலையை தரிசிக்க வருவோரை மீண்டும் மீண்டும் காந்தம்போல கவர்ந்து இங்கு வரவழைக்கும். கிருத யுகத்தில் இது அக்னி மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் தாமிர மலையாகவும், இக்கலியுகத்தில்கல் மலையாகவும் திகழ்கிறது. மலையின் உயரம் 2,688 அடி. (800 மீட்டர்).கிரிவலப் பாதையின் தூரம் 14 கிலோமீட்டர்.

இப்பாதையில் 20 ஆசிரமங்களும், 360 தீர்த்தங் களும், பல சந்நிதிகளும், அஷ்ட லிங்கங்களும் உள்ளன. 26 சித்தர்கள் வாழ்ந்துள்ளனர். அடிக்கு 1,008 லிங்கம் அமைந்துள்ளது என்பர். மலையை ஒவ்வொரு இடத்தில் நின்று பார்த்தால் ஒவ்வொரு வகை தரிசனமாக 27 வகை தரிசனம் காணலாம்.



உமைக்கு இடபாகம் கொடுத்த ஈசன்! 
திருக்கயிலாயத்தில் ஆழ்நிலை தியானத்தில் இருந்த சிவபெருமானின் கண்களை அன்னை பராசக்தி விளையாட்டாக மூடியதால்இப்பிரபஞ்சமே இருண்டது. அனைத்து ஜீவராசிகளும் துன்பத்திற்கு ஆளாகி தவித்தன. இதனால் ஏற்பட்ட பாவத்தை போக்க பூவுலகில் காஞ்சிபுரம் கம்பை நதிக்கரையில் அன்னை காமாட்சியாக தவம் இருந்தாள். ஒருநாள் கம்பை நதி வெள்ளத்தில் தான் அமைத்த சிவலிங்கம் கரையாமல் இருக்க மார்போடு சேர்த்து அணைத்தார் அன்னை காமாட்சி. இதனால் அன்னையின் பாவத்தை சிவபெருமான் நீக்கினார். அய்யனே நீங்கள் எப்போதும் என்னை பிரியாதிருக்க தங்கள் திருமேனியில் எனக்கு இடபாகம் தந்தருள வேண்டும் என சக்தி வேண்டினார்.அதற்கு சிவபெருமான், அண்ணாலை சென்று தவம் செய் என உத்தரவிட்டார்.அவ்வாறே உமையும் தவம் செய்தாள்.கார்த்திகை மாதத்தில் பவுர்ணமியும், கிருத்திகையும் சேரும் நாளில் மலையின்மீது பிரகாசமான ஒளி ஒன்று உண்டானது. அப்போது ‘மலையை இடதுபுறமாக சுற்றிவா’ என அசரீரி ஒலித்தது. அதன்படி கிரிவலம் சென்ற அன்னையை அழைத்து தனது மேனியில் இடபாகத்தை அளித்து ஆட்கொண்ட சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரராக காட்சியளித்தார்.இதையும் நினைவுகூர்ந்தே அண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.

மலையளவு பயன்! 
நரசிம்மர் இரணிய வதம் செய்தபோது, அருகிலிருந்த சிறுபாலகனான பிரகலாதனை நரசிம்மரின் உக்கிரம் தாக்கவில்லை. காரணம் இரணியன் மனைவி கர்ப்பமாக இருந்தபோது நாரதர் யோசனைப்படி கிரிவலம் வந்தாள்.அப்போது பெய்த அமுத மழைத் துளி மலைமீதுபட்டு அவள் வயிற்றில் பட்டது. அது குழந்தைக்கு தக்கபலம் கொடுத்ததால்தான்இரணியன் மகன் பிரகலாதனுக்கு சக்தி கிடைத்தது.கிரிவலம் செல்ல நினைத்து ஓர் அடி எடுத்து வைத்தால்முதல் அடிக்கு ஒரு யாகம் செய்த பலன் கிடைக்கும். இரண்டாம் அடிக்கு ராஜசூய யாகம் செய்த பலனும், மூன்றாம் அடிக்கு அனைத்து யாகங்களையும் செய்த பலனும் கிட்டும். 

திருவண்ணாமலை என உச்சரித்தாலே ஐந்தெழுத்தை மூன்று கோடி முறை உச்சரித்த பலன் கிட்டும். மகாதீப தரிசனம் கண்டால், அவர்களின் 21 தலை முறையினருக்கும்புண்ணியம் கிட்டும்.கிரிவலப் பாதையிலுள்ள இடுக்குப் பிள்ளையார் சந்நிதிக்கு மூன்று வாயில்கள்- நேர்க்கோட்டில் இருக்காது. இதன்வழியே படுத்துநெளிந்து, வளைந்துதான் வெளிவர வேண்டும். இதனால் குழந்தைப்பேறு கிட்டும்; கருப்பைக் கோளாறுகள் நீங்கும். மலையின் கிழக்கே இந்திரலிங்கம், தென் கிழக்கே அக்னிலிங்கம், தெற்கே எமலிங்கம், தென்மேற்கே நிருதிலிங்கம், மேற்கே வருணலிங்கம், வடமேற்கே வாயுலிங்கம், வடக்கே குபேரலிங்கம், வடகிழக்கே ஈசான்ய லிங்கம் அமைந்துள்ளன. இந்த எட்டு லிங்க தரிசனம் முடிக்கவும் கிரிவலமும் முடிந்துவிடும். 

பாவம் போக்கும் அண்ணாமலை திருப்பாதம்! 

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பது ஆன்றோர் வாக்கு.அதைப்போன்றே இறைவனின் திருப்பாத தரிசனம் நமது முற்பிறவி பாவங்களை எல்லாம் தீர்க்கும் என்பது ஐதீகம். திருஅண்ணாமலையார் கோயிலில் அண்ணாமலையார் பாதம் அமைந்துள்ளது. கோயிலுக்கு உள்ளே பே கோபுரத்துக்கு வலது புறத்தில் அண்ணாமலையார் பாதம் உள்ளது. அடி முடி காணாத பரம் பொருளின் பாத தரிசனம் காண வேண்டி அடியார்களும், அருளாளர்களும் மேற்கொண்ட கடும் தவத்தின் பயனாக விஸ்வரூப மூர்த்தியாக அண்ணாமலையார் எழுந்தருளிய இடத்தில் அமைந்துள்ளதே திருப்பாதம். அண்ணாமலையார் பாதம் தனி சன்னதியாக அமைந்துள்ளது. கோயிலில் தரிசனம் செய்யும் பக்தர்கள் தவறாமல் பாத தரிசனம் செய்வது நன்மை தரும். பாத தரிசன சன்னதியில் தினமும் மலர் அலங்காரத்துடன் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. பாதத்தை சுற்றியுள்ள தூண்களில் விநாயகர், முருகர், கோதண்டராமர், சக்திதேவியின் திருவடிவங்கள் காட்சி தருகின்றன. மேலும் மலை உச்சியிலும் அண்ணாமலையாரின் திருப்பாதம் அமைந்திருக்கிறது. தீபம் ஏற்றப்படும் மலை உச்சியின் வலது புறத்தில் பாத தரிசனத்தை நாம் காணலாம். 

திருவண்ணாமலையை தரிசித்து தவமிருந்து பேறு பெற்ற சித்தர்கள், மகான்கள், அருளாளர்கள் ஏராளம். அவர்களில்இடைக்காட்டு சித்தர்,அருணகிரிநாதர்,ஈசான்ய ஞானதேசிகர், குரு நமச்சிவாயர், குகை நமச்சிவாயர், ரமணமகரிஷி, தெய்வசிகாமணி தேசிகர், விருப்பாட்சிமுனிவர், சேஷாத்ரி சுவாமிகள், இசக்கிசாமியார், விசிறி சாமியார், அம்மணியம்மன், கணபதி சாஸ்திரி, சடைசாமிகள், தண்டபாணி சுவாமி, கண்ணாடி சாமியார், சடைச்சி அம்மாள், பத்ராசல சுவாமி, சைவ எல்லப்பநாவலர், பாணி பத்தர் உள்ளிட்டவர்கள் முக்கியமானவர்கள். 

கார்த்திகை ஜோதி மகத்துவம்! 

அண்ணாமலையார் தீபம் என்பது திருவிளக்கின் விஸ்வரூபம். தீபம் என்பது லட்சுமி தேவியின் வடிவத்தையும் (சுடர்), சரஸ்வதி தேவியின் பிம்பத்தையும் (ஒளி), பார்வதியின் சக்தியையும் (வெப்பம்) ஒன்றாக சேர்த்தது. திருவிளக்கு தீபச்சுடரில் மூன்று தேவிகளின் வடிவத்தை காணும்அனைவரும் நற்கதி அடைவர் என்பது ஆன்றோர் மொழி. எனவேதான் தீபம் என்றாலே விசேஷமாக கருதப்படுகிறது. கார்த்திகை தீபத்தன்று தீபமேற்றி வழிபட்டால், சிவனின் அருளுடன், மூன்று தேவியரின் அருளும் சேர்ந்து கிடைக்கும். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது. இதன் அடிப்பாகத்தில்பிரம்மா, தண்டு பாகத்தில்மகாவிஷ்ணு, நெய், எண்ணெய்நிறையுமிடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர். வேத புராணங்களும் கூட விளக்கேற்றுவதால் மிகச் சிறந்த பலன் கிடைக்கும் என்கின்றன. எத்தனை எத்தனையோ அரசர்கள்,கோயில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாகச் செய்துள்ளனர். எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபட உயர்வான பலன் தரும் என்றாலும், கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும்,இல்லத்தில் இருவேளைகளும் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும். தீபஜோதி வழிபாடானது இருள் போன்று நம்மை சூழ்ந்து நிற்கிற தடைகள், இடையூறுகளையும் ஏழரை சனி, அஷ்டமச்சனி போன்றவற்றால் ஏற்படக் கூடிய கெடுபலன்களையும் போக்கி ஒளிமயமான, வளமான வாழ்வை அருளும் என்பது நம்பிக்கை. சிவபெருமானே மலையாகி நிற்கும் அண்ணாமலையின் உச்சியில் மகாதீப வடிவில் காட்சி தரும் சிவபெருமானை வணங்கி வளமான வாழ்வு பெறுவோம்.



நேசத்துடன்
குபேரன் ஜோதிடர்

Agriculture and Planets




ஒரு விதை முளைப்பதற்கு நல்ல மண் வளம் (செவ்வாய்) தேவை.  நீர் வளம்(சந்திரன்) தேவை. நல்ல ஸ்டார்ச் (சூரிய ஒளி) தேவை. நல்ல பச்சயம் (புதன்) தேவை. நல்ல ஆரோக்யமான வளர்ச்சிக்கு கணிவான கவனிப்பு (குரு) தேவை.  நல்ல இனிமையான பழங்களை தருவதற்கு சுவையான நிலத்தடி நீர் (சுக்ரன்) தேவை.  உறுதியான ஸ்திரமான வளர்ச்சிக்கு அடிவேர் (சனி) ஆழமாக பரவி நிற்க வேண்டும். நன்கு அகண்டு பிரம்மாண்டமாய் வளர (ராகு) பலமும்  நோய் தாக்காமல் இருக்க பூச்சி கொல்லி மருந்தாக (கேது) பலமும் தேவை.  ஒரு செடி மரமாக வளரவே எல்லா கிரஹ சம்பந்தமும் வேண்டும் போது ஒரு மனிதன் ஆரோக்யமாக வளர எல்லா கிரஹமும் தேவைதானே...



நேசத்துடன்
குபேரன் ஜோதிடர்

Sunday, October 9, 2016

Madapuram Sri Guru Dhaksinamoorthy Swamigal

மகப்பேறுவுக்கும், குரு பரிகாரத்துக்கும் சிறந்த தலம்





திருச்சி அருகே வசித்த சிவசிதம்பரம் பிள்ளை மற்றும் மீனாம்பிகை தம்பதிகளுக்கு நீண்ட நாட்களாக குழந்தைகள் இல்லை. போகாத கோயில்களே இல்லை. ஒருநாள் இருவர் கனவிலும் தோன்றிய அண்ணாமலையார், தாமே உமக்கு மகனாக பிறப்பதாக கூறினார்.
இன்ப அதிர்ச்சியுடன் காலையில் எழுந்த தம்பதி, நேராக திருவண்ணாமலை சென்று அண்ணாமலையாரை வழிபட்டு திரும்பினர்.

இறைவாக்குப்படி பிறந்த ஆண் மகவுக்கு அருணாச்சலம் என்றே பெயர் சூட்டினர். குழந்தைமையை தாண்டிய ஞானம் பெற்றிருந்த அருணாச்சாலம் சிறு வயது முதலே தியானத்தில் திளைத்தார். பின்னாட்களில் குரு தட்சிணாமூர்த்தி சுவாமிகளாக அறியப்பட்டார்.

மனிதனாய் பிறந்து ஞானம் எய்தி இறையருள் பெற்று சீரஞ்சியாவோர், சித்தர் என்று அழைக்கப்படுவர். அவ்வகையில் திருவாரூர் நகரில் மடப்புரம் பகுதியில் ஓடம்போக்கி ஆற்றங்கரையில் 1835-ம் ஆண்டு ஜீவசமாதி அடைந்த குரு தட்சிணாமூர்த்தி ஸ்வாமிகளும் சித்தராக அறியப்படுகிறார்.

ஸ்வாமிகள் ஜீவசமாதி அடைந்த இடத்தில் சிவலிங்கம் ஸ்தாபிக்கப்பட்டு பூஜை நடைபெறுகிறது.

Guru Dhaksinamoorthy Jeeva Samadhi, Madapuram


வியாழன் கிரகமாக அறியப்படும் குரு பகவானின் பெயர்ச்சியின்போது ஏற்படும் மாற்றங்களுக்கும், ஜனன கால ஜாதகங்களில் குரு கிரகத்தின் தாக்கத்தால் பாதிக்கப்படுவோரும் இந்த ஜீவசமாதி மடத்துக்கு சென்று வழிபடுவது மிகவும் பலன்தரத்தக்கது ஆகும். 

குறிப்பாக, மகப்பேறு வேண்டி நிற்கும் தம்பதிகள், தவிர்க்க முடியாமல் செல்ல வேண்டிய புனிதத் தலமாகவும் திருவாரூர் மடப்புரம் குரு தட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஜீவசமாதி மடம் விளங்குகிறது. வியாழக்கிழமை நடைபெறும் பூஜைகளும், குழந்தை இல்லாதவர்களுக்கு மடிப்பிச்சை வழங்கும் பூஜையும் இங்கு சிறப்பு வாய்ந்தவையாகும்.


A detailed story and narration on our Guru Dhaksinamoorthy Swamigal, please listen to the video in this article.

 
Video source: youtube. | Copyright: Nandi TV | Oration by: Kudavasal Pulavar Thiru V. Ramamurthy    | Date:31.03.2015 | Place: தென்பழனி ஸ்ரீ சத்திய நாராயண கருவூர் சித்தர் ஆஸ்ரமம் - தஞ்சாவூர்

குருதட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஜீவசமாதி மடத்தின் தொடர்புக்கு: (0091) 04366–222732 மற்றும் (0091) 94434 36393


Om Guruve Namaha....


நேசத்துடன்
குபேரன் ஜோதிடர்

பைரவா... (Sri Bairvar)

பைரவரை வழிபட்டால் நிச்சயம் உடனே கைமேல் பலன்கள் கிடைக்கும். காலம், காலமாக உள்ள இந்த உண்மையை சமீபகாலமாகத்தான் மக்கள் முழுமையாக உணர்ந்து கொள்ளத் தொடங்கியுள்ளனர். பைரவர் என்றால் பக்தர்களின் பயத்தை நீக்குபவர் என்று பொருள். எல்லா கிரகங்களையும், நட்சத்திரங்களையும் கட்டுப்படுத்துபவர் இவர்தான். சிவபெருமானின் அம்சமாக பைரவர் கருதப்படுகிறார். 
Arulmigu Sri Kala Bairavar, Adiyamankottai (Temple website). Please also read: Image source


ஈசனின் மகனாகவும் புராணங்கள் இவரை குறிப்பிடுகின்றன. படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் செய்து கோடானு கோடி மக்களை இவர் காத்து வருகிறார். இதற்காக இவருக்கு திரிசூலம் ஆயுதமாக வழங்கப்பட்டுள்ளதாம். இதனால்தான் ``பைரவர் வழிபாடு கைமேல் பலன்'' என்ற பழமொழி ஏற்பட்டது. 

``பைரவா....'' என்று மனதுக்குள் நினைத்த பாத்திரத்தில் அவர் நம்முன் வந்து நிற்பார். அவருக்கு நாம் பூஜை செய்தாலும் சரி, செய்யாவிட்டாலும் சரி, கஷ்டமான நேரங்களில் நாம் மனதை ஒருமுகப்படுத்தி நினைத்தாலே போதும், பைரவர் ஓடோடி வந்து உதவுவார். பைரவர் பற்றற்ற நிலையில் நிர்வாணமாக, நீல நிற உடலமைப்புடன் இருப்பவர். 

எனவே எல்லாரும் அவரைத் தொட்டு வணங்கக் கூடாது. அவர் பாதங்களில் பூக்களைப் போட்டு வழிபடலாம். பைரவர் மொத்தம் 64 வடிவங்களில் மக்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அந்த 64 வடிவங்களில் கால பைரவர் தனித்துவம் கொண்டவராகக் கருதப்படுகிறார். 

கால பைரவருக்கு தனிக்கோவில் கட்டக் கூடாது என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. அதனால் சில தலங்களில் மட்டுமே கால பைரவ வழிபாடு உள்ளது. தமிழ்நாட்டில் தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் 9-ம் நூற்றாண்டில் அரசர் அதியமான் கட்டிய கால பைரவர் கோவில் உள்ளது.
அஷ்டமி நாட்களில் பைரவரை வணங்க உகந்த நாளாகும். 

சனீஸ்வரரின் குரு பைரவர் என்பதால், பைரவரை வணங்கினால், சனிபகவான் மகிழ்ந்து நமக்கு அதிக துன்பங்களைத் தரமாட்டார். எனவே நாம் சனிக்கிழமைகளில் பைரவரை வணங்கினால் சனி பகவானால் உண்டாகும் இன்னல்கள் எல்லாம் உடனே நீங்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகால நேரத்தில் பைரவரை வணங்க வேண்டும். 

அதனால் உடனே நன்மை உண்டாகும். பில்லி, சூனியம், ஏவல் அகலும், திருமணம் கைகூடும். 6 சனிக்கிழமைகளில் 6 எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் தடைப்பட்ட அனைத்து காரியங்களும் நிறைவேறும். தடைப்பட்ட திருமணம் கைகூடும். குடும்ப ஒற்றுமை நிலைக்கும்.

இவ்வளவு பெருமைகளையும் அருட்திறனும் கொண்டு விளங்கும் பைரவரை சிவாலயங்களிலும் தனி ஆலயங்களிலும் கண்டு வழிபடலாம்.

நேசத்துடன்
குபேரன் ஜோதிடர்

Tuesday, September 27, 2016

தம்பதிகளே கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்கள்...

ஆனந்தவேதம் - தாம்பத்தியம் !!!
ராதேக்ருஷ்ணா தாம்பத்தியம் ஒரு வரப்ரசாதம் !

உலகின் மிக உயர்ந்த ஒரு தெய்வானுக்ரஹம்
தாம்பத்யம் ! பகவானும்,தாயாரும் கூட  திவ்ய தம்பதிகளாகவே
காட்சி தருகின்றனர் ! தாம்பத்தியத்தினால்தான் உலகில் சந்ததி உண்டாகிறது !

ப்ரும்மசரியத்தைக் காட்டிலும், வானப்ரஸ்தத்தைக் காட்டிலும், சன்யாசத்தைக் காட்டிலும், க்ருஹஸ்த தர்மமே மிக உயர்ந்தது! 

தாம்பத்தியத்தில் தெய்வீகத்தை உணரவேண்டும்! தாம்பத்தியத்தின் லக்ஷியம் பரமானந்தமே! 
தாம்பத்தியத்தின் லக்ஷியம் தெய்வ தரிசனமே! 

தாம்பத்தியத்தை நல்லபடி நடத்தினால் வீட்டிலேயே தெய்வத்தைப் பார்க்கலாம் . .  

அதற்கு என்ன செய்ய வேண்டும் ? ? ?
அதற்கு விரோதமானவை என்ன ? ? ?

தம்பதிகளே கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்கள் . . . அவரவர் ப்ராரப்தத்திற்கு தகுந்தவாறே கணவனும், மனைவியும் அமைகின்றனர் ! 

ஆனால் உன்னதமான பக்தியினால் பூர்வ ஜன்ம கர்ம வினையை மாற்றி நிம்மதியான தாம்பத்தியத்தை அனுபவிக்க முடியும் ! 

எது எப்படியோ உனக்கென்று ஒரு வாழ்க்கையை பகவான் கொடுத்திருக்கிறான் ! அதை முதலில் புரிந்துகொள் !
உலகில் கல்யாணம் என்கின்ற ஒன்று நடக்காமல் பரிதவிப்பவர்கள் பலர் உண்டு !
கல்யாணம் ஆனபிறகும் தன் ஜோடியை இழந்து தவிப்பவர்கள்
பல கோடி உண்டு !

இருப்பதை ஜாக்கிரதையாக வைத்துக்கொள்ளவேண்டியது
மனித தர்மம் . . .

  • கணவனை மனைவி க்ருஷ்ணனின் ப்ரசாதமாக நினைக்க வேண்டும்! மனைவியை கணவன் க்ருஷ்ணனின் ப்ரசாதமாக
    ஏற்றுக்கொள்ள வேண்டும்!
  • கணவனிடத்தில் உள்ள உயர்ந்த குணங்களை மனைவி
    புரிந்துகொள்ள வேண்டும் ! மனைவியிடத்தில் உள்ள உயர்ந்த
    பண்புகளை கணவன் தெரிந்துகொள்ள வேண்டும் !
  • கணவனிடத்தில் உள்ள குறைகளை மனைவி தெரிந்துகொண்டு அதை மாற்ற விடா முயற்சி எடுக்கவேண்டும் ! மனைவியிடத்தில் உள்ள குறைகளை கணவன் புரிந்துகொண்டு அதிலிருந்து
    அவளை மீட்கவேண்டும் !
  • கணவன் மனைவியை அடுத்தவர் முன் அவமானப்படுத்தவே கூடாது ! மனைவி கணவனைப்பற்றி அடுத்தவரிடம் மறந்தும்
    கேவலமாகப் பேசவே கூடாது !
  • கணவன் குடும்பத்திற்கு வேண்டியதை சம்பாதித்துக் கொடுக்கவேண்டும்! மனைவி கணவனின் சம்பாத்யத்திற்குத் தகுந்தபடி குடும்பத்தை நடத்தவேண்டும் !
  • கணவனை மனைவி ஆத்மாவாக பார்க்கவேண்டும் ! மனைவியை கணவன் ஆத்மாவாக உணரவேண்டும் !
  • கணவனின் தர்ம காரியங்களுக்கு மனைவி என்றுமே
    உறுதுணையாக இருக்க வேண்டும் ! கணவன் என்றுமே
    மனைவியை தர்மகாரியங்களில் ஈடுபடுத்தவேண்டும் !
  • எந்த ஒரு நிலைமையிலும், கணவன் மனைவியை அடிமையாக நினைக்கவே கூடாது ! எந்த ஒரு அவசரத்திலும், மனைவி கணவனை கேவலமாக நினைக்கவே கூடாது !
  • கணவனிடத்தில் மனைவி எப்பொழுதும் உண்மையாகவே
    இருக்கவேண்டும் ! மனைவியிடத்தில் கணவன்
    எப்பொழுதும் ஒழுங்காக நடந்துகொள்ளவேண்டும் !
  • கணவனின் பலம், பலவீனம், தேவை,  ஆகியவற்றை மனைவி
    நன்றாக புரிந்துகொள்ளவேண்டும்! மனைவியின் மனம்,தவிப்பு,தேவைகள் ஆகியவற்றிற்கு கணவன்
    மரியாதை அளிக்கவேண்டும் !
  • மனைவியை கணவன் காமப்பொருளாக மட்டும் பார்க்காமல்
    அவள் சரீரத்தின் கஷ்ட நஷ்டங்களை புரிந்து நடந்து கொள்ளவேண்டும் ! கணவனை மனைவி தன் ஆசைகளை பூர்த்தி செய்யும் ஒரு இயந்திரமாகப் பார்க்காமல், அவனுடன் தோள் கொடுத்து நிற்கவேண்டும்!
  • மனைவியின் முட்டாள்தனங்களையோ, குறைகளையோ, உடல் அழகைப்பற்றியோ, தவறுகளையோ, கணவன் மறந்தும்
    அடுத்தவரிடம் வெளியிடக்கூடாது! கணவனின் அசட்டுத்தனங்களையோ, நஷ்டங்களையோ,கெட்ட குணங்களையோ, மனைவி ஒரு நாளும் மற்றவரிடம்
    கலந்து பேசவே கூடாது !
  • எந்த சமயத்திலும் கணவன் மனைவியை தள்ளி வைத்துவிடலாம்
    என்று தீர்மானிக்கவே கூடாது ! மனைவி எந்த நிலைமையிலும்
    கணவன் தனக்கு அவசியமில்லையென்றோ, விலகலாம் என்றோ யோசிக்கவே கூடாது !
  • ஒரு பொழுதுகூட மனைவி, இவனை கணவனாக அடைந்துவிட்டோமே என்று நினைக்கவே கூடாது ! ஒரு தடவை கூட,கணவன், இவளை விட நல்ல மனைவி கிடைத்திருந்தால்
    நன்றாக இருந்திருக்கும் என்று யோசிக்கவே கூடாது !
  • என்றும் மனைவி அடுத்தவரின் கணவரோடு தன் கணவனை
    ஒப்பிட்டு நினைக்கவே கூடாது ! என்றும் கணவன் மற்றவரின்
    மனைவியை, தன் மனைவியோடு ஒப்பிட்டு பார்க்கவே கூடாது !
  • கணவனின் குடும்பத்தை மனைவி தன் குடும்பமாக
    பாவித்து சேவை செய்யவேண்டும் ! மனைவியின் குடும்பத்தை
    கணவன் தன்னுடையவர்களாகக் கருதி மரியாதையுடன் நடத்தவேண்டும் !
  • மனைவியின் உடல்நலத்தில் கணவன் என்றுமே அக்கரை உடையவனாக இருக்கவேண்டும் ! கணவனின் உடல்நலத்தில் மனைவி எப்பொழுதும் அக்கரையுடன் இருந்து கவனித்துக் கொள்ளவேண்டும் !
  • மனைவியானவள் கணவன் சொல்வதை
    சரியாகப் புரிந்துகொண்டு, அதன்படி நடக்க வேண்டும்.
    கணவனானவன் மனைவி சொல்லும் காரியங்களில் யோசனை செய்து, தகுந்தபடி செயல்படவேண்டும்.
  • மனைவி கணவனுக்கு ஒரு உத்தமமான மந்திரியைப் போல்
    ஆலோசனை சொல்லவேண்டும் . கணவன் மனைவியை ஒரு தோழியாக, நலம் விரும்பியாக, குழந்தையாக பாவித்து
    அவளுக்கு நல்லவற்றை சொல்லவேண்டும் !
  •  என்றுமே மனைவி மலர்ச்சியான முகத்தோடு கணவனுக்கு பணிவிடை செய்யவேண்டும் ! என்றுமே கணவன் ஆனந்தமான
    வார்த்தைகளால் மனைவிக்கு அன்பைத் தரவேண்டும் !
  • கணவன் மனைவியின் உடல் தேவைகளை புரிந்துகொண்டு
    அதற்கேற்றபடி அவளுடன் கூடவேண்டும்! மனைவி கணவனின் சுகத்திற்குத் தகுந்தபடி, தன்னை தயார் செய்துகொண்டு
    ஆனந்தத்தைத் தர வேண்டும் !
  • கணவன், மனைவியின் குறைகளை பெரிதாக நினைக்காமல், அவளுடைய உத்தம குணங்களை அனுபவிக்கவேண்டும் !
    மனைவி, கணவனின் குற்றங்களை பெரிதுபடுத்தாமல், அவனுடைய நல்ல பழக்கவழக்கங்களை கொண்டாடவேண்டும் !
  • கணவன் கோபப்படுகின்ற சமயத்தில் மனைவி, நிதானமாக இருக்க வேண்டும் ! மனைவிக்கு கோபம் வருகின்ற சமயத்தில்
    கணவன் அவளை சாந்தப்படுத்தவேண்டும் !
  • கணவனின் தோல்விகளில் மனைவி தைரியம் தந்து,நம்பிக்கை தந்து, அவன் வெற்றியடைய உறுதுணையாக இருக்கவேண்டும் !
    மனைவியின் அவமானங்களில் கணவன், அவளுக்கு சமாதானம் சொல்லி,அவளுடைய துக்கத்தை அழிக்கவேண்டும் !
  • கணவனின் சம்பாத்தியத்தில் குடும்பத்தை நடத்தி,அதே சமயத்தில் சொத்து சேர்க்கவும் மனைவி சிரத்தையுடன் இருக்கவேண்டும் ! மனைவியின் நியாயமான தேவைகளை
    பூர்த்தி செய்து,ஆடம்பர செலவினங்களைக் கணவன் கட்டுப்படுத்தவேண்டும் !
  • கணவனின் அழகிலோ,குணத்திலோ, அறிவிலோ, மனைவி ஒரு நாளும் அகம்பாவம் கொள்ளவே கூடாது! மனைவியின் அழகிலோ,புத்திசாதுர்யத்திலோ, நல்ல குணங்களிலோ, கணவன் எந்த ஒரு சமயத்திலும் கர்வப்படக்கூடாது !  

இதில் சொன்னதை கடைபிடித்துப் பாருங்கள் ! உங்கள் தாம்பத்தியமும் சிறக்கும் !

நேசத்துடன்
குபேரன் ஜோதிடர்

பாபநாசம் சிவஸ்தலம்

பாபநாசர் ருத்ரசாய் லிங்கம் (Pic. Source)
அம்மன் உலகம்மை (Pic. Source)




பொதிகை மலையின் உச்சியில் உருவாகும் தாமிரபரணியாறு சமதளத்தை அடையும் இடமே பாபநாசம் ஆகும். திருநெல்வேலியில் இருந்து அம்பாசமுத்திரம் வழியாக 60 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இத்திருத்தலம். நெல்லை, அம்பாசமுத்திரம், தென்காசி ஆகிய இடங்களில் இருந்து பேருந்து வசதி உள்ளது.

சிவபெருமானுடைய திருக்கல்யாணத்தைத் தரிசிக்க தேவர்கள், முனிவர்கள் ஆகியோர் கயிலாயம் சென்றதால் கூட்டத்தைத் தாங்கமாட்டாது வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. அதைச் சமன் செய்யும் பொருட்டு அகத்திய முனிவரை அழைத்து தென்திசைக்கு செல்லும்படி பணிக்கிறார் சிவபெருமான்.

பகவானின் கட்டளையை ஏற்று தென் திசையிலுள்ள பொதிய மலையில் எழுந்தருளினார் அகத்தியர். அவருக்கும் திருக்கல்யாணக் கோலத்தில் காட்சியளிக்க விரும்பிய சிவபெருமான், சக்தி சமேதராக அம்மை-அப்பனாக காட்சியளித்த இடமே பாபநாசமாகும்.
அகத்தியர் (Pic. Source)


பாபநாசத்துக்கு மேற்கே ஒரு மைல் தூரத்தில் உள்ள நீர்வீழ்ச்சியும் இதனால் 'கல்யாண தீர்த்தம்' என்று பெயர் பெற்றது. இங்கு அகத்திய முனிவருக்கு தனிக்கோயில் உள்ளது. அகத்தியர் கோயில் உள்ள இடம் பழைய பாவநாசம் என்றழைக்கப்படுகிறது. மலையுச்சியில் உற்பத்தியாகும் தாமிரபரணி சமபூமியில் இறங்குமிடமே பழைய பாவநாசமாகும். 

சூரிய தலம்

அகத்திய முனிவரின் முதல் சீடர் உரோமச முனிவர் பிறவிப் பெரும் பயன் அடைவதைப் பற்றி அகத்தியரிடம் கேட்க, அவர் பாபநாசம் தொடங்கி தாமிரபரணி ஆறு செல்லும் பாதையில் மலர்கள் ஒதுங்கும் இடங்களில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபடுமாறு கூறினார். அவ்வாறு பூக்கள் சேர்ந்த இடங்களில் உள்ள நவ கைலாயத் தலங்களை பிரதிஷ்டை செய்தார் உரோமச முனிவர். இவ்வாறு திருநெல்வேலியைச் சுற்றி நவக்கிரக தலங்கள் அமையப்பெற்றன. அவற்றில் பாபநாசம் சூரியனுக்கு உரிய தலமாக கருதப்படுகிறது.

ஐதீக அம்சங்கள்

கிரக ரீதியாகவோ, ஜாதக ரீதியாகவோ குழந்தைகளுக்கு தோஷம் இருந்தால், அவர்களை இறைவனுக்கு தத்து கொடுத்து வாங்க உகந்த இடம்.
உலகம்மைக்கு நடைபெறும் அபிஷேக தீர்த்தத்தை பருகினால் திருமண, புத்திர பாக்கியங்கள் கிடைப்பதோடு தீர்க்க சுமங்கலியாக வாழலாம் என்பது ஐதீகம்.

 

பாபங்கள் கரையுமிடம்

அக்காலத்தில் ஒரு தாய் வயிற்றில் பிறந்த சிறுவனும், சிறுமியும் சந்தர்ப்ப சூழலால் குடும்பத்தை பிரிந்து தனியாக வாழ்ந்தார்களாம். காலங்கள் உருண்டோட, மற்றொரு சந்தர்ப்பத்தில் இருவரும் சந்தித்து, அண்ணன்-தங்கை என்பதை அறியாமலேயே திருமணம் செய்து கொள்கின்றனர். 

பின்னாட்களில் ஒரு நாள் இந்த உண்மை தெரியவரும்போது இருவரும் மிகவும் மனம் வெதும்பினர். அப்போது, பெரியவர்கள் சிலர், ‘நீங்கள் இருவரும் கருப்பு உடையணிந்து எல்லா புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடுங்கள். எப்போது உங்கள் கருப்பு ஆடை, வெண்மையாக மாறுகிறதோ அப்போது உங்கள் பாபம் நீங்கப் பெற்றது’ என்று பொருள் எனக் கூறி அனுப்பி வைக்கின்றனர்.

எல்லா நதியிலும் நீராடிவிட்டு கடைசியாக பாபநாசம் கோயில் முன்நின்று இருவரும் நீராட ஆடை வெண்மையாய் மாறியதாம்! ஆகவேதான், இந்நதி பாபநாசம் எனும் பெயர்பெற்றதாம் என்பது வரலாறு. கலியுக வாழ்வில் தெரிந்தும் தெரியாமலும் பல்வேறு பாவச் செயல்களுக்கு ஆட்படும் நாம், இப்புண்ணிய தலம் சென்று பாபவிநாசகரை வழிபட்டு பாபநாசம் புண்ணிய நதியில் மனச்சுத்தியுடன் புனிதநீராடி பாபங்கள் கரையப்பெறுவோமாக.

நேசத்துடன்
குபேரன் ஜோதிடர்
---------------------------

ஆலய முகவரி

அருள்மிகு பாவநாசர் திருக்கோயில்
பாபநாசம்
வி.கே.புரம் அஞ்சல்
அம்பாசமுத்திரம் வட்டம்
திருநெல்வேலி மாவட்டம்
627425
போன்: 04634 223268
கோயில் திறப்பு:
காலை 6.30 முதல் பகல் 12 மணி
மாலை 4.30 முதல் இரவு 8 மணி

சௌமிய தாமோதர பெருமாளின் மகிமை (வில்லிவாக்கம், சென்னை)

வடமொழியில் தாமோ என்றால் கயிறு. உதரம் என்றால் வயிறு. ஒருதாய் வயிற்றில் பிறந்தவர்களை சகோதரர்கள் (சகோ+உதரம்) என்று அழைப்பர்.
இங்கு, குழந்தை பாலகனாய் தவழ்ந்த பெருமாள், குழந்தைத்தனத்துக்கே உரிய குறும்புத்தனங்களை செய்ததால், அவரது தாய் பெருமாளின் வயிற்றில் கயிற்றை கட்டி ஓரிடத்தில் அமரவைத்தாராம்.

ஸ்ரீ அமிர்தவல்லி நாயகா சமேத ஸ்ரீ சௌமிய தாமோதர பெருமாள் Temple link


அச்சமயம் பார்த்து உறவினர்கள் வீட்டுக்கு வர, பாலகனை கயிற்றில் கட்டி வைத்ததை அவர்கள் எவ்வாறு கருதுவார்களோ என பதறினாராம் தாய். இதையறிந்த பெருமாள், அக்கயிறை, பூக்கயிறாய் மாற்றி தாயின் மனத்தாங்கலை போக்கினார்.

இதனால் பெரும் மகிழ்வுற்ற தாய், அன்பு, அறிவு, அழகும் கொண்டு தனித்திறனுடன் மிளிர்வாய் என பெருமாளை ஆசிர்வதிக்கிறார். 

இத்திருத்தலத்துக்கு வந்து பெருமாளை சேவிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் அவ்வண்ணமே அன்பும், அறிவும், அழகும், தனித்திறன்களும் கைகூடும் வகையில் பெருமாள் அருள்பாலிக்கிறார்.

குழந்தைபேறை எதிர்நோக்கி காத்திருக்கும் மகளிரும், கருவுற்றிருக்கும் தாய்மார்களும் இங்கு வந்த சௌமிய தாமோதர பெருமாளை சேவித்தால் அத்தகைய சிறப்பும், ஆயகலைகளில் தனித்திறனும் பொருந்திய குழந்தை பிறக்கும் என்பது நிதர்சனமான உண்மையாகும்.

தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும் வேண்டிய அருட்கடாட்சத்தை அருளும் பரிகாரஸ்தலமாக சௌமிய தாமோதர பெருமாள் திருக்கோயில் விளங்குகிறது.

நேசத்துடன்
குபேரன் ஜோதிடர்

Thursday, September 22, 2016

Chandra Astama (சந்திராஷ்டமத்தின் சூட்சமம்!)

சந்திராஷ்டமம் என்றால் சந்திரன் அலைகள் நமது மனதிற்க்கு கிடைக்காத பலவீனமான நாள் என பொருள்படும்.



நமது ஜென்மத்தில் அமையும் சந்திரனின் இடத்தில் இருந்து எட்டாவது இராசியில் (அஷ்டமம்) சந்திரன் வரும்போது நமக்கு சந்திரனின் கதிர்கள் கிடைப்பது மிகவும் குறைவாகவோ அல்லது சந்திரனின் நிலையினை அனுசரித்து இல்லாமலோ கூட போகிறது. 

அஷ்டமம் எனும் மறைவிடத்தில் சந்திரன் வரும்போது, அந்த அமைப்பு, சந்திரனின் கதிர்கள் இன்னும் கூட துல்லியமாக நமக்கு கிடைப்பதனை தடை செய்யும் அமைப்பாக உள்ளது. குறிப்பாக, நமது ஜென்ம நட்சத்திரத்தில் இருந்து பதினேழாவது நட்சத்திரமே மிகவும் பலவீனமான நட்சத்திரமாகும்... இந்த நட்சத்திரத்தை சந்திரன் கடக்கும்போது சந்திராஷ்டமம் உச்சத்தில் இருக்கும்.

இத்தகைய நாட்களில் நாம் எடுக்கும் புதிய கருத்துக்கள் மற்றும் முடிவுகளை சில நாள்கள் கழித்து எண்ணும்போது நாம் வருத்தப்படும்படி மாறுவதை உணர்வோம். ஆகவே சந்திராஷ்டம தினத்தில் வாழ்வியல் முடிவுகள் எடுப்பதை தவிர்ப்போம்.

இந்த உண்மையை அறிந்து கொண்டால் சந்திராஷ்டமத்தைக் கண்டு அஞ்ச வேண்டிய அவசியமில்லை. 

எனினும், நமது பலவீனமே பலத்தை காட்டும் முகக்கண்ணாடியாக அமையும். ஆகையால், இத்தகைய சந்திராஷ்டம தினத்தில் எதைச் செய்யக்கூடாது என்பதை அறிந்த நாம், இனி என்ன செய்யலாம் என்பதை அடுத்த பதிவில் அறிவோம்...

நேசத்துடன்
குபேரன் ஜோதிடர்
லஷ்மி குபேரன் ஜோதிட ஆராய்ச்சி மையம்

Tuesday, September 13, 2016

Navagrahas and Diya (அகல் விளக்கின் நவகிரஹ தத்துவம்)

கோயில்களிலும் ,வீடுகளிலும் நாம் அகல் விளக்கு வைத்து வழிபடுகிறோம்.


இதன் அர்த்தம் தெரிந்து கொள்வோம்.
1). அகல் விளக்கு = சூரியன் ஆகும்
2.) நெய்/எண்ணெய்-திரவம் = சந்திரன்
3.) திரி = புதன்
4). அதில் எரியும் ஜ்வாலை =செவ்வாய்
5). இந்த ஜ்வாலையின் நிழல் கீழே = ராகு
6). ஜ்வாலையில் உள்ள மஞ்சள் நிறம் = குரு
7). ஜ்வாலையில் அடியில் அணைந்தவுடன் இருக்கும் கரி =சனி
8). வெளிச்சம் பரவுகிறது - இதுஞானம் = கேது
9). திரி எரிய எரிய குறைந்துகொண்டே வருவது = சுக்கிரன் (ஆசை); 

அதாவது ஆசையை குறைத்துக்கொண்டால் சுகம் என அர்த்தம்
ஆசைகள் நம்மை அழிக்கிறது; 
Lamp (Source)


மோட்சம் கிடைக்காமல் மீண்டும் மீண்டும் கர்மா நம்மை மனிதப்பிறவியாக ஜனனம் எடுக்கச்செய்கிறது....

இதுவே அகல் தீபம் நமக்கு உணர்த்தும் தத்துவம்

நற்பவி நற்பவி நற்பவி

நேசத்துடன்
குபேரன் ஜோதிடர்

Monday, September 12, 2016

Pithru Tharpanam on Mahalaya Amavasya

நமது மூதாதையர்களின் அருளாசியே நம்மை காக்கும் கவசங்களாகும்.
ஒருவன் எந்த ஒரு செல்வத்தை இழந்தாலும், வறுமையின் எல்லையில் நின்று வாழ்வை நொந்தாலும், அவனது முன்னோர்களான பித்ருக்களின் ஆசிர்வாதம் மட்டும் இருந்தாலே போதும்.



கடக்க முடியாத காட்டாற்று வெள்ளத்திலும் கிடைக்கும் மரக்கலன்போல பித்ருக்களின் ஆசி அமையும். 

எனவேதான் பித்ருக்களுக்கு தர்ப்பணம் இடுவது என்பது நம்மை நாமே காத்துக்கொள்வதற்காக நாம் அணிந்து கொள்ளும் கவசத்துக்கு ஒப்பாகும்.
வரும் மஹாளய அமாவாசையை முன்னிட்டு வரும் 16-ம் தேதி பிரதமை திதியில் இருந்தே பித்ருக்களுக்கு தர்ப்பணம் அளிக்கத் தொடங்கலாம்.
ஒவ்வொரு திதியிலும் அளிக்கப்படும் பித்ரு தர்ப்பணத்தால் எவ்வகை பலன் கிட்டும் என்பது யஜூர் வேதத்தில் விளக்கப்பட்டுள்ளது. (யஜூர் வேத ஆபஸ்தம்ப தர்ப்பணம்)

பிரதமை - செல்வம் பெருகும் (தனலாபம்)
துவிதியை - வாரிசு வளர்ச்சி (வம்ச விருத்தி)
திருதியை - திருப்திகரமான இல்வாழ்க்கை (வரன்) அமையும்
சதுர்த்தி - பகை விலகும் (எதிரிகள் தொல்லை நீங்கும்)
பஞ்சமி - விரும்பிய பொருள் சேரும் (ஸம்பத்து விருத்தி)
சஷ்டி - தெய்வீகத் தன்மை ஓங்கும் (மற்றவர் மதிப்பர்)
சப்தமி - மேலுலகோர் ஆசி
அஷ்டமி - நல்லறிவு வளரும்
நவமி - ஏழு பிறவிக்கும் நல்ல வாழ்க்கைத் துணை
தசமி - தடைகள் நீங்கி விருப்பங்கள் நிறைவேறும்
ஏகாதசி - வேதவித்யை, கல்வி, கலைகளில் சிறக்கலாம்
துவாதசி - தங்கம், வைர ஆபரணங்கள் சேரும்
திரியோதசி - நல்ல குழந்தைகள், கால்நடைச் செல்வம், நீண்ட ஆயுள் கிட்டும்
சதுர்த்தசி - முழுமையான இல்லறம் (கணவன் மனைவி ஒற்றுமை)
அன்பர்கள் அனைவரும் பித்ருக்களை பூஜித்து பிறவிக் கடலில் துன்பமின்றி பயணிக்க வேண்டுகின்றேன்.

மஹாளய அமாவாசை


எமதர்மராஜன் சென்று அவர் நம் முன்னோர்களை அழைத்து மஹாளய பட்சம் ஆரம்பிக்கும் நாளன்று நம் முன்னோர்களை அவரவர்கள் விருப்பமான இடத்திற்கு சென்று வரும்படி அனுமதிப்பாராம்.

நம் முன்னோர்களுக்கு விருப்பமான இடம் நம் இல்லம் தானே, எனவே அவர்கள் மஹாள்ய பட்சமான பதினைந்து நாட்களும் முன்னோர்கள் நம் இல்லத்தில் வந்திருப்பதாக நம்பிக்கை.

இந்த பதினைந்து நாட்களும் நம் வசிப்பிடத்தை சுத்தமாக வைத்திருந்து நம் முன்னோர்களை வணங்கி வந்தால் நம் வாழ்க்கை விருத்தியடைவது உறுதி.

எந்த திதியில் என்ன பலன்


மகாளய பட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதன் பலன்கள் தரப்பட்டுள்ளன.

  • முதல்நாள் - பிரதமை - பணம் சேரும்
  • இரண்டாம் நாள் - துவிதியை - ஒழுக்கமான குழந்தைகள் பிறத்தல்
  • மூன்றாம் நாள் - திரிதியை - நினைத்தது நிறைவேறுதல்
  • நான்காம் நாள் - சதுர்த்தி - பகைவர்களிடமிருந்து தப்பித்தல்
  • ஐந்தாம் நாள் - பஞ்சமி - செல்வம் சேரும் நியாயமான சொத்துகள் கிடைக்கும். வீடு, நிலம் முதலான சொத்து வாங்குதல்
  • ஆறாம் நாள் - சஷ்டி - புகழ் கிடைத்தல்
  • ஏழாம் நாள் - சப்தமி - சிறந்த பதவிகளை அடைதல் உத்தியோகத்தில் தலைமைப் பதவி கிடைக்கும், தடை பட்ட பதவி உயர்வு கிடைக்கும்.
  • எட்டாம் நாள் - அஷ்டமி - சமயோசித புத்தி, அறிவாற்றல் கிடைத்தல்
  • ஒன்பதாம் நாள் நவமி - திருமண தடை நீங்கும். சிறந்த வாழ்க்கைத்துணை, குடும்பத்திற்கேற்ற மருமகள் அமைதல், பேத்தி, புத்திசாலியான பெண் குழந்தைகள் பிறத்தல். குடும்ப ஒற்றுமை சிறப்படையும்.
  • பத்தாம் நாள் - தசமி - நீண்ட நாள் ஆசை நிறைவேறுதல், எல்லா விருப்பங்களும் நிறைவேறும்.
  • பதினொன்றாம் நாள் - ஏகாதசி - படிப்பு, விளையாட்டு, கலையில் வளர்ச்சி
  • பன்னிரெண்டாம் நாள் - துவாதசி - தங்கநகை சேர்தல், விலை உயர்ந்த ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும்.
  • பதின்மூன்றாம் நாள் - திரயோதசி - பசுக்கள், விவசாய அபிவிருத்தி, தீர்க்காயுள், ஆரோக்கியம், சுதந்திரமான வேலை அல்லது தொழில்
  • பதினான்காம் நாள் - சதுர்த்தசி - ஆயுள் விருத்தியாகும், பாவம் நீங்குதல், எதிர்கால தலைமுறைக்கு நன்மை.
  • பதினைந்தாம் நாள் - மகாளய அமாவாசை - முன் சொன்ன அத்தனை பலன்களும் நம்மைச் சேர முன்னோர் ஆசி வழங்குதல்.

எனவே, மகாளய பட்சம் என்னும் அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் இருந்தால் லாபம் நமக்கு மட்டுமல்ல! நம் தலைமுறைக்கும் சேர்த்து தான்.
மகாளய பட்சம் தர்ப்பணம் செய்வதால் நமது முன்னோர்களின் ஆசியுடன் நமது வாழ்க்கையும் நமது குழந்தைகளின் வாழ்க்கையும் உயர்வு பெறும் என்பது நிச்சயம்.

Om Guruve Namaha...


நேசத்துடன்
குபேரன் ஜோதிடர்

பித்ரு தோஷம் என்றால் என்ன?

பித்ருக்கள் என்ற சொல் இறந்து போன நமது முன்னோர்களைக் குறிக்கும். தந்தை வழியில் மற்றும் தாய் வழியில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது பித்ருக்கள் ஆவர். தந்தை வழியில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது பிதுர் வழி பித்ருக்கள் எனவும், தாய் வழியில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது மாதுர் வழி பித்ருக்கள் எனவும் அழைக்கப்படுவர். மொத்தத்தில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது பித்ருக்களே ஆவர்.

நம்முடைய இந்த உடல், உயிர் மற்றும் பொருள் அனைத்தும் நம் பித்ருக்கள் அளித்ததே. நம்முடன் வாழ்ந்த நம்முடைய முன்னோர்களான நமது பித்ருக்கள் நமக்கு அளித்த இந்த உடல், உயிர் மற்றும் பொருள் இவற்றை நாம் அனுபவித்து வருகிறோம். அவ்வாறு நாம் அனுபவிக்கும் போது நமது பித்ருக்கள் செய்த பாவம் மற்றும் புண்ணிய பலனையையும் சேர்த்தே அனுபவித்து வருகிறோம். நம்முடன் வாழ்ந்து மறைந்த நமது பித்ருக்கள் எப்போதும் நமது நலனையே விரும்புபவர்கள்.

நமது பித்ருக்கள் நம்முடன் வாழும் போது அவர்களை பேணிக் காத்து பசியினை போக்க வேண்டும். அதே போல் அவர்கள் மறைந்த பின்பும் அவர்களின் பசியைப் போக்க வேண்டும். இதுவே பிதுர்கடன் எனப்படும். இதையே திருக்குறள் தந்த திருவள்ளுவர் நீத்தார் கடன் என்ற அதிகாரத்தில் தெளிவாக எடுத்துரைக்கிறார். நமது பித்ருக்களுக்கு நாம் செய்யும் வழிபாடு ஆவி வழிபாடு ஆகும். இதுவே நம் பண்டைய தமிழர்களின் முக்கிய வழிபாடு ஆகும். இந்த வழிபாடு தற்போது மறைந்து விட்டது.

ஆவிகள் என்றவுடன் நம்மில் சிலர் பயந்து போய் இருக்கலாம். பயம் கொள்ள தேவையில்லை. நமது முன்னோர்களின் ஆவிகள் மறுபிறப்பு எய்தும் வரை நமது நலனில் அக்கறை கொண்டவையாகவே இருக்கும். இத்தைகய நம்முடை முன்னோர்களின் ஆவிகளுக்கு நாம் செய்யும் வழிபாடு தான் பிதுர்கடன் எனப்படுகிறது. நமது பித்ருக்கள் தான் கடவுளரின் அருளை நமக்கு வெகு எளிதாக பெற்றுத் தரும் வல்லமை பெற்றவர்கள். நமது வேண்டுதல்களை எளிதில் நிறைவேற்றித் தருபவர்கள் நமது பித்ருக்களே.

எனவே நமது நலனில் அக்கறை கொண்ட நமது பித்ருக்களை நாம் வழிபாடு செய்து அவர்களின் பசியினைப் போக்க வேண்டும். அவ்வாறு பசியினை போக்காமல் விட்டுவிட்டால் நமது பித்ருக்கள் பசியினால் வாடுவர். அவ்வாறு பசியினால் வாடும் பித்ருக்கள் ஒவ்வொரு அமாவாசையன்றும் நமது இல்லங்களில் உள்ள நீர் நிலைகளில் வந்து தங்குவர். அமாவாசையன்று நாம் பித்ருக்களுக்கு வழிபாடு செய்து அவர்களின் பசியை போக்காமலோ இருந்தால் நமது பித்ருக்கள் வருத்தத்துடன் பிதுர்லோகம் செல்வர்.

வருத்தத்துடன் செல்லும் பித்ருக்களில் சிலர் கோபம் கொள்வர். அத்தகைய பித்ருக்கள் கோபத்தினால் நமக்கு சாபமும் அளிப்பர். இந்த சாபம் தெய்வத்தின் அருளையே தடை செய்யும் வலிமை கொண்டது. கடவுளின் வரங்களையே தடை செய்யும் ஆற்றல் கொண்டவர்கள் நமது பித்ருக்கள். எனவே நாம் அவர்களின் கோபத்திற்கோ அல்லது சாபத்திற்கோ ஆளாகாமல் இருப்பது நல்லது. மேலும் நமது பித்ருக்களின் பசியைப் போக்கி அவர்களை அமைதி படுத்த வேண்டும்.

பித்ரு தோஷம் என்பது ஜாதகத்தில் உள்ள தோஷங்களிலேயே மிகவும் வலிமையானது. இந்த தோஷம் உள்ள உள்ளவர்களின் வாழ்க்கையில் படிப்பு, வேலை, திருமணம், மண வாழ்க்கை மற்றும் குழந்தை இவற்றில் ஏதேனும் ஒன்றில் தீராத பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது. பிதுர் தோஷம் நீங்காமல் மற்ற பரிகாரங்கள் செய்தாலும் பரிகாரங்கள் பலன் தருவதில்லை. எத்தகைய மந்திர செபங்களும் சித்தியடைவதில்லை. இதற்கு காரணம் நமது பித்ருக்களின் சாபம் தான். எனவே முதலில் பிதுர் தோஷத்தினைப் போக்கிட வேண்டும்.

பிதுர் தோஷம் உள்ளவர்களின் ஜாதகம் பிதுர் தோஷம் நீங்கிய பின்பு தான் வேலையே செய்ய ஆரம்பிக்கும். இந்த தோஷம் இருக்கும் வரையில் ஜாதகத்தில் உள்ள எந்த ஒரு யோகமும் தன்னுடைய பலனை தராது. மாறாக பிதுர் தோஷம் உள்ளவர்களின் வாழ்க்கையில் துன்பமே மிஞ்சும். பிதுர் தோஷம் உள்ளவர்கள் முதலில் அதனை போக்கிட வேண்டும். அவ்வாறு நீங்கிய பின்னரே அவர்களின் வாழ்க்கையில் எந்த ஒரு முன்னேற்றமும் வரும் 

பிதுர் தோஷமும் பரிகாரங்களும்

ஒருவரின் ஜாதகத்தில் 1, 3, 5, 7, 9, 11 ஆகிய இடங்களில் பாம்பு கிரகங்களான ராகு, கேது இருந்தாலும், சூரிய சந்திரர்கள் ராகு அல்லது கேது கிரகங்களுடன் சேர்ந்திருந்தாலும் பித்ரு தோஷம் உள்ள ஜாதகமாக கருதப்படும். நிழல் கிரகங்களான் ராகுவும், கேதுவும் நமது முன்வினைகளை பிரதிபலிப்பவை. மேலும் ராகு தந்தை வழி பாட்டனாரைக் குறிக்கும் கிரகம் ஆகும். அதே போல் கேது தாய் வழி பாட்டனாரைக் குறிக்கும கிரகம் ஆகும். இந்த இரண்டு கிரகங்களும், ஒருவர் செய்த முன்வினை கணக்கினை தெளிவாக காட்டுபவை ஆகும்.


ராகுவும், கேதுவும் அவரவர் முன்னோர்கள் செய்த பாவ-புண்ணிய கணக்கினை தெளிவாக காட்டுவதோடு மட்டுமல்லாமல் அந்த பாவங்களை தீர்க்க முடியுமா அல்லது முடியாதா என்பதையும் காட்டும் கிரகங்கள் ஆகும். ராகு மற்றும் கேது ஆகிய இரண்டு பாம்பு கிரகங்களே கிரகங்களில் மிகவும் வலிமையானவை. ஆனால் தற்கால சோதிடமோ ராகு மற்றும் கேது ஆகியவற்றிற்கு பலமில்லை என்று கூறுகின்றன். ராகுவை ஞான-போக காரகன் என்றும் கேதுவை மோட்ச காரகன் என்றும் அழைப்பர்.

Ketu
Rahu
முன்பு குறிப்பிட்டவாறு ஜாதகத்தில் ராகு, கேது அமைந்திருந்தால் ஜாதகரின் படிப்பு, வேலை, திருமணம், மண வாழ்க்கை, குழந்தைப்பேறு இவற்றில் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கின்றன. இந்த பிரச்சனைகளுக்கான காரணம் நாம் முற்பிறவிகளில் செய்த பாவங்களே. ஒருவர் தனது முற்பிறவிகளில் அவர் செய்த பாவங்களே அவருடைய இப்பிறவியில் ஜாதகத்தில் தோஷங்களாகவும், முற்பிறவிகளில் செய்த புண்ணியங்களே அவரது ஜாதகத்தில் யோகங்களாகவும் அமைகின்றன.

அதுமட்டுமல்லாமல் நமது முன்னோர்களிடமிருந்து இந்த உடல், உயிர் மற்றும் பொருள் இவற்றை பெறுவதால் நம் முன்னோர்களின் பாவ-புண்ணியங்களின் ஒரு குறிப்பிட்ட பகுதியை நாம் அனுபவித்தே ஆக வேண்டும் என்பது விதி ஆகும்.

நாம் நமது முன்னோர்களின் பாவத்தினை அனுபவித்தால் நம் முன்னோர்களின் புண்ணியத்தினையும் அனுபவித்தே ஆக வேண்டும். நம் முன்னோர்களின் பாவமும் நம்முடைய பாவமும் சேர்ந்து தலைமுறை தலைமுறைகளாக நம்மை பின்தொடர்கின்றன என்பதே உண்மை ஆகும்.
அவ்வாறு நாம் பாவங்களை அனுபவிக்கும் காலத்தில் ஒரு சில நன்மைகளும் நமக்கு விளையும். அவை நம்முடைய புண்ணியம் மற்றும் நம் முன்னோர்கள் செய்த புண்ணியத்தினால் விளையும் நன்மைகள் ஆகும். நாம் ஒவ்வொருவரும் நம்முடைய முன்னோர்களின் பாவத்தினையும், நம்முடைய பாவத்தினையும் அழித்து நம் முன்னோர்கள் மற்றும் நம்முடைய ஆன்மாக்கள் நற்கதி அடையுமாறு செய்தல் வேண்டும். நமது பித்ருக்களின் ஆன்மா நற்கதி அடைய தக்க பரிகாரங்களை மேற்கொள்ளல் வேண்டும்.
பித்ரு தோஷம் எதனால் வருகிறது?
பித்ரு தோஷம் நாம் நம் முற்பிறவிகளில் செய்த பாவங்களினாலும், நமது முன்னோர்கள் செய்த பாவங்களினாலும் ஏற்படுகிறது.

ஒரு ஆண் தன் முற்பிறவியில் தனது மனைவியை கவனிக்காமல் வேறு பெண்ணின் மோகம் கொண்டு அலைந்ததால் இப்பிறவியில் தனது மனைவியால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.
ஒரு பெண் தன் முற்பிறவியில் தனது கணவனை கவனிக்காமல் வேறு ஆணின் மோகம் கொண்டு அலைந்ததால் இப்பிறவியில் தனது கணவனால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.

ஒருவர் தன் முற்பிறவியில் தனது பெற்றோர்களை கவனிக்காமல் இருந்தால் பெற்றோர்கள் இடும் சாபம் மறுபிறவியில் பித்ரு தோஷமாக மாறுகிறது.
ஒருவர் தன் முற்பிறவியில் தனது சகோதர / சகோதரிகளுக்கு துன்பம் இழைத்திருந்தால் இப்பிறவியில் தனது சகோதர / சகோதரிகளால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.

ஒருவர் தன் முற்பிறவியில் கருச்சிதைவு செய்திருந்தால் இப்பிறவியில் மகப்பேறு இல்லாமல் சந்ததி விருத்தியடையாமல் போகும் நிலையும் அமைகிறது.

பிதுர் தோஷம் தன்னையும், தன்னைச் சேர்ந்த குடும்பத்தையும், குழந்தைகளையும் பாதிக்கும்.நோய்கள், தேவையற்ற வம்புகள், கணவன் மனைவி பிரச்னைகளை உருவாக்கும்.குறைந்தது மூன்று தலைமுறைகள் பாதிப்படையும்.

மகாளய பட்சம் என்று ஒரு காலம் தமிழ்வருடத்தில்ஆண்டுக்கு ஒருமுறை வரும்.புரட்டாசிமாதத்தில் வரும் அமாவசையிலிருந்து முன்னதாக பிரதமை ஆரம்பித்து வரும் பதினைந்து நாட்களாகும்.இந்த 15 நாட்களில் பித்ருக்கள் பூமிக்கு வந்து தனது சந்ததியினருக்குஆசி வழங்குவார்கள்.அந்த 15 நாட்களில் நாம் பித்ரு தர்ப்பணம் செய்தால் அந்த தர்ப்பணம் நேரடியாக நமது பித்ருக்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள்.பட்சம் முழுவதும் செய்ய முடியாதவர்கள் மகாபரணியிலும் அமாவசையன்றும் செய்தால் கூட போதும்.

ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை நாட்களிலும் பிதுர்களுக்கு செய்யும் தர்ப்பணம் மற்றும் தானங்கள் நமது அனைத்து தோஷங்களையும் நீக்கும்.மிகக்கடுமையான பிதுர் தோஷம் உடையவர்கள் இராமேஸ்வரம் சென்று திலா ஹோமம் செய்வது அவசியம்.இந்த திலா ஹோமம் வேதம் அறிந்த பண்டிதர்களால்தான் செய்ய வேண்டும்.திலா ஹோமம் எனப்படுவது நெல்லையும் எள்ளையும் கலந்து செய்யப்படும் ஹோமம் ஆகும்.திலம் என்றால் எள் என்று அர்த்தம்.திலா ஹோமம் செய்பவர்கள் அன்று இரவு இராமேஸ்வரத்தில்தங்க வேண்டும்.நேராக வீட்டுக்கு எடுத்துச் செல்வது தவறு.சிரத்தையுடன் செய்தால் தான் முழுப்பலனும் கிடைக்கும்.

திலா ஹோமம் முடிந்து பிண்டங்களை கடல் நீரில் கரைக்கும் போது கருடபகவான் அங்கு வட்டமிட வேண்டும்.இந்த சம்பவம் நிகழ்ந்தால்தான் மகாவிஷ்ணு நம்மை ஆசிர்வதிப்பதாக அர்த்தம்.வைஷ்ணவ சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்கள் ராமேஸ்வரம் அருகில் உள்ள திருப்புல்லாணிக்கரையில் திலாஹோமம் செய்து பித்ருக்களின் ஆசிர்வாதம் பெறலாம்.கேரளாவில் திருவனந்தபுரம் அருகில் உள்ள சுராம க்க்க்ஷேத்த்ரம்என்ற ஸ்தலம் உள்ளது.அங்கும் பித்ருக்களுக்குதர்ப்பணம் செய்யலாம்.

Pithrutharpanam in Kerela (Source)

பிதுர்சாந்தி செய்யாமல் செய்கின்ற எந்த பூஜைகளும் பலன் கொடுப்பதில்லை.கேரளாவில் பிதுர்சாந்திக்கு ஜென்ம நட்சத்திரத்தன்று பசுவுக்கு பருத்திக்கொட்டைபால் எடுத்து வெல்லம் கலந்து பித்ருக்களை வேண்டி உண்பதற்குக் கொடுக்கின்றனர்.வாழ்வில் ஒவ்வொருவரும் ஒருதடவையாவது காசி, கயா,இராமேஸ்வரம்சென்று பிதுர் ஹோமம் செய்ய வேண்டும்.


பித்ரு சாபம் நீங்க,பூர்வ ஜன்ம பாவங்களின் தீய விளைவுகள் தீர

ஞாயிற்றுக்கிழமை வரும் அமாவாசை அன்று சிறப்பு. முடியவில்லையெனில் ஏதேனும் ஒரு அமாவாசை அன்று ஆரம்பம் செய்யவும்.பின் இயன்ற வரை ஞாயிறு தோறும் செய்துவர பூர்வ ஜன்ம பாவங்கள் தீரும், சுப காரியங்களில் தடை நீங்கி நினைத்த காரியங்கள் கைகூடி வரும்.ஜாதகத்தில் பித்ரு சாபம் உடையவர்கள் இதைச் செய்ய பித்ரு சாபம் நீங்கி வாழ்வில் மங்களமான நிகழ்வுகள் நடக்கத் தொடங்கும்.