Thursday, January 26, 2017

Sri Hridayaleeswarar Temple

இதயம் காக்கும் இருதயாலீஸ்வரர்

பூசலார் எனும் சிவபக்தர் சிவனுக்கு கோயில் கட்ட நினைத்தார். ஆனால் யாரும் உதவ முன்வராததால் அவரால் கோயில் கட்ட முடியவில்லை.
Nayanar Sri Poosalar
எனவே இலுப்பை மரத்தடியில் தியானத்தில் அமர்ந்து, மனதில் கற்பனையாய் ஒரு கோயில் கட்டினார். கோயிலுக்கு குடமுழுக்கு செய்யவும் நாள் குறித்தார். 

அதேநாளில் காஞ்சியை ஆண்ட பல்லவ மன்னன், கயிலாயநாதர் கோயிலை கட்டி குடமுழுக்குக்கு ஏற்பாடு செய்திருந்தான். முதல் நாள் இரவு அரசன் கனவில் வந்த இறைவன், “அன்பனே, நீ கும்பாபிஷேகம் செய்யும் கோயிலுக்கு நான் வர இயலாது. திருநின்றவூரில் வாழும் அன்பர் ஒருவர் கட்டிய கோயிலில் நாளை காலை கும்பாபிஷேகம், நான் அங்குபோகிறேன்” என்றார். 

பூசலார் நம்மை விட பெரிய கோயில் கட்டியிருப்பாரோ என நினைத்து பூசாலாரை தேடி வந்து கோயில் எங்கே எனக்கேட்டார் மன்னர். அதற்கு பூசலார் கோயிலை இதயத்தில் கட்டியிருப்பதாக கூறினார். பூசலாரின் இதயத்தில் கோடி சூரியன் பிரகாசத்துடன் ஜொலித்த திருக்கோயில் வடிவத்தை அரசனும் அவனது பரிவாரங்களும் வணங்கியதாக வரலாறு.

Urchavar Sri Poosalar
 பூசலார் மனதில் எழுப்பிய கோயிலை, அவ்விடத்தில் நிர்மாணித்து சிவத்தொண்டு புரிந்தான் மன்னன் என்பது வரலாறு.

Arulmigu Sri Nava Kanniyar ( Image Source )

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் உள்ள இந்த இருதயாலீஸ்வரர் கோயிலுக்கு சென்று சுவாமியையும், மரகதாம்பிகையையும், பூசலார் நாயன்மாரையும் வழிபட்டால் இருதய நோய் முற்றிலும் அகலும் என்பது ஐதீகம்.

நடைத்திறப்பு: காலை 6.30 – 12.30
மாலை 4.30 – 8.30
தொடர்புக்கு: 9444164108

Photos are taken from the website (Dinamalar)
Additional Links: Wiki - TempleAalayamkanden BlogAnother Blog - 1
Another Blog - 2, Wiki - Poosalar

தேசத்துடன்
குபேரன் ஜோதிடர்

Sri Garbarakshambigai, Sri Mullaivananathar Swamy Temple

ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை கோவில் பற்றி 30 சிறப்பு தகவல்கள்


1.தமிழ்நாட்டில் கர்ப்பம் தரிப்பது தொடர்பான கோளாறுகளையும், இடையூறுகளையும் நீக்கும் ஒரே தலமாக திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை தலம் உள்ளது.

2. இத்தலம் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.

3. இத்தலத்துக்கு ஈசனான முல்லைவன நாதர் வினைப் பயனால் ஏற்படும் வியாதிகளை தீர்ப்பதால் அவருக்கு பவரோக நிவாரணன் என்றும் ஒரு பெயர் உண்டு .

4. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியிலும் உள்ள குழந்தைகள் நல மருத்துவர்கள் ஒவ்வொரு தடவை பெண்களுக்கு பிரசவம் பார்க்கும் போதும் கர்ப்பரட்சாம்பிகையை மனதில் நினைத்து கொண்டு காணிக்கைப் பணம் தனியாக எடுத்து வைப்பதை வழக்கத்தில் வைத்துள்ளனர். 3 மாதத்துக்கு ஒரு தடவை திருக்கருகாவூர் வந்து கர்ப்பரட்சாம்பிகைக்கு அந்தக் காணிக்கையை செலுத்துகிறார்கள் .

5. இங்கு தல நாயகராக கற்பக விநாயகர் உள்ளார்.

6. கருச்சிதைவுற்று மகப்பேறின்றி இருப்போர் இத் தலத்திற்கு வந்து வழிபட்டு மகப்பேறு அடைகின்றனர்.

7. இத்தலத்தை வழிபடுவோர்க்குக் குறைப் பிரசவம் ஏற்படுவதில்லை. கர்ப்ப வேதனையும் மிகுதியாவதில்லை. கருவுடன் மரணமடைவோரும் இலர். கருவைத் தருவதும், காப்பதுமாகிய அருள் திறன் பொருந்தி அம்பாள் விளங்குகிறாள்.

8. காவிரியின் தென்கரையிலுள்ள பஞ்ச ஆரண்யங்களுள் இதுவுமொன்று.

9. ஸ்காந்தத்தில் க்ஷேத்திர வைபவக் காண்டத்தில் சனற்குமார சங்கிதையில் நாரதருக்கு சனற்குமாரர் கூறுவதாகவுள்ள பகுதியில் இத்தலச் சிறப்பு இடம் பெற்றுள்ளது .

10. இக்கோவிலில் ரதவடிவிலான சபாமண்டபமும் அதில் நித்துவ முனிவர் பூசித்த லிங்கமும் உள்ளது .

11. மூலவர் சுயம்பு மூர்த்தி; மேற்புறம் பிருதிவிபாகம்; புற்று மண்ணாலாகியது. சுவாமி திருமேனியில் முல்லைக்கொடி (இத்தலம் ஒரு காலத்தில் முல்லை வனமாக இருந்ததால்) சுற்றிய வடு உள்ளது .

12. இங்குள்ள நந்தி உளிபடாத விடங்க மூர்த்தம் என்பர் .

13. இத்தல அம்பாளுக்கு சுத்தமான நெய்யால் தீபமிட்டு, நெய்யால் அம்பாள் திருவடியில் அபிஷேகம் செய்து அந்நெய்யையுண்டால் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது.

14. சோழர்கள், மதுரை கொண்ட கோப்பரகேசரிவர்மன் கால கல்வெட்டுக்கள் உள்ளன .

15. முதலாம் இராசராசன் கல்வெட்டில் “நித்தவிநோத வளநாட்டு ஆவூர்க் கூற்றத்துத் திருக்கருகாவூர்“ என்று தலம் குறிக்கப்படுகின்றது .

16. பசியோடிருந்த சுந்தரருக்கு இறைவன் கட்டமுதும் நீரும் தந்துபசி போக்கிய தலமென்பது தொன் நம்பிக்கை (ஐதிகம்).

17. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென் கரையில் அமைந்துள்ள 18 ஆவது சிவத்தலமாகும்.

18. திருக்களாவூர் என மக்களால் பொதுவாக அழைக்கப் பெறும் இத்தலம் மாதவி வனம், முல்லைவனம் ,திருக்கருகாவூர் , கர்ப்பபுரி என்று பல பெயர்களால் நூல்களில் குறிப்பிடப்படுகிறது.

Arulmigu Appan Sri Mullaivananathar, Arulmigu Amma Sri Garbarakshambigai

19. மாதவி (முல்லைக் கொடியை ) தலவிருட்சமாகக் கொண்டுள்ளதால் மாதவி வனம் (முல்லை வனம்) என்று பெயர் பெற்றது.

20. இத்தலம் ஒரு சிறப்புமிக்க பிரார்த்தனைத் தலமாகும், இத்தலத்தில் மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றும் சிறப்புடையது.

21. க்ருத யுகத்தில் தேவர்களும், த்ரேதா யுகத்தில் முனிவர்களும், துவாபர யுகத்தில் சூரியன் , சந்திரன், நட்சத்திரங்கள், தேவதைகளும் வணங்கினர். கலியுகத்தில் முனிவர்களும், மனிதர்களும் வணங்கி வரும் தலம் திருக்கருகாவூர் தலமாகும்.
ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை

22. அம்மை இத்தலத்தில் 64 சக்தி பீடங்களில் முதன்மையான வீர சக்தியம்மன் ஆக அருள்பாலித்து வருகிறாள்.

23. பொன்னி நதி பாபநாசம் வட்டத்தில் வெட்டாற்றங்கரையில் அமைந்துள்ளது இத்திருத்தலம்.

24. இத்திருத்தலத்தில் பிரம்மன், கௌதமர், மன்னர் குசத்துவசன் , சங்குகர்ணன் நிருத்துவ முனிவர் முதலியோர் வாழ்ந்து சிவ பூசை செய்ததாக வரலாறு உள்ளது.

25. முல்லைக்கொடியை தல விருட்சமாக கொண்ட தலம் ஆதலால் இத்தலம் மாதவி வனம் என்றும் அழைக்கபடுகின்றது. இதனாலே இறைவரும் முல்லைவனநாதர் என்றும் மாதவிவனேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்.

26. முக்தி தரும் சிறப்புத்தலம் என்று ஞான சம்பந்தர் பாடிய தலம்: தில்லை வனம் காசி திருவாரூர் மாயூரம் முல்லைவனம் கூடல், முதுகுன்றம் – நெல்லை களர்காஞ்சி கழக்குன்றம் மறைக்காடருணை காளத்திவாஞ்சிய என முத்தி வரும் .

27. தட்ச சாபத்தில் இன்னலுற்ற சந்திரன் ஒரு பங்குனி மாதம் பௌர்ணமியில் இங்கு வந்து பூஜை செய்ததால் ஒவ்வொரு பங்குனி மாத முழு நிலா நாளன்று சந்திரன் தன் ஒளியால் இறைவனை வணங்குவதைக் காணலாம்.

28. பிரம்மன் படைப்புத்தொழிலில் ஆணவம் கொண்டதால் படைப்புத் தொழில் தடைப்பட்டது, இத்தலம் வந்து பிரம்ம தீர்த்தம் ஏற்படுத்தி நீராடி முல்லை வன நாதரை பூஜித்ததால் மீண்டும் படைப்புத்தொழில் கைவரப் பெற்றார்.

29. சுவர்ணகரன் தீய செயலால் பேயுருக் கொண்டான். கார்க்கிய முனிவரால் இத்திருத்தலத்தில் திருவாதிரை நன்னாளில் பிரம்ம தீர்த்தத்தில் நீராடி பேயுரு நீங்கப் பெற்றான்.

30. கௌதமரிடம் புகலடைந்த முனிவர்களின் சூழ்ச்சியால் பசுக்கொலை புரிந்த பாவத்திற்கு ஆளானார் . போதாயனார் முனிவரின் சொற்படி நீராடி ஒரு லிங்கத்தை வைத்து பூஜித்தால் பசுக் கொலைப்பழி நீங்கியது . கௌதமேஸ்வரர் என்ற பெயருடன் அம்மன் சன்னதியில் ஒருத் தனிக் கோவில் உள்ளது.

கோவில் முகவரி : அருள்மிகு முல்லைவனநாதசுவாமி திருக்கோவில் ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை சன்னதி திருக்கருகாவூர் அஞ்சல், பாபநாசம் தாலுக்கா, தஞ்சாவூர் மாவட்டம்.


தேசத்துடன்
குபேரன் ஜோதிடர்


 

A conversation on "Karma" between Appan Shivan and Amma Parvathi

கர்ம வினை பற்றி பார்வதி தேவிக்கு ஈசன் அளித்த விளக்கம்

அன்பர்களே இந்த கதையை  இரண்டு மூன்று முறை படித்து பலன் பெறுங்கள்

அடர்ந்த காட்டில் ஓரு ஆண்மானும், ஒரு பெண் மானும் இரண்டு குட்டிகளுன் விளையாடி கொண்டிருந்தன. அங்கு வேட்டையாட வேடன் ஓருவன் ஆண் மானையும் , பெண் மானையும் அம்பெய்து கொன்று இரண்டு மான்களையும் தூக்கி கொண்டு இல்லம் சென்றான்.

ஆனால் தாய் தந்தையரை காணாமல் குட்டி மான்கள் தவித்து போயின உணவு கிடைக்காமல் பசியால் வாடி தவித்தன. இதை கண்ட மிருகண்டு மகிரிஷியின் சீடர்கள் மனம் வெதும்பி இந்த சம்பவம் பற்றி முனிவரிடம் கூறினார்கள். மிருகண்டு மகிரிஷி சிவபெருமானையும் பார்வதியும் பிரார்த்து அபயம் அளிக்குமாறு வேண்டினார். சிவபெருமான் அவருடைய குரலை கேட்டும் கேட்காதது போல இருந்தார்.

பார்வதி தேவி ஈசனை நோக்கி  சுவாமி நாம் வசிக்கும் இந்த வனத்தில் இரண்டு மான் குட்டிகள் துன்ப படுகின்றன தாங்கள் அவைகளை காப்பாற்ற வேண்டும் என்றாள்.

சிவ பெருமான் தேவி உலகில் பிறந்த ஒவ்வொரு ஜீவனும் தன் கர்ம வினையை அனுபவித்தே தீர வேண்டும். இந்த மான் குட்டிகளின் தாய் தந்தையர் முன்பு மானிடராய் பிறந்வர்கள், தங்கள் வீட்டு கன்று குட்டியை அவழத்து விட்டு அது பால் குடிக்கும் முன்பே பசுவின் மடியிலிருந்து எல்லா பாலையும் கறந்து விடுவார்கள்.பசுவிற்க்கும் சரியான உணவு கொடுத்ததில்லை. மாடு மேய்க்கும் இடையனுக்கும் சரியான கூலி கொடுக்கவில்லை. அந்த பாவம்தான் அந்த இருவரும் இங்கு மான்களாய் பிறந்துள்ளனர். வேடனாக வந்து மான்களை வேட்டையாடியவன் முற் பிறவியில் இவர்களிடம் இடையனாக இருந்தவன் தன் கூலியின் நிமித்தம் இந்த மான்களை வேட்டையாடி உணவாக்கி கொண்டான் என்றார் இறைவன்.

Madurai, Arulmigu Amman Sri Meenashi, Arulmigu Appa Sundareshwarar (Image Source)

பார்வதி, சுவாமி இந்த இடையன் ஏன் வேடனாக பிறந்தான் என்று சந்தேகமாக கேட்டாள். 

பசுக்களை மேய்க்கும் போது அவைகளை அடித்து துன்புறுத்தியதால் வேடனாக பிறந்தான் என்றார் இறைவன்.

ஆனால் இந்த புனித வனத்தில் பிறப்பதற்க்கு புண்ணியம் செய்திருக்க வேண்டுமே இவர்கள் பாவமல்லவா செய்திருக்கிறார்கள் என்றாள் தேவி.
இறைவன், உண்மைதான் தேவி எனது சிறந்த பக்தனான உக்ரதபஸ் ஒரு முறை யாத்திரையாய் இங்கு வந்து தங்கினார். என்னை பூஜிக்க அவருக்கு மலர கிடைக்கவில்லை. உடனே போன பிறவியில் சிறுவர்களாக இருந்த மான் குட்டிகளிடம பூஜைக்கு மலர வேண்டும் என கேட்டார் அந்த சிறுவர்களும் தூய்மையானவர்களாக மாறி தொலைவில் உள்ள தோட்டத்திலிருந்து மலர்கைளை பறித்து அதை தாமரை இலையில் வைத்து உக்ரதபஸிடம் கொடுத்தனர். அவருக்கு ஏற்பட்டமகிழ்வுக்கு அளவே இல்லை. அந்த மலர்களால் என்னை பூஜத்து மகிழ்ந்தார். என்னை புஜித்த பக்தனுக்கு மலர் கொடுத்தால் இந்த சிறுவர்கள் பாவம் கரைந்து போய் இங்கு மான் குட்டிகளாய் பிறந்தன என்றார்.

பிள்ளைகளை பற்றி சொன்னீர்கள் அவர்களுடைய தாய் தந்தையர்கள் பாவிகள்தானே அவர்கள் எவ்வாறு இங்கு பிறக்க அருள் புரிந்தீர்கள் என்று கேட்டாள் பார்வதி.

பிள்ளைகள் செய்த புண்ணியம் அவர்களை பெற்றவர்களுக்கும் நற் பயனை தரும்.  அவர்களுது பிள்ளைகள் செய்த புண்ணியத்தால் அவர்களது தாய் தந்தை இங்கு பிறந்தனர் என்றார் இறைவன்.
Arulmigu Appan Sri Thayumanavar, Ammai Sri Mattuvar Kuzhalammai - Thrichy, Tamilnadu. (Image Source)

பின்னர் சிவ பெருமானும் பார்வதியும் மான் உருவம் கொண்டு மான் குட்டிகளிடம் சென்று மான் குட்டிகளுக்கு பால் கொடுத்து "அபயம்" அளித்தனர்
இந்த திருவிளையாடல் அரங்கேறிய இடம் திருமாந்துறை தலம் தேவாரம் பாடல் பெற்ற  தலம். 

🌷🙏ஓம் நமசிவாய

தேசத்துடன்
குபேரன் ஜோதிடர்

Thursday, January 19, 2017

SirKazhi Sattainatha Swamy Temple

சனி பார்வையிலும் ஏற்றம் பெற சீர்காழி சட்டநாத ஸ்வாமி வழிபாடு!



மந்தகாரகனான சனி பகவான் ஜாதகத்தின் ஒரு கட்டத்தைக் கடக்க இரண்டரை ஆண்டுகள் எடுத்துக் கொள்வார். 12 கட்டங்களைக் கடக்க 30 ஆண்டுகள் ஆகின்றன. 
எனவேதான், 30 ஆண்டுகள் வாழ்ந்தவனும் இல்லை, 30 ஆண்டுகள் வீழ்ந்தவனும் இல்லை என்பர்.

அவ்வகையில் ஒவ்வொரு ஜாதகரும் வாழ்வின் ஏதேனும் ஒரு கட்டத்தில் அஷ்டம சனியை (ராசிக்கு 8-ம் இடத்தில் சனி சஞ்சரிப்பது) எதிர்கொண்டே தீர வேண்டும். அவமானம், நம்பிக்கை துரோகம், உடல்நிலை சீர்கேடு, தீராத நோய், பில்லி சூனியம் ஏவல், மரணம், பஞ்சமா பாதகம் என எல்லா வகையான துர்பலன்களும் அஷ்ட சனி சஞ்சாரத்தின்போது ஏற்படும். 

ஜனன கால ஜாதகத்தில் சனியின் நிலையைக் கொண்டு இதன் தீவிரம் மாறுபடும். எனவேதான் அஷ்டம சனியின்போது ஒவ்வொரு ஜாதகரும் தன்னை பாதுகாத்துக் கொள்ள திருத்தலங்களுக்கு செல்வதோடு, எளிய பரிகாரங்களை மேற்கொள்ள முன்னோர்கள் வழிகாட்டியுள்ளனர். அவ்வகையில், அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, ஏழரைச் சனி, ஜென்ம சனி, துர்பலன்களை நல்கும் சனி தசை அல்லது புத்தி என சனியின் பார்வை நீளும் இடங்களுக்கெல்லாம் ஒட்டு மொத்த பரிகாரமாக சொல்லப்படுவதுதான் சீர்காழி சட்டநாத ஸ்வாமி வழிபாடு.

Sri Brahmapurieshwarar
Ammaiyar Thirunilai Nayagi

ஒவ்வொரு வெள்ளிக்கிழமைதோறும், நடுநிசி ஒரு மணிக்கு இங்கு நடைபெறும் பைரவர் பூஜை, அஷ்டம சனியின் தாக்கத்தை தடுத்து நிறுத்தும் கவசமாக முன்னோர்களால் அருளப்பட்டது. (பூவுலகின் ரிஷிமூலமாக விளங்கும் ஆதிசிவனை நடுநிசியில் வழிபடுவது எம பயத்தை போக்கும் என்பதை நமது ரிஷிகள் பல்லாண்டுகளுக்கு முன்பே அறிந்திருந்தனர். குறிப்பாக, ஆதிசங்கரருக்கு முந்தைய காலங்களில், அகோரிகள் சுடுகாட்டில் பைரவரை வழிபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.) 

இரவு பத்து மணியளவில் சட்டநாத ஸ்வாமி வழிபாட்டில் இருந்து தொடங்கும் பூஜை, பலிபீட பூஜை, கோயில் கோபுரத்தில் வீற்றிருக்கும் சிவ-பார்வதி பூஜை, ஆகாய சட்டநாதருக்கு நடைபெறும் விபூதி (புணுகு) பூஜை என நீள்கிறது. நடுநிசி ஒரு மணியளவில் அஷ்ட பைரவர்களுக்கு நடைபெறும் சிறப்பு வழிபாடு இதன் உச்சகட்டமாக அமைகிறது. 

போட்டி, பொறாமை, கண்திருஷ்டி, சட்ட சிக்கல்கள், உடல் நல பிரச்சினைகள், தீராத நோய்க்கு மருத்துவ சிகிச்சை, பகைவர் எதிர்ப்பு, மரண பயம், ஏவல் என எல்லா வகையான துர்வாசத்துக்கும் முடிவு கட்டுவதாக இந்த பூஜை அமைகிறது.

காழியில் பாதி காசி


சீர்காழி சட்டநாத ஸ்வாமியை பிரம்மன் வழிபட்டதால் பிரம்மபுரம் என்றும், மூங்கில் வடிவமாக இறைவன் தோன்றியதால் வேணுபுரம் எனவும், தலை பிளவுபட்ட இராகு பூஜித்தமையால் சிரபுரம் என்றும் இத்திருத்தலம் அழைக்கப்படுகிறது.

Sri Asthanaga Bairvar Temple

Sri Moolvar Sattainathar
அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீக்ஷன பைரவர், சம்ஹார பைரவர் என அஷ்ட பைரவர்களும் ஓரிடத்தில் நின்று சேவை சாதிப்பதால், (சீர்)காழியில் பாதி காசி என கூறப்படுவதுண்டு.

 
Thirugnanasambanda Peruman'in Padhigam on SirKazhi Appan and Ammai
Youtube source beauitfully rendered by Thiru Venkatesan Othurvar

தற்போது (2014 - 2017) அஷ்டம சனியை எதிர்கொள்ளும் மேஷ ராசி அன்பர்கள் உட்பட எண்ணற்ற அன்பர்கள் மேற்கண்ட பூஜையில் பங்கேற்று கெடுபலன் தாக்கம் நீங்கப்பெற்றதை நேரில் அறிந்திருக்கிறேன். அவ்வகையில் அனைத்து அன்பர்களும் இந்த எளிய பரிகாரத்தை மேற்கொண்டு பைரவ அருளைப் பெற வேண்டுகிறேன்.



நேசத்துடன்
குபேரன் ஜோதிடர்

குலதெய்வங்கள் (Kula Theivam)

  1. குலதெய்வங்கள் என்றால் என்ன...?
  2. அவர்களின் பெருமை என்ன...?
  3. குலதெய்வம் விஞ்ஞானத்தோடு எப்படி ஒத்துபோகின்றது...?   
- சற்று ஒரு பார்வை...

Thiruchendhur Sri Shanmugar, Image Source
குலதெய்வம்...
குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும். தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும். குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினை தரும். மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும். குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும்.
சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது. 

அதன் சக்தியை அளவிடமுடியாது...
எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்கமுடியும். குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும். அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை. எனவே தான் அந்த தெய்வங்கள்
*குலதெய்வங்கள்* என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன.

குலதெய்வங்கள் கர்மவினைகளை நீக்க வல்லவை.

Thriuchendhur Sri Shanmugar, Image Source
இன்று நம் வாழ்க்கைப்போக்கு, அதிகபட்சம் இரு பாட்டன், பாட்டி பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா உள்ளது..?
நம் முன்னோர்கள்...

அதாவது நம் தந்தை வழி பாட்டன், பாட்டிமார்கள் வணங்கி வந்த தெய்வம் தான் நம் குல தெய்வமாகும்.

இந்த தந்தை வழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம்.

அது ஒரு ரிஷியின் வழி வழிப் பாதை...
இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும்.
இதன்படி பார்த்தால், குலதெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம்.
Sri Go Matha ( Image source )

இந்த வழி வழி போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாக புண்ணியத்தை கட்டியிருக்கலாம்...
இன்னொருவர் பாவமே கூட பண்ணியிருக்கட்டுமே!
நாம் அங்கே போய் நின்று...
அங்கு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த சக்தியை தொழும் போது, நம் முன்னோர்கள் பித்ருக்களாக இருந்து நம்மை ஆசிர்வாதிக் கிறார்கள்.
இது எத்தனை தூரப்பார்வையோடு, வடிவமைக்கப்பட்டஒரு விஷயம்!...


விஞ்ஞான முறையில் யோசித்தால்...
ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்பதை முடிவு செய்வது ஆணே...
ஒவ்வொரு குழந்தைக்கும் 23+23 க்ரொமொசோம்கள் உள்ளன என்பதை அறிவோம்.  இது தாய் மூலம் 23, மற்றும் தந்தை மூலம் 23 என்பதையும் அறிவோம். இதிலே பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத் தந்தையின் க்ரொமொசொமே முடிவு செய்கிறது.

தாயிடம் xx க்ரோமோசோம்கள் மட்டுமே இருக்கின்றன.
தந்தைக்கோ, xy என இருவிதமான மாறுபட்ட க்ரோமோசோம்கள் உள்ளன.
ஆணின் y யுடன் பெண்ணின் x சேர்ந்தால் ஆண் குழந்தையும்...
இருவரின் x+x சேர்ந்தால் பெண் குழந்தையும்...
பிறக்கின்றது.
என்பதை விஞ்ஞானம் அறுதியிட்டு கூறி உள்ளது.
ஆண் குழந்தையை உருவாக்கும் y க்ரோமோசோம் ஆணிடம் மட்டும் தான் உள்ளது.  பெண்ணிற்கு, y க்ரோமோசோம்கள் தந்தை வழி வருவதில்லை.
ஆனால், அதே ஆண் குழந்தைக்கு தந்தையிடம் இருந்து y க்ரோமோசோம்கள் வருகின்றன.

அதனால் அவன் மூலம் வம்சம் மீண்டும் வழி வழியாக வளர்கிறது...
வழிவழியாக என்பதில் இருந்தே புரிந்திருக்க வேண்டும், முப்பாட்டனார், பாட்டனார், மகன், பேரன், கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன் எனத்தொடர்ந்து...
இது ஒவ்வொருவரிடமும் விதைக்கப்பட்டு...
தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வருகின்றது.
இதன் முக்கியத்துவம் குறித்து அறிந்தே நம் முன்னோர்கள்
ஆண் குழந்தைகளை வாரிசு களாக்கினார்கள்...
பெண் குழந்தைகளை குல விளக்காக காத்தனர்...
பொதுவாக, 13 தலைமுறைக்கு மேல் ஆண் வாரிசு ஏற்பட வாய்ப்பு இல்லை...
ஏனெனில், ஆணின் y க்ரோமோசோம்கள் ரொம்பவே பலவீனமான ஒன்று.
மேலும், தொடர்ந்து காலம் காலமாக இந்த y க்ரோமோசோம்கள் அவரவர் பரம்பரை ஆண் மக்களுக்கு சென்று கொண்டிருப்பதால் இன்னமும் பலவீனம் ஆகிக் கொண்டிருக் கிறதாம். எனவே, 13 தலைமுறைக்கு மேல் அது வலுவிழந்து பயனற்று போய்விடும்... அதனால் ஏற்கெனவே பலவீனமான y க்ரோமோசோம்கள் மேலும் பலவீனம் அடைய கூடாது என்பதாலும், பரம்பரை நோய்கள் தொடர கூடாது என்பதாலுமே சொந்த ரத்த உறவுகளுக்கிடையே திருமணம் தவிர்க்கப்படுகிறது...

பொதுவாக பெண்கள் மட்டும் இரண்டு குல தெய்வங்களை வணங்குபவர்களாக இறைவன் படைத்திருக்கிறான்.
பிறந்த வீட்டில் ஒரு தெய்வம்...
புகுந்த வீட்டில் ஒரு தெய்வம்...
திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குபவர்கள் திருமணம் முடிந்தவுடன் கணவனின் வீட்டில் உள்ள குலதெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள்.

பெண்கள் திருமணமாகி விட்டால் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குவது கிடையாது...

அப்படி இல்லாமல், பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வழிபடுவது, அவர்களை புகுந்த வீட்டில் எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ வழிவகுக்கும்.
இதுவரை யாரும் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வழிபாடு செய்யாமல் இருந்தால், பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு திருவிழாகாலங்களில் வழிப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.


ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து, அருகுபோல வேரூன்ற வேண்டுமனால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம்...

குலதெய்வதோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது.
குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்ந்த ஹோமம், யாகம் செய்தாலும்,
ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான்.

எனவே உங்கள் குலதெய்வத்தின் கோவிலுக்கு அடிக்கடி
(குறைந்தது வருடம் ஒரு முறையாவது) செல்லுங்கள்.

அபிஷேக ஆராதனைகள் செய்யுங்கள்.
அக்கோவிலுக்கு உதவுங்கள்..

தேசத்துடன்
குபேரன் ஜோதிடர்

🙏🙏 🙏🙏