Monday, March 23, 2020

Ootathur Arulmigu Sri Rathasuddhaneeshwarar Temple

சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்கும் பஞ்சநத நடராஜர்!


பிறை ஊரும் சடைமுடி எம்பெருமான் ஆரூர்
பெரும்பற்றப்புலியூரும் பேராவூரும்
நறையூரும் நல்லூரும் நல்லாற்றூரும்
நாலூரும் சேற்றூரும் நாரையூரும்
உறையூரும் ஓத்தூரும் ஊற்றத்தூரும்
அளப்பூர் ஓமாம்புலியூர் ஒற்றியூரும்
துறையூரும் துவையூரும் தோழூர் தானும்
துடையூரும் தொழ இடர்கள் தொடரா அன்றே....
 - திருநாவுக்கரசர் தேவாரம்

பிறை தவழும் சடைமுடிச் சிவ பெருமானுடைய ஆரூர், பெரும்பற்றப் புலியூர், பேராவூர், நறையூர், நல்லூர், நல்லாற்றூர், நாலூர், சேற்றூர், நாரையூர், உறையூர், ஓத்தூர், ஊற்றத்தூர், அளப்பூர், ஓமாம்புலியூர், ஒற்றியூர், துறையூர், துவையூர், தோழூர், துடையூர் என்னும் இவற்றைத் தொழத் துன்பங்கள் தொடராது. 



அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத சுத்தரத்தினேசுவரர், ஊட்டத்தூர் Source 



நறையூரிற் சித்தீச்சரம் நள்ளாறு
நாரையூர் நாகேச்சரம் நல்லூர் நல்ல
துறையூர் சோற்றுத்துறை சூலமங்கை
தோணிபுரம் துருத்தி சோமேச்சரம்
உறையூர் கடலொற்றியூர் ஊற்றத்தூர்
ஓமாம்புலியூர் ஓர் ஏடகத்தும்
கறையூர் கருப்பறியல் கன்றாப்பூரும்
கயிலாயநாதனையே காணலாமே....

 

நறையூரிலுள்ள சித்தீச்சரம், நள்ளாறு, நாரையூர், நாகேச்சரம், நல்லூர், துறையூர், சோற்றுத்துறை, சூலமங்கை, தோணிபுரம், துருத்தி, சோமேச்சரம், உறையூர், கடலை அடுத்த ஒற்றியூர், ஊற்றத்தூர், ஓமாம்புலியூர், ஏடகம், கறையூர், கருப்பறியல், கன்றாப்பூர் ஆகிய இடங்களில் கயிலாய நாதனைக் காணலாம்.

திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 71-வது பதிகத்தில் 4-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இந்தப் பதிகம் அப்பர் திருப்பூந்துருத்தியில் தங்கி இருந்த போது அருளிச் செய்ததாகும்.


திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியை அடுத்த பாடலூரில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது திருஊற்றத்தூர் (தற்போது ஊட்சதத்தூர் என்று அழைக்கப்படுகிறது) இங்குள்ள சுத்த ரத்தனேஸ்வரர் கோயிலில் உள்ளது அபூர்வ நடராஜர் பெருமான் திருமேனி.

ஆசியாவிலேயே மிகவும் அரிதான பஞ்சநதன கல்லில் செய்யப்பட்ட நடராஜர் திருமேனி இது ஆகும். இந்த கற்கள் சூரியனில் இருந்து வெளிவரும் ஆரோக்கிய கதிர்வீச்சை சேமித்து கொள்ளும் ஆற்றல் உடையவை. இந்த வகை கற்சிலை தற்போது எங்கேயும் கிடையாது.

 பிரம்ம தீர்த்தம், Source

சிறுநீரகம் மற்றும் சிறுநீரகம் தொடர்பான நோய்களுக்கு இந்த நடராஜர் மருந்தாக திகழ்கிறார். சுமார் ஒருகிலோ வெட்டிவேரினை 48 துண்டுகளாக எடுத்துக் கொண்டு அவற்றை ஒரு மாலையாக கட்டி இந்த நடராஜருக்கு சாற்றி அர்ச்சனை செய்து, பின்னர் 48 துண்டுகளை நாளொன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் ஒருகோப்பை நீரில் இரவு ஊற வைத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டு வந்தால் சிறுநீரகம் தொடர்பான அனைத்து நோய்களும் தீர்ந்துவிடுகிறது. மேலும், நடராஜர் சன்னதிக்கு எதிரே உள்ள பிரம்ம தீர்த்தத்தின் நீரை பருகுவதும் அவசியம்.(மாமன்னன் ராஜராஜ சோழன் இந்த பிரம்ம தீர்த்தத்தின் நீரை 48 நாட்கள் அருந்தி உடல் ஆரோக்கியம் பெற்றார் என்பது ஐதீகம்)


பஞ்சநதன நடராஜர் சிலையின் சிறப்பு



 அருள்மிகு பஞ்சநதன நடராஜர், Source


ஆலிங்க நதனம், பந்த நதனம், சிங்க நதனம், யானை நதனம், யாழி நதனம் என்று 5 வகையான சிலாக்கற்கள் உள்ளன. இதில் பஞ்சநதன என்ற பாறை தெய்வீக ஒளி வீசும் என்பது சிற்பக் கலை வல்லுநர்களால் கூறப்பட்டுள்ளது. நவரத்தின மோதிரம் அதன் ஒளிகளால் எப்படி நம் கவனத்தை ஈர்க்கிறதோ அதைப்போலத்தான் இந்த பஞ்சநதன கற்களும் சூரிய ஒளியை உட்கிரகிக்கின்றன. சூரிய பிரகாசத்தை கிரகித்துத் தரும் அத்தகைய கல்லால் இச்சிலை செய்யப்பட்டுள்ளது சிறப்பு.

அருள்மிகு சிவகாமியம்மன், Source


அன்பர்கள் அனைவரும் வாழ்வில் ஒருமுறையேனும் இத்திருத்தலத்துக்கு சென்று நடராஜரின் அருளைப் பெற வேண்டுகிறேன்.

Other Web Links:

Om Guruve Namaha...

 

நேசத்துடன்
குபேரன் ஜோதிடர்

Thirukolakka Alulmigu Sri Sapthapureeswarar Sri Oosai Kudtha Nayagi Amman Temple

பேசும், கேட்கும் திறன் நல்கும் ஓசைநாயகி அம்மன்!

 

நாளும் இன்னிசை யால்தமிழ் பரப்பும்
ஞான சமந்த னுக்குல கவர்முன்
தாளம் ஈந்தவன் பாடலுக் கிரங்கும்
நன்மை  யாளனை என்மனக் கருத்தை
ஆளும் பூதங்கள் பாடநின் றாடும்
அங்க  ணன்றனை எண்கணம் இறைஞ்சும்
கோளி லிப்பெரும் கோயிலுள் ளானைக்
கோலக் காவினிற் கண்டு கொண்டேனே....
 
 
- அருள்மிகு திரு சுந்தரர், Source 
 
 
 
அருள்மிகு ஒம் ஒசைநாயகி சமேத தாளபுரிஸ்வரர்,  திருகோலக்கா சீர்காழி Source
 
 
சீர்காழியில் பிறந்து வளர்ந்த திருஞானசம்பந்தர் திருக்கோலக்கா அல்லது
திருத்தாளமுடையார் கோவில் என்று வழங்கும் இத்தலத்தில் இருந்து தான் தன்னுடைய சிவஸ்தல யாத்திரையைத் தொடங்கினார். சுமார் மூன்று வயதுடைய சம்பந்தர் தனது சின்னஞ்சிறு கைகளால் தட்டி தாளம் போட்டுக்கொண்டு இறைவனைத் துதித்து பதிகம் பாடினார். கைகள் வலிக்குமே என்று சம்பந்தருக்காக இரக்கப்பட்ட இத்தலத்து இறைவன் சம்பந்தருக்கு இரண்டு பொற்றாளம் கொடுத்து அருளினார். இறைவி அதற்கு
தெய்வீக ஓசையைத் தந்தருளினாள். ஆதலின் இத்தலத்துஅம்பிகைக்கு ஓசை
கொடுத்த நாயகி என்று பெயர். சம்பந்தருக்கு பொற்றாளம் தந்த இறைவனைசுந்தரர் தனது பதிகத்தில் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். 
 
சிவன், திருநானசம்பந்தர்க்கு பொற்தாளம் வழங்கி வாழ்துதல், Source
 பார்வதிதேவியால் ஞானப்பால் கொடுக்கப்பட்ட திருஞான சம்பந்தர், பல தலங்களுக்கு சென்று, தனது சிறு கைகளால் தாளம் போட்டு பாடுவதைப்பார்த்தார் சிவன். குழந்தையின் கைகள் வலிப்பது பொறாமல், அவருக்கு தங்கத்தால் ஆன இரண்டு தாளங்களை கொடுத்தார். தட்டிப்பார்த்தார் சம்பந்தர். ஆனால் அதிலிருந்து ஓசை வரவில்லை. உடனே அந்த தாளத்திற்கு ஓசை கொடுத்தாள் அம்மன். எனவே தான் இங்குள்ள மூலவர் தாளபுரீஸ்வரர் எனவும், அம்மன் ஓசைநாயகி எனவும் அழைக்கப்படுகிறார்கள். 

 இசைக்கலையில் விருப்பமுள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டு சென்றால் இசையில் வல்லவராகலாம். கோயிலின் நுழைவு வாயிலிலேயே ஞானசம்பந்தருக்கு தாளம் கொடுக்கும் ஈசனும், ஓசை கொடுக்கும் நாயகியும் அருள்பாலிக்கிறார்கள். இந்திரனும் சூரியனும் இத்தலம் வந்து பூஜை செய்து பலனடைந்துள்ளனர். இங்குள்ள மகாலட்சுமி மிகவும் சக்தி வாய்ந்தவள். எல்லா செல்வங்களும் அருளக்கூடியவள். திருமகள் தவம் செய்து திருமாலுடன் இணைந்த தலம் என்பதால் இத்தலம் திருக்கோலக்கா எனப்பட்டது. ஓசை நாயகியின் சன்னதியில் சொற்பொழிவு நிகழ்த்துபவர்கள், இன்னிசை நிகழ்த்துபவர்கள் மாபெரும் புகழை அடைவார்கள் என்பது கண்கூடான உண்மை. தற்போது திருத்தாளமுடையார் கோவில் என அழைக்கப்படுகிறது.

 வாய் பேச முடியாதவர்கள் இங்கு வந்து ஆனந்த தீர்த்தத்தில் நீராடி, ஓசை நாயகியிடம், ""ஜடப்பொருளான தாளத்திற்கு ஓசை கொடுத்த நாயகியே, பேசும் சக்தியைக்கொடு,' என வேண்டி, அம்மன் பாதத்தில் தேனை வைத்து அர்ச்சனை செய்து அதை எடுத்து சாப்பிட்டு வர வேண்டும்.  மகாலட்சுமி தவம் இருந்து மகாவிஷ்ணுவை திருமணம் செய்த தலம் என்பதால், திங்கள் மற்றும் வெள்ளி கிழமைகளில் பெண்கள் இங்குள்ள மகாலட்சுமிக்கு, தொடர்ந்து 6 வாரம் மஞ்சள் பொடியால் அர்ச்சனை செய்தால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்

  
Arulmigu Appan Sri Thalapureeshwarar, Source
 சீர்காழி திருக்கோலக்கா தெருவில் அமைந்துள்ளது ஸ்ரீ தாளபுரீஸ்வர ஸ்வாமி ஆலயம். இக்கோயிலை யார் அறிந்திருப்பரோ இல்லையோ ENT மருத்துவர்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர். பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் கூட இங்கு சாமான்ய மக்கள் முதல், மேட்டுகுடியினர் வரை வந்து செல்வதை காண முடியும்.


 பேசும், கேட்கும் திறனை அருளும் ஸ்ரீ ஓசைநாயகி அம்பாளின் அற்புதங்களே இதற்குக் காரணம். மருத்துவர்களால் கைவிடப்பட்ட, பேசும் மற்றும் கேட்கும் திறன் குறைபாடுள்ள குழந்தைகளும் வயது வந்தவர்களும் அம்பாளின் அருளினால் இத்திறன்கள் கைகூடப் பெற்றுள்ளனர்.
Arulmigu Annai Sri Osai Nayagi, Source
 பேச்சுத் திறன் வராத குழந்தைகளை இங்குள்ள ஸ்ரீ ஓசைநாயகி அம்பாளின் சன்னதிக்கு அழைத்து வந்து, வாக்வாதினி அர்ச்சனை மேற்கொள்கிறார்கள். அப்போது அம்பாளுக்கு அர்ச்சிக்கப்படும் நெய்வேத்யத்தை குழந்தைகளுக்கு காலை உணவாக தருகின்றனர். மேலும், அம்பாளின் திருமேனியில் அபிஷேகம் செய்யப்பட்ட தேனை, 45 நாட்களுக்கு குழந்தைகளுக்கு கொடுத்துவர, திறன்குறைபாடுள்ள எத்தகையோரும் பேசும் திறனை பெறுகின்றனர்.


 கேட்கும் திறனும், பார்வைத் திறனையும் தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு அம்பாள் அருள்வதை உள்ளூர் மக்களும், அப்பகுதி வியாபாரிகளும் விவரிப்பதை கேட்க முடியும். எனவே, திறன்குறைபாடுள்ள குழந்தைகளை இக்கோயிலுக்கு அழைத்துச் சென்று அம்பாளின் அருளைப் பெற வேண்டுகிறேன். அம்பாளின் சக்தியை அறிந்த அன்பர்களும், தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இச்செய்தியை தெரிவித்து குழந்தைகளின் திறன் வளர்க்க உதவுமாறும் பாதம் பணிந்து வேண்டுகிறேன்.

Other Links:

Monday, April 8, 2019

Thirumeechayur Arulmigu Lalithambigai Ambal

தம்பதியரின் கருத்துவேறுபாட்டை களையும் லலிதாம்பிகை!

 

அழகாய் கோபிக்கும் அம்பிகையை அன்பாய் அரவணைக்கும் ஆண்டவன்!


Thirumeechayur Arulimigu Amma Sri Lalithambigai, Image source

ஒவ்வொருவரின் ஜாதகத்திலும் ஏழாமிடமான களத்திர ஸ்தானத்தை ஆராய்ந்தால், அவருக்கு அமையும் வாழ்க்கைத் துணை பற்றி துல்லியமாய் கணித்துவிடலாம். ஏழாமிடம் அற்புதமாய் அமைந்தால் இல்லறமே ஒரு சொர்க்கபுரியாக அமைந்துவிடும். இத்தகைய வரம் என்பது அனைவருக்கும் கிடைத்துவிடுவது கிடையாது. முன்ஜென்ம வினைப் பயனின் விளைவுகளைக் கொண்டே அது தீர்மானிக்கப்படுகிறது. மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று இதைத்தான் கூறுவர், இது இருபாலருக்கும் பொருந்தும்.

மின்னல்வேகத்தில் சுழலும் காலச்சக்கரத்தில் வாழ்க்கைத் துணை உறுதுணையாய் இருந்தால் எதையும் சாதித்துவிட முடியும். நம்மில் இல்லறத்தில் முரண்பாடு கொள்ளாத தம்பதியே இல்லை எனலாம். எனினும், முரண்பாடுகளைக் களைந்து அன்யோன்யம் தழைக்கும் இல்லறத்துக்கு பேரருள் புரிகிறது திருமீயச்சூர் மேகநாதர் கோயில் திருத்தலம்.

கோபிக்கும் அன்னையின் கண்கொள்ளாக் காட்சி

 

மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் பேரளம் எனும் ஊருக்கு அருகே அமைந்துள்ளது திருமீயச்சூர் எனும் அழகிய சிற்றூர். இங்கே அருள்பாலிக்கும் லலிதாம்பிகை சமேத மேகநாத சுவாமி, தம்பதியரின் முரண்பாடுகளை களைய எளிய வழி கூறுகிறார். 



சோழர்காலத்திய இக்கோயில் சிற்பங்களில், ஷேத்திர புராணேஸ்வரர் - அம்பிகை சிற்பம் உலகப் புகழ் வாய்ந்தது. கோபம் கொண்டு திரும்பி நிற்கும் அம்பிகையை அன்பாய் தன் திருக்கரங்களால் தேற்றும் இறைவனின் அழகு கண்கொள்ளாக் காட்சி. ஒருபுறம் இருந்து பார்த்தால் கோபம் கொள்ளும் சிற்பமாய் தென்படுவதும், மறுபுறம் சென்று நேராய் நின்று பார்த்தால் புன்னகை ததும்பும் சிற்பமாய் விளங்குகின்றன

Image source


நமக்குள் ஆயிரம் வேறுபாடுகள் இருந்தாலும் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு பேரருள் புரிவாயாக என அம்பிகையை பார்த்து இறைவன் கோருவதைப் போலவும், அதையொட்டி இருவரும் புன்னகையாய் அருள்புரிவதைப் போலவும் அமைந்துள்ள இச்சிற்பம், தமிழரின் கலைநுணுக்கத்தை பறைசாற்றுகின்றன. இதுவே, தம்பதியின் முரண்களைக் களைந்து இல்லறம் தழைக்கச் செய்யும் தத்துவமாய் ததும்பி நிற்கிறது. 


முக்கிய பரிகார ஸ்தலம்

 

அவ்வபோது குடும்பத்தில் ஏற்படும் முரண்பாடுகள், தொடரும் இல்லற சச்சரவுகள், கருத்து வேற்றுமையாலும், இதர பிரச்சனைகளாலும் பிரிந்திருக்கும் தம்பதியினருக்கு இத்திருக்கோயில் முக்கிய பரிகார ஸ்தலமாகும். கொடிய நோய்கள், கிரக தோஷங்களால் ஆயுள் குறைவு ஆகியவற்றுக்கும் இத்தலம் விமோசனம் அளிக்கிறது.
இறைவன், இறைவியின் கண்கொள்ளாக் காட்சியை கண்டு தரிசிப்பதோடு, மனதில் நிறுத்தி வழிபட்டால், முற்றிய மனமுறிவுகள் கூட நீங்கி, மனம் தெளிவடையும். மணமுறிவு என்பதே நம் சமூகத்தில் இல்லாமல் போகும்.

சொர்க்கம் என்பது விண்ணில் இல்லை, நல்லதொரு இல்லறத்தில்தான் அமைகிறது என்கிற தத்துவத்தையும், பெண்மையை மதித்தொழுகும் அவசியத்தையும் விளங்கச் செய்கிறது இக்கோயில்.

ஒவ்வொரு தம்பதியும் வாழ்வில் ஒருமுறையேனும் இத்திருக்கோயில் சென்று தரிசிக்குமாறு வேண்டுகிறேன்.

மயிலாடுதுறையில் இருந்து சுமார் 25 km தொலைவிலும், திருவாரூரில் இருந்து 22 km தொலைவிலும் அமைந்துள்ளது. காரைக்காலில் இருந்து சுமார் 20 km தொலைவிலும் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் செல்லும் பாதையில் உள்ளது.

அருள்மிகு மேகலாம்பிகை சமேத சகலபுவனேஸ்வரர் திருக்கோவில் (லலிதாம்பிகை கோயில்), திருமீயச்சூர் - 609 405, திருவாரூர் மாவட்டம். தொலைபேசி எண் : 94448 36526, 94446 98841.

 Other informative web-links


Shri Lalitha Sahashranama originated in Thirumeeyachur Temple, the verses and 1008 names of Ambal are given to Maha Muni Agasthiyar by Swamy Hayagrivar. Maha Muni Agasthiyar and Amma Lopamudra recited this at our Ambal's temple. Video source

Om Guruve Namaha... 

நேசத்துடன்
குபேரன் ஜோதிடர்

2019 New Year Article by Kuberan

Arulmigu Appan Sri Subramanya Swamy, Thiruvidaikazhi  Image source, Information

உதியா, மரியா, உணரா, மறவா,
விதி மால் அறியா விமலன் புதல்வா,
அதிகா, அநகா, அபயா, அமரா
பதி காவல, சூர பயங் கரனே...


- திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி

பழையன கழித்து புதிதாய் பிறக்கிறது 2019 புத்தாண்டு. தமிழ் பஞ்சாங்கப்படி சுபஸ்ரீ விளம்பி வருடம் மார்கழி 17-ம் தேதி (1.1.2019) ஏகாதசி திதி துலாம் ராசி ஸ்வாதி நட்சத்திரத்தில் பிறக்கிறது புத்தாண்டு. அதிலும், முருகப் பெருமானுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை தினத்தில் பிறக்கும் புதிய ஆண்டால், கதிர்காம கந்தனின் பேரருள் அனைவருக்கும் கிட்டும் என்பதில் ஐயமில்லை. 16 செல்வங்களுக்கும் அதிபதியான முருகக் கடவுளை செவ்வாய் தினத்தில் வழிபட்டு அருட்கடாட்சத்தை பெறலாம்.
  

Kuberan has written a yearly prediction for 2019 for an on-line newspaper,  this article is very detailed and can be accessed by the above provide web-link.

Om Guruve Namaha... 
 
நேசத்துடன்
குபேரன் ஜோதிடர்




 

Friday, October 19, 2018

Koothanur Arulmigu Sri Saraswathi Ambal

நாவில் நிற்கும் கலைமகள் குடிகொண்ட இடம் கூத்தனூர்


Koothanur Arlmigu Annai Sri Gnana Saraswathi, Image source




கல்விக் கடவுளாக போற்றப்படும் கலைமகளான சரஸ்வதி அன்னைக்கு என தனியே கோயில் உள்ள ஒரே இடம் கூத்தனூர்தான்.  திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்தில் பூந்தோட்டம் என்ற ஊருக்கு அருகே அமைந்துள்ளது இந்த எழில் மிகு கிராமம்.


Arulmigu Koothanur Ambal Maha Saraswathi, Image source

எட்டுத் திக்கும் கட்டியாண்ட சோழப் பேரரசின் அவைப் புலவராக நிகரற்று திகழ்ந்தவர் ஒட்டக் கூத்தர். "ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் ” என்பது வாய்மொழி வழக்கு. அந்த அளவுக்கு கலைமகளின் பெருங்கடாட்சத்துடன் புலவர் பேரரசன் என புகழப் பெற்றவர். ஒட்டக் கூத்தரின் இஷ்ட தெய்வமான கலைமகளுக்கு கோயில் கட்ட, இரண்டாம் ராஜ ராஜ சோழனால் வழங்கப்பட்ட இடம்தான் கூத்தனூர். ஒட்டக்கூத்தரை ஆட்கொண்ட அன்னை என்பதால், கூத்தனூர் என பெயர் பெற்றது.

மகாகவியான சுப்ரமணிய பாரதி, அடிக்கடி இக்கோயிலுக்கு வந்து கலைமகளை வழிபட்டதாக கூறுவர். அன்னையின் அருளால் பாரதம் போற்றும் மகாகவியானார் பாரதி. கல்வியும், சிந்தனையுமே ஒருவனை பண்படுத்தும் அலகுகள் என்பதை உணர்வதற்குக்கூட இயலாத காலகட்டத்தில் வாழ்கிறோம்.

கூத்தனூர் என்ற அழகிய சிற்றூரில் அமர்ந்து எல்லையில்லா பெருங்கருணையோடு குழந்தைகளுக்கு வித்யா வரம் தந்துவரும் கலைமகள் அன்னையை, அன்பர்கள் அனைவரும் குடும்பத்தினரோடும், தவறாமல் குழந்தைகளோடும் சென்று ஆண்டுக்கு ஒருமுறையேனும் தரிசிக்க வேண்டுகிறேன். குழந்தைகளின் கல்வியில் ஏற்படும் தோஷங்களைப் போக்க கூத்தனூர் சரஸ்வதி கோயில் வழிபாடு இன்றியமையாத பரிகாரமாகும்.

விலைபொருளாகிவிட்ட கல்வியை, விளைபொருளாக்கிக் கொள்ள கலைமகளின் கடாட்சம் அவசியம். அன்னையின் அருட்பார்வை நம் உள்ளத்தையும் வாழ்வையும் செழுமைப்படுத்தும் என்பது திண்ணம்.கல்வி, செல்வம், வீரம் வரிசையில் முதலிடம் பெறும் கல்வி அனைவருக்கும் கிட்டிட,எல்லோரும் எல்லாமும் பெற்றிட கலைமகளை உளமாற தரிசிப்போம்.

தலவரலாறு 

 

Arulmiguu Koothanur Sri Maha Saraswathi Ambal, Image source

 

சத்தியலோகத்தில் ஒரு முறை சரஸ்வதிக்கும், பிரம்மனுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கல்விக்கு அரசியான தன்னால் தான் சத்தியலோகம் பெருமை அடைகிறது என்று சரஸ்வதியும், தன் படைப்புத்தொழிலால் தான் சத்தியலோகம் பெருமை அடைகிறது என்று பிரம்மனும் வாதிட்டனர். வாதம் முற்றி, ஒருவரையொருவர் சபித்துக்கொண்டனர்.

இதனால் பூலோகத்தில் சோழ நாட்டில் புண்ணிய கீர்த்தி, சோபனை என்ற தம்பதியினருக்கு பகுகாந்தன் என்ற பெயரில் மகனாகவும், சிரத்தை என்ற பெயரில் மகளாகவும் பிறந்தனர்.

அவர்களுக்கு திருமண வயது வந்ததும் பெற்றோர்கள் வரன் தேட தொடங்கினர். அப்போது இவர்கள் இருவருக்கும் தாங்கள் யார் என்பது நினைவுக்கு வந்தது. சகோதர நிலையில் உள்ள நீங்கள் திருமணம் செய்து கொண்டால் உலகம் பழிக்கும். இது இயலாத காரியம். பெற்றோருக்கு இந்த விஷயம் தெரிய வர அவர்கள் இந்த பிரச்சினைக்கு தீர்வு வேண்டி சிவபெருமானை பிரார்த்தனை செய்தனர். சிவபெருமான் அவர்கள் முன் தோன்றி சகோதர நிலையில் உள்ள நீங்கள் திருமணம் செய்து கொள்வது இயலாத காரியம் என்று கூறி, சரஸ்வதியிடம் நீ மட்டும் இங்கே தனியாக கோவில் கொண்டு பக்தர்களுக்கு கல்விச்செல்வத்தை வழங்குவாய் என்று கூறி அருள்பாலித்தார். அதன்படி சரஸ்வதி தேவி, கூத்தனூரில் தனியாக கோவில் கொண்டு, தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு கல்வி செல்வத்தை வாரி வழங்கி வருகிறார்.

 

 

அமைவிடம் 

Arulmigu Koothanur Sri Saraswathi Annai, Image source
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் சுமார் 22 கிலோ மீட்டர் தொலைவில் பூந்தோட்டம் என்ற ஊர் உள்ளது. இங்குள்ள பஸ் நிலையத்தில் இறங்கினால் 5 நிமிட நடைபயணத்தில் கோவிலை அடையலாம். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து காரைக்காலுக்கு பூந்தோட்டம் வழியாக செல்லும் பஸ்சிலும் வரலாம்.

திருவாரூரில் இருந்து மயிலாடுதுறையில் செல்லும் பஸ்சில் ஏறி 25 கிலோ மீட்டர் பயணித்தால் கோவிலை சென்று அடையலாம். 

காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் 9 மணி வரையும் கோயில் நடை திறந்திருக்கும். தொடர்புக்கு: 04366 273050 மற்றும் 238445.
Subramaniya Bharathiyar's song on Saraswathi Ambal, source

  

Om Guruve Namaha...

 

நேசத்துடன்
குபேரன் ஜோதிடர்

Sunday, June 10, 2018

Kundrathur Murugan Temple

மகிழ்ச்சியில் திளைக்கும் குன்றத்தூர் ஆண்டவன் 




சென்னை அருகே குன்றத்தூரில் சிறு குன்றின் மீது வீற்றிருக்கும் முருகக் கடவுளுக்கு இரண்டு சிறப்புகள் உண்டு....

  • ஒன்று முருகன் குன்றின் மீது வந்தமர்ந்த தருணம்
  • இரண்டு தேவியர் சமேதராக முருகன் பார்க்கும் திசை

இவ்விரு சிறப்புகளால்தான் சில முக்கிய தேவைகளுக்கான பரிகார ஸ்தலமாக குன்றத்தூர் விளங்குகிறது.
Kundrathur Arulmigu Appan Sri Subramanya Swamy Temple, Image source

குன்றத்தூரின் முதல் சிறப்பு

 

Ammai Arulmigu Sri Valli, Ammai Arulmigu Sri Devasena sametha Appan Arulmigu Subramanya Swamy, Image source

 

அன்பும், கருணையுள்ளமும், ஈகை குணமும் கொண்டவராக விளங்குகிறார் குன்றத்தூர் முருகன். முருகக் கடவுளின் ஒவ்வொரு மனநிலைக்கும் ஏற்ப அந்தத்த  அமைவிடங்கள் பரிகார ஸ்தலங்களாக விளங்குகின்றன.

திருத்தணியில் திருமணம் புரிவதற்கு முன்பாக முருகன் வந்தமர்ந்த ஸ்தலம்தான் குன்றத்தூர். குதூகல மனதுடனும், குழந்தை மனோபாவத்துடனும் முருகன் மகிழ்ச்சியில் திளைக்கும் ஸ்தலம் குன்றத்தூர். அதனால்தான், குன்றத்தூர் வந்து வணங்கும் பக்தர்களுக்கு மிகையான மகிழ்ச்சியை தனது பரிசாக மகிழ்வுடன் தருகிறார் முருகன்.

 

முதற்சிறப்பின் முக்கிய பரிகாரங்கள்


Arulmigu Sri Valli Thayar Arulmigu Sri Devasena Thayar sametha Appan Arulmigu Sri Subramanya Swamy, Image source
தேவியருடன் குன்றத்தூரில் குதூகல மனநிலையில் திளைக்கும் தமிழ்க்கடவுள், நல்மண வாழ்க்கை, தம்பதிகளின் அன்யோன்யம், மழலைப்பேறு, சகோதர ஒற்றுமை பாசம், அனைத்திலும் வெற்றி ஆகியவற்றை பக்தர்களுக்கு அருளி பெரும் உபகாரம் புரிகிறார்.

குன்றத்தூரின் இரண்டாம் சிறப்பு

 

Arulmigu Appan Sri Skandhar, Skanda Shasti, Kundrathur, Image source

 

குன்றிருந்தால் அங்கே குமரர் இருப்பார் என்பதற்கு இணங்க, சிறு குன்றென்றாலும் குன்றத்தூரில் ஏறியமர்ந்து வீற்றிருக்கிறார் தமிழ்க்கடவுள். இங்கு தேவியருடன் எழுந்தருளி, வடதிசையை நோக்கி பார்வையை செலுத்துகிறார். இதுவே குன்றத்தூரின் இரண்டாம் சிறப்பு.

வடதிசை என்பது ஜோதிடரீதியாக குபேர திசை என கணிக்கப்படுகிறது. எனவேதான், வடதிசை முருகனை வேண்டி வணங்கினால், பொருளாதாரம் மேன்மை அடையும்.
  

இரண்டாம் சிறப்பின் முக்கிய பரிகாரங்கள்

 
Kundrathur Murugan Temple's 84 steps, Image source

தொழில், வர்த்தகம், பொருளாதாரம் ஆகியவற்றுக்கான சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்குகிறது குன்றத்தூர். அரசு மற்றும் தனியாரிடம் இருந்து வரவேண்டிய வரவுகள், குடும்ப நிதி மேம்பாடு என எல்லா வகையான பொருளாதார தேவைகளுக்கும் வாரி வழங்குவார் முருகர் என்பது நாடிச் சென்ற அன்பர்களின் அனுபவ உண்மையாகும்.


குன்றத்தூர் படிகளில் படி விளக்குகள் ஏற்றி, கொடிமரத்தில் நெய்தீபமேற்றி வழிபட 16 செல்வங்களையும் வாரி வழங்குவார் முருகன் என்பது மிகச் சிறந்த ஜோதிட பரிகாரம்.

Arulmigu Sri Valli Thayar, Arulmigu Sri Devasenai Thayar sametha Arulmigu Appan Sri Kundrathur Murugan, Image source
முருகன் என்றால் அழகு. அன்பும், அறிவும், கருணையும் நிரம்பிய எல்லையில்லா பேரழகு. அதற்கொப்ப இங்கே அழகிய மணாளனாய் ஜொலிக்கும் குமரரை மனதில் நிறுத்தி தவமிருந்தால் பண்பும், பாங்கும் மிக்க மனமொத்த இல்லறத் துணை அமைவது கண்கூடு.


தேவியர் சூழ, எல்லையில்லா மகிழ்ச்சியில் திளைக்கும் வடதிசை நோக்கும் குன்றத்தூர் ஆண்டவரை, நம் தமிழ்க்கடவுள் என்ற குடும்ப உணர்வோடு வந்து வணங்கும் யாவர்க்கும் அனைத்தையும் அருள்வார் முருகன் என்பது திண்ணம்.

Copy from the Sthala Puranam of Kundrathur Subramanya Swamy Temple

 

 ... வேலும் மயிலும் துணை ...

 

Vallimalai Sri Sachidananda Swamigal, Image source & more information



திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே....

 -வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் தொகுத்தருளிய   'வேல் மாறல்'

 Source: Youtube

 

Om Guruve Namaha... 

 

நேசத்துடன்
குபேரன் ஜோதிடர்

 


 

Monday, April 30, 2018

Guru's Blessings

குரு பார்வை கோடி நன்மை

 

Ammai Arul Sri Valli, Ammai Arul Sri Devanai, Appan Arul Thiru Shanmugar, Thiruchendhur, Image source


ஆடும் பரி, வேல், அணிசேவல் எனப்
பாடும் பணியே பணியா அருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவில்
சாடும் தனி யானைச் சகோதரனே

 

ஒரு முறை ஜோதிடக் கலையின் குருவான பிரஹஸ்பதியிடம், தெய்வீக சாஸ்திரத்தைக் கற்பதற்காக வேண்டி சந்திரன் சென்றார்.

Guru Sri Pamban Kumara Gurubara Swamigal. Gurunathar Madapuram Guru Dhaksinamoorthy, Guru Thiruporur Sri Chidambara Swamigal

குரு, தனக்குத் தெரிந்ததை எல்லாம் சந்திரனுக்கு கற்று கொடுத்தார்.

சந்திரன் அதனைக் கற்றுத் தேர்ந்தவுடன், எல்லாம் அறிந்து கொண்டு விட்டோம் என்ற மமதையில் மூழ்கித் திளைத்தார்.

Guru Sri Arunagiri Nathar, Image source & Discourse

சந்திரனின் மமதையைக் கொஞ்சம் மட்டம் தட்டி வைக்க விரும்பிய குரு பகவான்,  பூமியில் அப்போது ஜனித்த ஒரு சிசுவின் ஜாதகத்தை மிகச் சரியாகக் கணிக்குமாறு சந்திரனைப் பணித்தார்.

சந்திரனும் அந்தச் சிசுவின் ஜாதகத்தைக் கணித்தார்.

அந்தக் குழந்தை ஒரு வயது பூர்த்தியாகும் சமயம் பாம்பு கடித்து மரணம் சம்பவிக்கும் என்றும் பலன் சொன்னார்.

இருந்தும் இல்லாமல் இரு
Sri La Sri Guru Mounaguru Swamigal, Thangal Ashram, Image source


பிரஹஸ்பதி சந்திரனை சில மாதங்கள் கழித்து வரவழைத்தார்.

அச்சமயம் சந்திரன் ஜாதகம் குறித்த குழந்தைக்கு ஓராண்டு முடிவதற்கு இன்னும் ஒரு சில வினாடிகளே இருந்தன. 

சந்திரனும், குருவும் வானவெளியில் சஞ்சரித்தபடியே குழந்தையைப்.பார்த்துக் கொண்டிருந்தனர்.

தொட்டில் சங்கிலி வழியே பாம்பு ஒன்று மெதுவாக இறங்கிக் கொண்டிருந்தது. 

குழந்தைக்கும் பாம்புக்குமிடையே ஒரு அடி தூரமே இடைவெளி இருந்தது. 

தன்னுடைய கணிப்புச் சரிதான் இன்னும் கொஞ்ச நேரத்தில் பலிக்கப் போகிறது என எண்ணி மகிழ்ந்த சந்திரன், குருவை இறுமாந்து நோக்க, 

குரு தன் புன்னகை மாறாமல் குழந்தையையே பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போதுதான் அந்த எதிர்பாராத அதிசயம் நடந்தது:

திடீரென கண்விழித்த குழந்தை வழவழவென்று மின்னிக் கொண்டு இறங்கி வரும் பாம்பை ஏதோ புதுமாதிரி விளையாட்டுச் சாமான் என்று கருதி, 

மகிழ்ச்சியால் கையையும் காலையும் உதைத்துக் கொண்டு துள்ள, தொட்டில் மேலே கீழே பக்கவாட்டில் என்று திசைமாறிக் குலுங்க, 

பாம்பின் தலை சங்கிலியின் ஒரு வளையத்திற்குள் எக்கச்சக்கமாகச் சிக்கிக் கொண்டது.

தன் தலையை விடுவித்துக் கொள்ளும் முயற்சியில் பாம்பு தன் உடலால் சங்கிலியைச் சுழற்றிக் கொண்டு நெளிய, 

குழந்தை மேலும் துள்ள, இப்போது பாம்பின் வாலும் வேறொரு வளையத்தினிடையே சிக்கிக் கொண்டது. 

குழந்தை மேலும் மேலும் துள்ளி விளையாட எவ்வளவு நேரம்தான் பாம்பு தாங்கும் ஓரிரு வினாடிகளில் பாம்பு இறந்து விட்டது.

அடுத்த வினாடி குழந்தை தன்னுடைய இரண்டாவது வயதில் அடி எடுத்து வைத்தும் விட்டது. 

சந்திரன் தன் ஓலைச் சுவடிகளில் இருந்த குழந்தையின் ஜாதகக் கணக்கை சரிபார்த்துக் கொண்டிருந்தான். 

தன் கணக்கு சரியாகவே இருந்தது போலப் பட்டது. பின்னர் குருவைப் பார்த்துக் கேட்டான்.


Arulmigu Ammai Sri Valli, Arulmigu Ammai Sri Devanai sametha Appan Arulmigu Muthukumaraswamy, Vaithesshwarankovil, Image source

ஜாதகத்தில் இப்போது குருபார்வை கூட இல்லையே, இது எப்படி நடந்தது? 

குழந்தை எப்படிப் பிழைத்தது? 

தோற்றுவிட்ட ஆத்திரம் அவர் குரலில் பீறிட்டது. 

புன்னகை மாறாத குரு, அப்போதுதான் வாயைத் திறந்தார்,

ஜாதகத்தில் குரு பார்க்காவிட்டால் என்ன? அதுதான் இப்போது நேரிலேயே பார்த்துக் கொண்டிருந்தேனே அப்புறம் எப்படி மரணம் சம்பவிக்கும்?

சந்திரன் தன் கர்வம் அழிந்து, குருவை வணங்கி விடைபெற்றார்.
Acharya Sri Madhurakavi Azhwar, his Guru Acharya Thiru Nammalvar, Alwarthirunagari Image source
 Video source & Copyright: Youtube

ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் கிரக நிலை எப்படி இருந்தபோதும், ஜாதகம் பார்க்கும் நாளுக்கு உரிய கிரகங்களின் கோசார நிலைகளையும் ஆராய்ந்த பின்னரே உறுதியாகப் பலன்களை அறிய முடியும். மேலும், கிரஹ நிலைகளுக்கு உரிய நிவர்த்திப் பரிகாரங்களை கோச்சார கிரகங்களின் அனுமதி இல்லாமல் செய்ய இயலாது. அதனால், ரிகாரங்களை தள்ளிப் போடக் கூடாது.
Guru Bogar Siddhar, Image source
குரு இருந்து கொடுப்பதைவிட பார்த்துக் கொடுப்பது அதிகம். அதனால்தான் குரு பார்வை கோடி நன்மை என்கிறார்கள்.

சில நேரங்களில் நமது குரு (ஆசாரியன் பார்வை ஆசி பூரணமாக நம்மிடம் இருந்தாலும்) கடாச்சம் கூட கோடி நன்மை தரும். எனவே

"எப்பொழுதெல்லாம் முடியுமோ, அப்போழுதெல்லாம் ஆசாரியனை சேவிக்க சென்று வருவோம்- காரணமே இல்லாவிட்டால் கூட".

ஆச்சாரிய தேவோ பவ:


    முருகன், குமரன், குகன், என்று மொழிந்து
    உருகும் செயல் தந்து, உணர்வு என்று அருள்வாய்
    பொரு புங்கவரும், புவியும் பரவும்
    குருபுங்கவ, எண் குண பஞ்சரனே 

     


    Video source & copyright: Youtube

     

    Om Guruve Namaha....

     

    நேசத்துடன்
    குபேரன் ஜோதிடர்