Monday, April 30, 2018

Guru's Blessings

குரு பார்வை கோடி நன்மை

 

Ammai Arul Sri Valli, Ammai Arul Sri Devanai, Appan Arul Thiru Shanmugar, Thiruchendhur, Image source


ஆடும் பரி, வேல், அணிசேவல் எனப்
பாடும் பணியே பணியா அருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவில்
சாடும் தனி யானைச் சகோதரனே

 

ஒரு முறை ஜோதிடக் கலையின் குருவான பிரஹஸ்பதியிடம், தெய்வீக சாஸ்திரத்தைக் கற்பதற்காக வேண்டி சந்திரன் சென்றார்.

Guru Sri Pamban Kumara Gurubara Swamigal. Gurunathar Madapuram Guru Dhaksinamoorthy, Guru Thiruporur Sri Chidambara Swamigal

குரு, தனக்குத் தெரிந்ததை எல்லாம் சந்திரனுக்கு கற்று கொடுத்தார்.

சந்திரன் அதனைக் கற்றுத் தேர்ந்தவுடன், எல்லாம் அறிந்து கொண்டு விட்டோம் என்ற மமதையில் மூழ்கித் திளைத்தார்.

Guru Sri Arunagiri Nathar, Image source & Discourse

சந்திரனின் மமதையைக் கொஞ்சம் மட்டம் தட்டி வைக்க விரும்பிய குரு பகவான்,  பூமியில் அப்போது ஜனித்த ஒரு சிசுவின் ஜாதகத்தை மிகச் சரியாகக் கணிக்குமாறு சந்திரனைப் பணித்தார்.

சந்திரனும் அந்தச் சிசுவின் ஜாதகத்தைக் கணித்தார்.

அந்தக் குழந்தை ஒரு வயது பூர்த்தியாகும் சமயம் பாம்பு கடித்து மரணம் சம்பவிக்கும் என்றும் பலன் சொன்னார்.

இருந்தும் இல்லாமல் இரு
Sri La Sri Guru Mounaguru Swamigal, Thangal Ashram, Image source


பிரஹஸ்பதி சந்திரனை சில மாதங்கள் கழித்து வரவழைத்தார்.

அச்சமயம் சந்திரன் ஜாதகம் குறித்த குழந்தைக்கு ஓராண்டு முடிவதற்கு இன்னும் ஒரு சில வினாடிகளே இருந்தன. 

சந்திரனும், குருவும் வானவெளியில் சஞ்சரித்தபடியே குழந்தையைப்.பார்த்துக் கொண்டிருந்தனர்.

தொட்டில் சங்கிலி வழியே பாம்பு ஒன்று மெதுவாக இறங்கிக் கொண்டிருந்தது. 

குழந்தைக்கும் பாம்புக்குமிடையே ஒரு அடி தூரமே இடைவெளி இருந்தது. 

தன்னுடைய கணிப்புச் சரிதான் இன்னும் கொஞ்ச நேரத்தில் பலிக்கப் போகிறது என எண்ணி மகிழ்ந்த சந்திரன், குருவை இறுமாந்து நோக்க, 

குரு தன் புன்னகை மாறாமல் குழந்தையையே பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போதுதான் அந்த எதிர்பாராத அதிசயம் நடந்தது:

திடீரென கண்விழித்த குழந்தை வழவழவென்று மின்னிக் கொண்டு இறங்கி வரும் பாம்பை ஏதோ புதுமாதிரி விளையாட்டுச் சாமான் என்று கருதி, 

மகிழ்ச்சியால் கையையும் காலையும் உதைத்துக் கொண்டு துள்ள, தொட்டில் மேலே கீழே பக்கவாட்டில் என்று திசைமாறிக் குலுங்க, 

பாம்பின் தலை சங்கிலியின் ஒரு வளையத்திற்குள் எக்கச்சக்கமாகச் சிக்கிக் கொண்டது.

தன் தலையை விடுவித்துக் கொள்ளும் முயற்சியில் பாம்பு தன் உடலால் சங்கிலியைச் சுழற்றிக் கொண்டு நெளிய, 

குழந்தை மேலும் துள்ள, இப்போது பாம்பின் வாலும் வேறொரு வளையத்தினிடையே சிக்கிக் கொண்டது. 

குழந்தை மேலும் மேலும் துள்ளி விளையாட எவ்வளவு நேரம்தான் பாம்பு தாங்கும் ஓரிரு வினாடிகளில் பாம்பு இறந்து விட்டது.

அடுத்த வினாடி குழந்தை தன்னுடைய இரண்டாவது வயதில் அடி எடுத்து வைத்தும் விட்டது. 

சந்திரன் தன் ஓலைச் சுவடிகளில் இருந்த குழந்தையின் ஜாதகக் கணக்கை சரிபார்த்துக் கொண்டிருந்தான். 

தன் கணக்கு சரியாகவே இருந்தது போலப் பட்டது. பின்னர் குருவைப் பார்த்துக் கேட்டான்.


Arulmigu Ammai Sri Valli, Arulmigu Ammai Sri Devanai sametha Appan Arulmigu Muthukumaraswamy, Vaithesshwarankovil, Image source

ஜாதகத்தில் இப்போது குருபார்வை கூட இல்லையே, இது எப்படி நடந்தது? 

குழந்தை எப்படிப் பிழைத்தது? 

தோற்றுவிட்ட ஆத்திரம் அவர் குரலில் பீறிட்டது. 

புன்னகை மாறாத குரு, அப்போதுதான் வாயைத் திறந்தார்,

ஜாதகத்தில் குரு பார்க்காவிட்டால் என்ன? அதுதான் இப்போது நேரிலேயே பார்த்துக் கொண்டிருந்தேனே அப்புறம் எப்படி மரணம் சம்பவிக்கும்?

சந்திரன் தன் கர்வம் அழிந்து, குருவை வணங்கி விடைபெற்றார்.
Acharya Sri Madhurakavi Azhwar, his Guru Acharya Thiru Nammalvar, Alwarthirunagari Image source
 Video source & Copyright: Youtube

ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் கிரக நிலை எப்படி இருந்தபோதும், ஜாதகம் பார்க்கும் நாளுக்கு உரிய கிரகங்களின் கோசார நிலைகளையும் ஆராய்ந்த பின்னரே உறுதியாகப் பலன்களை அறிய முடியும். மேலும், கிரஹ நிலைகளுக்கு உரிய நிவர்த்திப் பரிகாரங்களை கோச்சார கிரகங்களின் அனுமதி இல்லாமல் செய்ய இயலாது. அதனால், ரிகாரங்களை தள்ளிப் போடக் கூடாது.
Guru Bogar Siddhar, Image source
குரு இருந்து கொடுப்பதைவிட பார்த்துக் கொடுப்பது அதிகம். அதனால்தான் குரு பார்வை கோடி நன்மை என்கிறார்கள்.

சில நேரங்களில் நமது குரு (ஆசாரியன் பார்வை ஆசி பூரணமாக நம்மிடம் இருந்தாலும்) கடாச்சம் கூட கோடி நன்மை தரும். எனவே

"எப்பொழுதெல்லாம் முடியுமோ, அப்போழுதெல்லாம் ஆசாரியனை சேவிக்க சென்று வருவோம்- காரணமே இல்லாவிட்டால் கூட".

ஆச்சாரிய தேவோ பவ:


    முருகன், குமரன், குகன், என்று மொழிந்து
    உருகும் செயல் தந்து, உணர்வு என்று அருள்வாய்
    பொரு புங்கவரும், புவியும் பரவும்
    குருபுங்கவ, எண் குண பஞ்சரனே 

     


    Video source & copyright: Youtube

     

    Om Guruve Namaha....

     

    நேசத்துடன்
    குபேரன் ஜோதிடர்

    Sunday, April 22, 2018

    Pozhichalur Sri Agatheeswarar Temple

    சென்னையில் ஒரு வட திருநள்ளாறு - பொழிச்சலூர்

     

    Pozhichalur Arulmigu Appan Sri Kala Bairavar, Image source

    நவ கிரகங்களில் ஈஸ்வர பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனி பகவான். ஒரு ராசி மண்டலத்தில் இருந்து மற்றொரு ராசி மண்டலத்துக்கு மாற இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்வார். அதனாலேயே இவருக்கு மந்தகாரகன் என்ற பெயரும் உண்டு.

    ஆனால், ஒரு ராசியில் அமர்ந்துவிட்டால், நீடித்த, நிலையான, தீர்க்கமான பலன்களை நல்கக் கூடியவர் சனி. அது சுப பலனாக இருந்தாலும் சரி, அசுப பலனாக இருந்தாலும் சரி. சனிக்கு எல்லாம் சமம்தான்.

    ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, அர்த்தாஷ்டமச் சனி ஆகியவை கோட்சார ரீதியாக கெடு பலன்களை தரக் கூடிய அமைப்புகளாகும். சனி, நவ கிரகங்களில் ஆயுள்காரகன் என்பதால், உயிர் தொடர்புடைய விஷயங்களில் அதிக அக்கறை கொள்வது அவசியம். 

    Pozhichalur Arulmigu Sri Saneeswara Bhagavan, Image source

    உடல் ரோகம், தாய் சுகவீனம், உயிர் ஆபத்து, இல்லறத்திலும், கூட்டுத் தொழிலிலும் தலைபோகும் பிரச்சினைகள் இக்காலகட்டத்தில் எழலாம். முறையான பரிகாரங்களை மேற்கொண்டு, இரண்டரை ஆண்டுகளுக்கு தொடர் வழிபாட்டில் ஈடுபட்டும் தோஷ நிவர்த்திகளை பெற முடியும் என நமது ஜோதிட மூல நூல்கள் வழிகாட்டுகின்றன.


    வினைப் பயனை விதிப்படி நிறைவேற்றுபவர் என்றாலும், தண்டிக்கும் செயல்களில் ஈடுபடுவதால் சனீஸ்வரருக்கும் பாவங்கள் அதிகரித்து, சிவனை வேண்டி பாவ விமோசனம் பெற்றதாக ஐதீகம். இதன்படி, சனீஸ்வரர் விமோசனம் பெறும் இடங்களான திருநள்ளாறும், வட திருநள்ளாறு எனப்படும் பொழிச்சலூர் ஸ்தலங்களும் சனி பரிகார ஸ்தலங்களாக விளங்குகின்றன.


    திருநள்ளாறு தலத்தில்தான், சனீஸ்வரர் தனித்து நின்று அருள் பாலிக்கிறார். அதைப்போலவே சென்னையில் உள்ள சனி பரிகார ஸ்தலம்தான் பொழிச்சலூர். பம்மல் அருகே உள்ள பொழிச்சலூர் ஸ்தலத்தை வட திருநள்ளாறு என்பர். திருநள்ளாறுக்கு அடுத்தபடியாக தனித்து நின்று சனீஸ்வரர் அருள்பாலிப்பது இங்குதான்.


     
    Video source and credits: Youtube


    இங்குள்ள அகத்தீஸ்வரர் ஆலயத்தில் சனி பகவானை வழிபட்டு, தசா, புத்திகளில் வரும் கெடு பலன்கள், ஏழரை, அஷ்டம, அர்த்தாஷ்டம சனியின் துர்பலன்கள் நீங்கப் பெறலாம்.  9 சனிக்கிழமைகள் தொடர்ந்து எள் தீபம் ஏற்றியோ, காக்கைகளுக்கு அன்னமிட்டோ பரிகாரம் மேற்கொள்ளலாம்.

    இக்கோயிலின் மற்றுமொரு சிறப்பு, கோயிலின் நுழைவு வாயிலில் அமைந்துள்ள சம்ஹார மகா கால பைரவர். அஷ்டமி தோறும் இங்கு நடைபெறும் பைரவ வழிபாடு மிகச் சிறப்பு வாய்ந்தது. 

    அன்பர்கள் அனைவரும், சனியின் சுபப் பார்வை பெறும் வகையிலும்,
    பில்லி, சூனியம், நோய், அறுவைச் சிகிச்சை உள்ளிட்ட பீடைகள் நீங்க பைரவரை வழிபடவும் பொழிச்சலூர் சென்று வருமாறு வேண்டுகிறேன்.


    Om Guruve Namaha...

      
    நேசத்துடன்
    குபேரன் ஜோதிடர்
     

    Akshaya Tritiya

    உன்னதத்தை நல்கும் அட்சய திருதியை


    Ammai Arulmigu Kanci Sri Kamakshi Amman, Image source

    இந்து மத கால கணிப்பின்படி யுகங்கள் நான்கு வகைப்படும். கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம். இவற்றில் முதல் யுகமான கிருதா யுகத்தில் பிரம்மனால் உலகம் தோற்றுவிக்கப்பட்ட நாள் அட்சய திதியை என்கிறது இந்து சாஸ்திரம். அதே நாளில்தான் திரேதா யுகமும் தோன்றியதாக ஐதீகம். எப்போதும் குறையாத, அழிவில்லாத என்று பொருள் படும் அட்சய திதியை நன்நாள், எல்லா வகையிலும் உன்னதத்தை நல்கும் பொன்னாளாகும்.


    Arulmigu Ammai Kamalavalli Nachiyaar, Thiru Uraiyur, Image source

    அன்றைய தினத்தில் நல்லவை அனைத்தும் நடைபெறலாம், நல்லவை அனைத்தையும் மேற்கொள்ளலாம் என்பதே பொதுவிதியாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதனால்தான் புண்ணியம் பிறந்த நாளாகவும், புண்ணியத்தைத் தேடி செல்லாமல், புண்ணியம் நம்மைத் தேடி வருவதற்கான நாளாகவும் முன்னோர்களால் அறிவுறுத்தப்பட்டது.


    Ammai Arulmigu Sri Andal, Appan Arulmigu Vatapathrasayee, Sri Villiputhur, Image source

    இந்து மத விதிகளின்படி பூஜை, வேள்வி, திருக்கோயில் வழிபாடு, குலதெய்வ பிரார்த்தனை, மூத்தோர் ஆசிர்வாதம் போன்ற நற் செயல்களில் ஈடுபட இந்த தினம் உகந்ததாகும். கோடை வாட்டும் இக்காலத்தில் விலங்குகள் மற்றும் பறவைகளின் தாகம் தீர்த்தல், பசுவுக்கு வாழைப்பழம், அகத்திக்கீரை உணவிடுதல், ஒருகோடி புண்ணியம் நல்கும் கோமாதா வழிபாடு, எளியவர்களுக்கு தானமிடுதல், முன்னோர்களை மனதில் நிறுத்தி வணங்குதல், கல்வியறிவு பெற உதவி செய்தல் போன்ற நற்காரியங்களை இந்நன்நாளில் மேற்கொள்ளலாம்.

    Ammai Arulmigu Sri Lalitha Ambigai, Thirumeechayur, Image source

    ஜோதிட கூற்று

     

    அட்சய திருதியை தினத்தில்:

    • நல்ல ஆரோக்கியத்தை பெற - எறும்புக்கு பச்சரிசி உணவிடலாம்
    • பித்ருக்கள் ஆசி பெற  - காகத்துக்கு அன்னமிடலாம்
    • வளமான வாழ்க்கைக்கு - பசுவுக்கு வாழைப்பழம், அகத்தி கீரை அளிக்கலாம்.
    • மன உளைச்சலில் இருந்து விடுபட - மீனுக்கு பொறி உணவு இடலாம்
    • நல்ல நட்புகள் கைகூட - புறாவுக்கு பாசிப்பயிறு உணவளிக்கலாம்.
    வெள்ளியை தானமிட்டு அன்பைப் பரப்பவும் இந்நாளையே ஜோதிடம் சிறந்த தினமாக கூறுகிறது.

    Arulmigu Appan Sri Karpaga Vinayagar, Pillayarpatti, Image source

    அட்சய திருதியையின் காரண நோக்கம் 

     

    அட்சய திருதியை தினத்துக்கு ஒரு உளவியல் காரணமும் உண்டு. கலியுகத்தில் காலம் தள்ளும் நாம், நம்மை நோக்கிய ஒரு உள்நோக்கு பார்வைக்கும், ஆழ்மனத் தேடலை மேற்கொள்ளவும் இந்த நாள் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது. செய்வனவற்றை நமக்காக அல்லாமல், சமூகம் சார்ந்த நன்மைகளை மேற்கொள்ளவும், அனைத்து ஜீவராசிகளையும் நினைத்து பார்த்து ஜீவகாருண்யத்தை பரப்பவும் மேற்கண்ட செயல்பாடுகள் உதவுகின்றன.

    Arulmigu Thayar Sri Valli, Arulmigu Thayar Sri Devasena Sametha Appan SubramanyaSwamy, Anuvavi, Image source

    எல்லாமும் நிறைந்த தினம் 

     

    இதன்மூலம் நமது கடந்த கால செயல்பாடுகளை சீர்தூக்கி பார்த்து, வரும் காலங்களில் அன்பையும் அறத்தையும் பரப்ப இந்நன் நாளை மனித இனம் பயன்படுத்திக் கொள்ளலாம். சுருக்கமாக கூறுவதென்றால், நம்மையும் நமது மனதையும் சுத்திகரித்துக் கொள்ள இறைவன் அருளிய தினமே அட்சய திருதியை ஆகும்.

    Arulmigu Appan Si Kala Bala Vairavar, Vairavanpatti, Image source

    2018: ஏப்ரல் 18-ம் தேதி புதன்கிழமை, 18.04.2018, Wednesday

    Om Guruve Namaha....  

     

    நேசத்துடன்
    குபேரன் ஜோதிடர்