Friday, October 19, 2018

Koothanur Arulmigu Sri Saraswathi Ambal

நாவில் நிற்கும் கலைமகள் குடிகொண்ட இடம் கூத்தனூர்


Koothanur Arlmigu Annai Sri Gnana Saraswathi, Image source




கல்விக் கடவுளாக போற்றப்படும் கலைமகளான சரஸ்வதி அன்னைக்கு என தனியே கோயில் உள்ள ஒரே இடம் கூத்தனூர்தான்.  திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்தில் பூந்தோட்டம் என்ற ஊருக்கு அருகே அமைந்துள்ளது இந்த எழில் மிகு கிராமம்.


Arulmigu Koothanur Ambal Maha Saraswathi, Image source

எட்டுத் திக்கும் கட்டியாண்ட சோழப் பேரரசின் அவைப் புலவராக நிகரற்று திகழ்ந்தவர் ஒட்டக் கூத்தர். "ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் ” என்பது வாய்மொழி வழக்கு. அந்த அளவுக்கு கலைமகளின் பெருங்கடாட்சத்துடன் புலவர் பேரரசன் என புகழப் பெற்றவர். ஒட்டக் கூத்தரின் இஷ்ட தெய்வமான கலைமகளுக்கு கோயில் கட்ட, இரண்டாம் ராஜ ராஜ சோழனால் வழங்கப்பட்ட இடம்தான் கூத்தனூர். ஒட்டக்கூத்தரை ஆட்கொண்ட அன்னை என்பதால், கூத்தனூர் என பெயர் பெற்றது.

மகாகவியான சுப்ரமணிய பாரதி, அடிக்கடி இக்கோயிலுக்கு வந்து கலைமகளை வழிபட்டதாக கூறுவர். அன்னையின் அருளால் பாரதம் போற்றும் மகாகவியானார் பாரதி. கல்வியும், சிந்தனையுமே ஒருவனை பண்படுத்தும் அலகுகள் என்பதை உணர்வதற்குக்கூட இயலாத காலகட்டத்தில் வாழ்கிறோம்.

கூத்தனூர் என்ற அழகிய சிற்றூரில் அமர்ந்து எல்லையில்லா பெருங்கருணையோடு குழந்தைகளுக்கு வித்யா வரம் தந்துவரும் கலைமகள் அன்னையை, அன்பர்கள் அனைவரும் குடும்பத்தினரோடும், தவறாமல் குழந்தைகளோடும் சென்று ஆண்டுக்கு ஒருமுறையேனும் தரிசிக்க வேண்டுகிறேன். குழந்தைகளின் கல்வியில் ஏற்படும் தோஷங்களைப் போக்க கூத்தனூர் சரஸ்வதி கோயில் வழிபாடு இன்றியமையாத பரிகாரமாகும்.

விலைபொருளாகிவிட்ட கல்வியை, விளைபொருளாக்கிக் கொள்ள கலைமகளின் கடாட்சம் அவசியம். அன்னையின் அருட்பார்வை நம் உள்ளத்தையும் வாழ்வையும் செழுமைப்படுத்தும் என்பது திண்ணம்.கல்வி, செல்வம், வீரம் வரிசையில் முதலிடம் பெறும் கல்வி அனைவருக்கும் கிட்டிட,எல்லோரும் எல்லாமும் பெற்றிட கலைமகளை உளமாற தரிசிப்போம்.

தலவரலாறு 

 

Arulmiguu Koothanur Sri Maha Saraswathi Ambal, Image source

 

சத்தியலோகத்தில் ஒரு முறை சரஸ்வதிக்கும், பிரம்மனுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கல்விக்கு அரசியான தன்னால் தான் சத்தியலோகம் பெருமை அடைகிறது என்று சரஸ்வதியும், தன் படைப்புத்தொழிலால் தான் சத்தியலோகம் பெருமை அடைகிறது என்று பிரம்மனும் வாதிட்டனர். வாதம் முற்றி, ஒருவரையொருவர் சபித்துக்கொண்டனர்.

இதனால் பூலோகத்தில் சோழ நாட்டில் புண்ணிய கீர்த்தி, சோபனை என்ற தம்பதியினருக்கு பகுகாந்தன் என்ற பெயரில் மகனாகவும், சிரத்தை என்ற பெயரில் மகளாகவும் பிறந்தனர்.

அவர்களுக்கு திருமண வயது வந்ததும் பெற்றோர்கள் வரன் தேட தொடங்கினர். அப்போது இவர்கள் இருவருக்கும் தாங்கள் யார் என்பது நினைவுக்கு வந்தது. சகோதர நிலையில் உள்ள நீங்கள் திருமணம் செய்து கொண்டால் உலகம் பழிக்கும். இது இயலாத காரியம். பெற்றோருக்கு இந்த விஷயம் தெரிய வர அவர்கள் இந்த பிரச்சினைக்கு தீர்வு வேண்டி சிவபெருமானை பிரார்த்தனை செய்தனர். சிவபெருமான் அவர்கள் முன் தோன்றி சகோதர நிலையில் உள்ள நீங்கள் திருமணம் செய்து கொள்வது இயலாத காரியம் என்று கூறி, சரஸ்வதியிடம் நீ மட்டும் இங்கே தனியாக கோவில் கொண்டு பக்தர்களுக்கு கல்விச்செல்வத்தை வழங்குவாய் என்று கூறி அருள்பாலித்தார். அதன்படி சரஸ்வதி தேவி, கூத்தனூரில் தனியாக கோவில் கொண்டு, தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு கல்வி செல்வத்தை வாரி வழங்கி வருகிறார்.

 

 

அமைவிடம் 

Arulmigu Koothanur Sri Saraswathi Annai, Image source
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் சுமார் 22 கிலோ மீட்டர் தொலைவில் பூந்தோட்டம் என்ற ஊர் உள்ளது. இங்குள்ள பஸ் நிலையத்தில் இறங்கினால் 5 நிமிட நடைபயணத்தில் கோவிலை அடையலாம். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து காரைக்காலுக்கு பூந்தோட்டம் வழியாக செல்லும் பஸ்சிலும் வரலாம்.

திருவாரூரில் இருந்து மயிலாடுதுறையில் செல்லும் பஸ்சில் ஏறி 25 கிலோ மீட்டர் பயணித்தால் கோவிலை சென்று அடையலாம். 

காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் 9 மணி வரையும் கோயில் நடை திறந்திருக்கும். தொடர்புக்கு: 04366 273050 மற்றும் 238445.
Subramaniya Bharathiyar's song on Saraswathi Ambal, source

  

Om Guruve Namaha...

 

நேசத்துடன்
குபேரன் ஜோதிடர்

Sunday, June 10, 2018

Kundrathur Murugan Temple

மகிழ்ச்சியில் திளைக்கும் குன்றத்தூர் ஆண்டவன் 




சென்னை அருகே குன்றத்தூரில் சிறு குன்றின் மீது வீற்றிருக்கும் முருகக் கடவுளுக்கு இரண்டு சிறப்புகள் உண்டு....

  • ஒன்று முருகன் குன்றின் மீது வந்தமர்ந்த தருணம்
  • இரண்டு தேவியர் சமேதராக முருகன் பார்க்கும் திசை

இவ்விரு சிறப்புகளால்தான் சில முக்கிய தேவைகளுக்கான பரிகார ஸ்தலமாக குன்றத்தூர் விளங்குகிறது.
Kundrathur Arulmigu Appan Sri Subramanya Swamy Temple, Image source

குன்றத்தூரின் முதல் சிறப்பு

 

Ammai Arulmigu Sri Valli, Ammai Arulmigu Sri Devasena sametha Appan Arulmigu Subramanya Swamy, Image source

 

அன்பும், கருணையுள்ளமும், ஈகை குணமும் கொண்டவராக விளங்குகிறார் குன்றத்தூர் முருகன். முருகக் கடவுளின் ஒவ்வொரு மனநிலைக்கும் ஏற்ப அந்தத்த  அமைவிடங்கள் பரிகார ஸ்தலங்களாக விளங்குகின்றன.

திருத்தணியில் திருமணம் புரிவதற்கு முன்பாக முருகன் வந்தமர்ந்த ஸ்தலம்தான் குன்றத்தூர். குதூகல மனதுடனும், குழந்தை மனோபாவத்துடனும் முருகன் மகிழ்ச்சியில் திளைக்கும் ஸ்தலம் குன்றத்தூர். அதனால்தான், குன்றத்தூர் வந்து வணங்கும் பக்தர்களுக்கு மிகையான மகிழ்ச்சியை தனது பரிசாக மகிழ்வுடன் தருகிறார் முருகன்.

 

முதற்சிறப்பின் முக்கிய பரிகாரங்கள்


Arulmigu Sri Valli Thayar Arulmigu Sri Devasena Thayar sametha Appan Arulmigu Sri Subramanya Swamy, Image source
தேவியருடன் குன்றத்தூரில் குதூகல மனநிலையில் திளைக்கும் தமிழ்க்கடவுள், நல்மண வாழ்க்கை, தம்பதிகளின் அன்யோன்யம், மழலைப்பேறு, சகோதர ஒற்றுமை பாசம், அனைத்திலும் வெற்றி ஆகியவற்றை பக்தர்களுக்கு அருளி பெரும் உபகாரம் புரிகிறார்.

குன்றத்தூரின் இரண்டாம் சிறப்பு

 

Arulmigu Appan Sri Skandhar, Skanda Shasti, Kundrathur, Image source

 

குன்றிருந்தால் அங்கே குமரர் இருப்பார் என்பதற்கு இணங்க, சிறு குன்றென்றாலும் குன்றத்தூரில் ஏறியமர்ந்து வீற்றிருக்கிறார் தமிழ்க்கடவுள். இங்கு தேவியருடன் எழுந்தருளி, வடதிசையை நோக்கி பார்வையை செலுத்துகிறார். இதுவே குன்றத்தூரின் இரண்டாம் சிறப்பு.

வடதிசை என்பது ஜோதிடரீதியாக குபேர திசை என கணிக்கப்படுகிறது. எனவேதான், வடதிசை முருகனை வேண்டி வணங்கினால், பொருளாதாரம் மேன்மை அடையும்.
  

இரண்டாம் சிறப்பின் முக்கிய பரிகாரங்கள்

 
Kundrathur Murugan Temple's 84 steps, Image source

தொழில், வர்த்தகம், பொருளாதாரம் ஆகியவற்றுக்கான சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்குகிறது குன்றத்தூர். அரசு மற்றும் தனியாரிடம் இருந்து வரவேண்டிய வரவுகள், குடும்ப நிதி மேம்பாடு என எல்லா வகையான பொருளாதார தேவைகளுக்கும் வாரி வழங்குவார் முருகர் என்பது நாடிச் சென்ற அன்பர்களின் அனுபவ உண்மையாகும்.


குன்றத்தூர் படிகளில் படி விளக்குகள் ஏற்றி, கொடிமரத்தில் நெய்தீபமேற்றி வழிபட 16 செல்வங்களையும் வாரி வழங்குவார் முருகன் என்பது மிகச் சிறந்த ஜோதிட பரிகாரம்.

Arulmigu Sri Valli Thayar, Arulmigu Sri Devasenai Thayar sametha Arulmigu Appan Sri Kundrathur Murugan, Image source
முருகன் என்றால் அழகு. அன்பும், அறிவும், கருணையும் நிரம்பிய எல்லையில்லா பேரழகு. அதற்கொப்ப இங்கே அழகிய மணாளனாய் ஜொலிக்கும் குமரரை மனதில் நிறுத்தி தவமிருந்தால் பண்பும், பாங்கும் மிக்க மனமொத்த இல்லறத் துணை அமைவது கண்கூடு.


தேவியர் சூழ, எல்லையில்லா மகிழ்ச்சியில் திளைக்கும் வடதிசை நோக்கும் குன்றத்தூர் ஆண்டவரை, நம் தமிழ்க்கடவுள் என்ற குடும்ப உணர்வோடு வந்து வணங்கும் யாவர்க்கும் அனைத்தையும் அருள்வார் முருகன் என்பது திண்ணம்.

Copy from the Sthala Puranam of Kundrathur Subramanya Swamy Temple

 

 ... வேலும் மயிலும் துணை ...

 

Vallimalai Sri Sachidananda Swamigal, Image source & more information



திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே....

 -வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் தொகுத்தருளிய   'வேல் மாறல்'

 Source: Youtube

 

Om Guruve Namaha... 

 

நேசத்துடன்
குபேரன் ஜோதிடர்

 


 

Monday, April 30, 2018

Guru's Blessings

குரு பார்வை கோடி நன்மை

 

Ammai Arul Sri Valli, Ammai Arul Sri Devanai, Appan Arul Thiru Shanmugar, Thiruchendhur, Image source


ஆடும் பரி, வேல், அணிசேவல் எனப்
பாடும் பணியே பணியா அருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவில்
சாடும் தனி யானைச் சகோதரனே

 

ஒரு முறை ஜோதிடக் கலையின் குருவான பிரஹஸ்பதியிடம், தெய்வீக சாஸ்திரத்தைக் கற்பதற்காக வேண்டி சந்திரன் சென்றார்.

Guru Sri Pamban Kumara Gurubara Swamigal. Gurunathar Madapuram Guru Dhaksinamoorthy, Guru Thiruporur Sri Chidambara Swamigal

குரு, தனக்குத் தெரிந்ததை எல்லாம் சந்திரனுக்கு கற்று கொடுத்தார்.

சந்திரன் அதனைக் கற்றுத் தேர்ந்தவுடன், எல்லாம் அறிந்து கொண்டு விட்டோம் என்ற மமதையில் மூழ்கித் திளைத்தார்.

Guru Sri Arunagiri Nathar, Image source & Discourse

சந்திரனின் மமதையைக் கொஞ்சம் மட்டம் தட்டி வைக்க விரும்பிய குரு பகவான்,  பூமியில் அப்போது ஜனித்த ஒரு சிசுவின் ஜாதகத்தை மிகச் சரியாகக் கணிக்குமாறு சந்திரனைப் பணித்தார்.

சந்திரனும் அந்தச் சிசுவின் ஜாதகத்தைக் கணித்தார்.

அந்தக் குழந்தை ஒரு வயது பூர்த்தியாகும் சமயம் பாம்பு கடித்து மரணம் சம்பவிக்கும் என்றும் பலன் சொன்னார்.

இருந்தும் இல்லாமல் இரு
Sri La Sri Guru Mounaguru Swamigal, Thangal Ashram, Image source


பிரஹஸ்பதி சந்திரனை சில மாதங்கள் கழித்து வரவழைத்தார்.

அச்சமயம் சந்திரன் ஜாதகம் குறித்த குழந்தைக்கு ஓராண்டு முடிவதற்கு இன்னும் ஒரு சில வினாடிகளே இருந்தன. 

சந்திரனும், குருவும் வானவெளியில் சஞ்சரித்தபடியே குழந்தையைப்.பார்த்துக் கொண்டிருந்தனர்.

தொட்டில் சங்கிலி வழியே பாம்பு ஒன்று மெதுவாக இறங்கிக் கொண்டிருந்தது. 

குழந்தைக்கும் பாம்புக்குமிடையே ஒரு அடி தூரமே இடைவெளி இருந்தது. 

தன்னுடைய கணிப்புச் சரிதான் இன்னும் கொஞ்ச நேரத்தில் பலிக்கப் போகிறது என எண்ணி மகிழ்ந்த சந்திரன், குருவை இறுமாந்து நோக்க, 

குரு தன் புன்னகை மாறாமல் குழந்தையையே பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போதுதான் அந்த எதிர்பாராத அதிசயம் நடந்தது:

திடீரென கண்விழித்த குழந்தை வழவழவென்று மின்னிக் கொண்டு இறங்கி வரும் பாம்பை ஏதோ புதுமாதிரி விளையாட்டுச் சாமான் என்று கருதி, 

மகிழ்ச்சியால் கையையும் காலையும் உதைத்துக் கொண்டு துள்ள, தொட்டில் மேலே கீழே பக்கவாட்டில் என்று திசைமாறிக் குலுங்க, 

பாம்பின் தலை சங்கிலியின் ஒரு வளையத்திற்குள் எக்கச்சக்கமாகச் சிக்கிக் கொண்டது.

தன் தலையை விடுவித்துக் கொள்ளும் முயற்சியில் பாம்பு தன் உடலால் சங்கிலியைச் சுழற்றிக் கொண்டு நெளிய, 

குழந்தை மேலும் துள்ள, இப்போது பாம்பின் வாலும் வேறொரு வளையத்தினிடையே சிக்கிக் கொண்டது. 

குழந்தை மேலும் மேலும் துள்ளி விளையாட எவ்வளவு நேரம்தான் பாம்பு தாங்கும் ஓரிரு வினாடிகளில் பாம்பு இறந்து விட்டது.

அடுத்த வினாடி குழந்தை தன்னுடைய இரண்டாவது வயதில் அடி எடுத்து வைத்தும் விட்டது. 

சந்திரன் தன் ஓலைச் சுவடிகளில் இருந்த குழந்தையின் ஜாதகக் கணக்கை சரிபார்த்துக் கொண்டிருந்தான். 

தன் கணக்கு சரியாகவே இருந்தது போலப் பட்டது. பின்னர் குருவைப் பார்த்துக் கேட்டான்.


Arulmigu Ammai Sri Valli, Arulmigu Ammai Sri Devanai sametha Appan Arulmigu Muthukumaraswamy, Vaithesshwarankovil, Image source

ஜாதகத்தில் இப்போது குருபார்வை கூட இல்லையே, இது எப்படி நடந்தது? 

குழந்தை எப்படிப் பிழைத்தது? 

தோற்றுவிட்ட ஆத்திரம் அவர் குரலில் பீறிட்டது. 

புன்னகை மாறாத குரு, அப்போதுதான் வாயைத் திறந்தார்,

ஜாதகத்தில் குரு பார்க்காவிட்டால் என்ன? அதுதான் இப்போது நேரிலேயே பார்த்துக் கொண்டிருந்தேனே அப்புறம் எப்படி மரணம் சம்பவிக்கும்?

சந்திரன் தன் கர்வம் அழிந்து, குருவை வணங்கி விடைபெற்றார்.
Acharya Sri Madhurakavi Azhwar, his Guru Acharya Thiru Nammalvar, Alwarthirunagari Image source
 Video source & Copyright: Youtube

ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் கிரக நிலை எப்படி இருந்தபோதும், ஜாதகம் பார்க்கும் நாளுக்கு உரிய கிரகங்களின் கோசார நிலைகளையும் ஆராய்ந்த பின்னரே உறுதியாகப் பலன்களை அறிய முடியும். மேலும், கிரஹ நிலைகளுக்கு உரிய நிவர்த்திப் பரிகாரங்களை கோச்சார கிரகங்களின் அனுமதி இல்லாமல் செய்ய இயலாது. அதனால், ரிகாரங்களை தள்ளிப் போடக் கூடாது.
Guru Bogar Siddhar, Image source
குரு இருந்து கொடுப்பதைவிட பார்த்துக் கொடுப்பது அதிகம். அதனால்தான் குரு பார்வை கோடி நன்மை என்கிறார்கள்.

சில நேரங்களில் நமது குரு (ஆசாரியன் பார்வை ஆசி பூரணமாக நம்மிடம் இருந்தாலும்) கடாச்சம் கூட கோடி நன்மை தரும். எனவே

"எப்பொழுதெல்லாம் முடியுமோ, அப்போழுதெல்லாம் ஆசாரியனை சேவிக்க சென்று வருவோம்- காரணமே இல்லாவிட்டால் கூட".

ஆச்சாரிய தேவோ பவ:


    முருகன், குமரன், குகன், என்று மொழிந்து
    உருகும் செயல் தந்து, உணர்வு என்று அருள்வாய்
    பொரு புங்கவரும், புவியும் பரவும்
    குருபுங்கவ, எண் குண பஞ்சரனே 

     


    Video source & copyright: Youtube

     

    Om Guruve Namaha....

     

    நேசத்துடன்
    குபேரன் ஜோதிடர்

    Sunday, April 22, 2018

    Pozhichalur Sri Agatheeswarar Temple

    சென்னையில் ஒரு வட திருநள்ளாறு - பொழிச்சலூர்

     

    Pozhichalur Arulmigu Appan Sri Kala Bairavar, Image source

    நவ கிரகங்களில் ஈஸ்வர பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனி பகவான். ஒரு ராசி மண்டலத்தில் இருந்து மற்றொரு ராசி மண்டலத்துக்கு மாற இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்வார். அதனாலேயே இவருக்கு மந்தகாரகன் என்ற பெயரும் உண்டு.

    ஆனால், ஒரு ராசியில் அமர்ந்துவிட்டால், நீடித்த, நிலையான, தீர்க்கமான பலன்களை நல்கக் கூடியவர் சனி. அது சுப பலனாக இருந்தாலும் சரி, அசுப பலனாக இருந்தாலும் சரி. சனிக்கு எல்லாம் சமம்தான்.

    ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, அர்த்தாஷ்டமச் சனி ஆகியவை கோட்சார ரீதியாக கெடு பலன்களை தரக் கூடிய அமைப்புகளாகும். சனி, நவ கிரகங்களில் ஆயுள்காரகன் என்பதால், உயிர் தொடர்புடைய விஷயங்களில் அதிக அக்கறை கொள்வது அவசியம். 

    Pozhichalur Arulmigu Sri Saneeswara Bhagavan, Image source

    உடல் ரோகம், தாய் சுகவீனம், உயிர் ஆபத்து, இல்லறத்திலும், கூட்டுத் தொழிலிலும் தலைபோகும் பிரச்சினைகள் இக்காலகட்டத்தில் எழலாம். முறையான பரிகாரங்களை மேற்கொண்டு, இரண்டரை ஆண்டுகளுக்கு தொடர் வழிபாட்டில் ஈடுபட்டும் தோஷ நிவர்த்திகளை பெற முடியும் என நமது ஜோதிட மூல நூல்கள் வழிகாட்டுகின்றன.


    வினைப் பயனை விதிப்படி நிறைவேற்றுபவர் என்றாலும், தண்டிக்கும் செயல்களில் ஈடுபடுவதால் சனீஸ்வரருக்கும் பாவங்கள் அதிகரித்து, சிவனை வேண்டி பாவ விமோசனம் பெற்றதாக ஐதீகம். இதன்படி, சனீஸ்வரர் விமோசனம் பெறும் இடங்களான திருநள்ளாறும், வட திருநள்ளாறு எனப்படும் பொழிச்சலூர் ஸ்தலங்களும் சனி பரிகார ஸ்தலங்களாக விளங்குகின்றன.


    திருநள்ளாறு தலத்தில்தான், சனீஸ்வரர் தனித்து நின்று அருள் பாலிக்கிறார். அதைப்போலவே சென்னையில் உள்ள சனி பரிகார ஸ்தலம்தான் பொழிச்சலூர். பம்மல் அருகே உள்ள பொழிச்சலூர் ஸ்தலத்தை வட திருநள்ளாறு என்பர். திருநள்ளாறுக்கு அடுத்தபடியாக தனித்து நின்று சனீஸ்வரர் அருள்பாலிப்பது இங்குதான்.


     
    Video source and credits: Youtube


    இங்குள்ள அகத்தீஸ்வரர் ஆலயத்தில் சனி பகவானை வழிபட்டு, தசா, புத்திகளில் வரும் கெடு பலன்கள், ஏழரை, அஷ்டம, அர்த்தாஷ்டம சனியின் துர்பலன்கள் நீங்கப் பெறலாம்.  9 சனிக்கிழமைகள் தொடர்ந்து எள் தீபம் ஏற்றியோ, காக்கைகளுக்கு அன்னமிட்டோ பரிகாரம் மேற்கொள்ளலாம்.

    இக்கோயிலின் மற்றுமொரு சிறப்பு, கோயிலின் நுழைவு வாயிலில் அமைந்துள்ள சம்ஹார மகா கால பைரவர். அஷ்டமி தோறும் இங்கு நடைபெறும் பைரவ வழிபாடு மிகச் சிறப்பு வாய்ந்தது. 

    அன்பர்கள் அனைவரும், சனியின் சுபப் பார்வை பெறும் வகையிலும்,
    பில்லி, சூனியம், நோய், அறுவைச் சிகிச்சை உள்ளிட்ட பீடைகள் நீங்க பைரவரை வழிபடவும் பொழிச்சலூர் சென்று வருமாறு வேண்டுகிறேன்.


    Om Guruve Namaha...

      
    நேசத்துடன்
    குபேரன் ஜோதிடர்
     

    Akshaya Tritiya

    உன்னதத்தை நல்கும் அட்சய திருதியை


    Ammai Arulmigu Kanci Sri Kamakshi Amman, Image source

    இந்து மத கால கணிப்பின்படி யுகங்கள் நான்கு வகைப்படும். கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம். இவற்றில் முதல் யுகமான கிருதா யுகத்தில் பிரம்மனால் உலகம் தோற்றுவிக்கப்பட்ட நாள் அட்சய திதியை என்கிறது இந்து சாஸ்திரம். அதே நாளில்தான் திரேதா யுகமும் தோன்றியதாக ஐதீகம். எப்போதும் குறையாத, அழிவில்லாத என்று பொருள் படும் அட்சய திதியை நன்நாள், எல்லா வகையிலும் உன்னதத்தை நல்கும் பொன்னாளாகும்.


    Arulmigu Ammai Kamalavalli Nachiyaar, Thiru Uraiyur, Image source

    அன்றைய தினத்தில் நல்லவை அனைத்தும் நடைபெறலாம், நல்லவை அனைத்தையும் மேற்கொள்ளலாம் என்பதே பொதுவிதியாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதனால்தான் புண்ணியம் பிறந்த நாளாகவும், புண்ணியத்தைத் தேடி செல்லாமல், புண்ணியம் நம்மைத் தேடி வருவதற்கான நாளாகவும் முன்னோர்களால் அறிவுறுத்தப்பட்டது.


    Ammai Arulmigu Sri Andal, Appan Arulmigu Vatapathrasayee, Sri Villiputhur, Image source

    இந்து மத விதிகளின்படி பூஜை, வேள்வி, திருக்கோயில் வழிபாடு, குலதெய்வ பிரார்த்தனை, மூத்தோர் ஆசிர்வாதம் போன்ற நற் செயல்களில் ஈடுபட இந்த தினம் உகந்ததாகும். கோடை வாட்டும் இக்காலத்தில் விலங்குகள் மற்றும் பறவைகளின் தாகம் தீர்த்தல், பசுவுக்கு வாழைப்பழம், அகத்திக்கீரை உணவிடுதல், ஒருகோடி புண்ணியம் நல்கும் கோமாதா வழிபாடு, எளியவர்களுக்கு தானமிடுதல், முன்னோர்களை மனதில் நிறுத்தி வணங்குதல், கல்வியறிவு பெற உதவி செய்தல் போன்ற நற்காரியங்களை இந்நன்நாளில் மேற்கொள்ளலாம்.

    Ammai Arulmigu Sri Lalitha Ambigai, Thirumeechayur, Image source

    ஜோதிட கூற்று

     

    அட்சய திருதியை தினத்தில்:

    • நல்ல ஆரோக்கியத்தை பெற - எறும்புக்கு பச்சரிசி உணவிடலாம்
    • பித்ருக்கள் ஆசி பெற  - காகத்துக்கு அன்னமிடலாம்
    • வளமான வாழ்க்கைக்கு - பசுவுக்கு வாழைப்பழம், அகத்தி கீரை அளிக்கலாம்.
    • மன உளைச்சலில் இருந்து விடுபட - மீனுக்கு பொறி உணவு இடலாம்
    • நல்ல நட்புகள் கைகூட - புறாவுக்கு பாசிப்பயிறு உணவளிக்கலாம்.
    வெள்ளியை தானமிட்டு அன்பைப் பரப்பவும் இந்நாளையே ஜோதிடம் சிறந்த தினமாக கூறுகிறது.

    Arulmigu Appan Sri Karpaga Vinayagar, Pillayarpatti, Image source

    அட்சய திருதியையின் காரண நோக்கம் 

     

    அட்சய திருதியை தினத்துக்கு ஒரு உளவியல் காரணமும் உண்டு. கலியுகத்தில் காலம் தள்ளும் நாம், நம்மை நோக்கிய ஒரு உள்நோக்கு பார்வைக்கும், ஆழ்மனத் தேடலை மேற்கொள்ளவும் இந்த நாள் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது. செய்வனவற்றை நமக்காக அல்லாமல், சமூகம் சார்ந்த நன்மைகளை மேற்கொள்ளவும், அனைத்து ஜீவராசிகளையும் நினைத்து பார்த்து ஜீவகாருண்யத்தை பரப்பவும் மேற்கண்ட செயல்பாடுகள் உதவுகின்றன.

    Arulmigu Thayar Sri Valli, Arulmigu Thayar Sri Devasena Sametha Appan SubramanyaSwamy, Anuvavi, Image source

    எல்லாமும் நிறைந்த தினம் 

     

    இதன்மூலம் நமது கடந்த கால செயல்பாடுகளை சீர்தூக்கி பார்த்து, வரும் காலங்களில் அன்பையும் அறத்தையும் பரப்ப இந்நன் நாளை மனித இனம் பயன்படுத்திக் கொள்ளலாம். சுருக்கமாக கூறுவதென்றால், நம்மையும் நமது மனதையும் சுத்திகரித்துக் கொள்ள இறைவன் அருளிய தினமே அட்சய திருதியை ஆகும்.

    Arulmigu Appan Si Kala Bala Vairavar, Vairavanpatti, Image source

    2018: ஏப்ரல் 18-ம் தேதி புதன்கிழமை, 18.04.2018, Wednesday

    Om Guruve Namaha....  

     

    நேசத்துடன்
    குபேரன் ஜோதிடர்

    Sunday, January 7, 2018

    Cycles of Conscience, also known as Saturn Cycles

    ஏழரைச் சனி என்ன செய்யும்?

     

    Thirukollikadu Arulmigu Thayar Gajalakshmi, Arulmigu Sri Pongu Saneeshwarar

     

    காலத்தை கி.மு.& கி.பி. என வரலாறு பிரிக்கிறது. அதுபோல வாழ்க்கையை ஏ.மு.& ஏ.பி. என ஜோதிடம் பிரித்துக் காட்டுகிறது. அதாவது ஏழரைச் சனிக்கு முன், ஏழரைச் சனிக்குப் பின் என்று வாழ்வு கனிகிறது. ஏழரைக்குப் பிறகு வரும் தெளிவும் நிதானமும் ஆச்சரியமானது. 

    இந்த ஏழரைச் சனி என்னதான் செய்யும்? உங்கள் ராசிக்குப் பின் ராசியிலும் உங்கள் ராசிக்குள்ளும் உங்கள் ராசிக்கு அடுத்த ராசியிலும் சனி சஞ்சரிக்கும் காலத்தையே ஏழரைச் சனி என்கிறோம். சிறு வயதில் வரும் முதல் சுற்றை மங்கு சனி என்றும் வாலிப மற்றும் மத்திம வயதின்போது வரும் இரண்டாம் சுற்றை பொங்கு சனி என்றும் கொஞ்சம் வயதான காலத்தில் வரும் மூன்றாம் சுற்றை கங்கு சனி என்றும் அழைப்பர். 

    முதல் சுற்று

     
    Thirunallaru Arulmigu Shani Bhagavan, Image source


    பிறந்ததிலிருந்து இருபது வயதுக்குள் ஏற்படும் ஏழரைச்சனியின் தாக்கம் சிறுவர்களிடம் மிகத் தெளிவாகக் காணலாம். சனியின் முழுத் திறனும் இவர்களிடம் ஒளிவு மறைவில்லாமல் வெளிப்படும். முதல் சுற்று, முடக்கி முயற்சியை தூண்டும். ‘‘எதுக்கெடுத்தாலும் கத்தி கலாட்டா பண்றான்; எத்தனை தடவை அடிச்சாலும் துடைச்சுப் பொட்டுட்டு மறுபடி மறுபடி தப்பு பண்றான்; எத்தனை தடவை டாக்டர் கிட்ட காண்பிச்சாலும் மூக்கு ஒழுகிட்டே இருக்கு...’’ என்று பலவிதத்தில் பாதிப்புகள் இருக்கும். ஏழரைச் சனியின்போது பிறக்கும் குழந்தைகளின் பெற்றோரிடம் டாக்டர் கையெழுத்து வாங்கிக் கொள்ளும் அளவுக்கு உடல்நிலை பாதிக்கும். 

    Thiruchendhur Arulmigu Appan Sri Shanmugar, Image source


    குழந்தைப் பருவம் முதல் டீன் ஏஜ் வரையிலான இந்த சுற்றில் பெற்றோருக்குள் கருத்து மோதல், பிரிவு, சந்தேகத்தால் சண்டை என்று பிரச்னைகள் வந்து நீங்கும். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், கணவன் மனைவிக்குள் நேரடியாக எந்தப் பிரச்னையும் இருக்காது. ‘‘அவங்க சொன்னாங்க, இவங்க சொன்னாங்க’’ என்று மூன்றாவது நபர் தலையீட்டால்தான் பிரச்னை உருவாகும். அதிலும் முக்கியமாக குறுகிய காலத்தில் அறிமுகமாகி நெருங்கிய நண்பராக மாறுவோரால்தான் கருத்து மோதல் பெரிதாகும். தேன் கூடாக இருந்த குடும்பம் தேள் கொட்டின மாதிரி ஆகும் சூழ்நிலை நேரும். 13லிருந்து 19 வரையுள்ள ஏழரைச் சனி நடக்கும் பிள்ளைகளுக்கு செல்போன் தராதீர்கள். கூடா நட்பினில் சிக்குவார்கள். திணறி வெளியே வருவார்கள். அவர்களை கண்கொத்தி பாம்பாக பாதுகாக்கவேண்டும். 

    Swamimalai Arulmigu Appan Sri Swaminatha Swamy, Image source


    மந்தம், மறதி, தூக்கம் என்று இருப்பார்கள்.‘‘அடங்காதே, அலட்சியப்படுத்து’’ என்ற மனநிலை! பிறகு, ‘‘அப்பவே அம்மா சொன்னாங்க. அப்பா சொன்னாங்க நான் கேட்கலை’’ என்று வருந்துவார்கள். ‘‘வீட்ல அடங்காத பிள்ளை ஊர்ல அடங்கும்.’’ இதுதான் சனிபகவானின் திருத்தும் முறை. தடவித் தடவி சொன்னால் கேட்காத பிள்¬ளயை தடியெடுத்து திருத்தும் வாத்தியார்தான் சனிபகவான். ‘‘சுவாமிக்கு நமஸ்காரம் பண்ணிட்டுப்போடா’’ என்றால், ‘‘எங்கயோ இருக்கற சாமி என் பிரேயருக்குத்தான் வெயிட் பண்ணிகிட்டிருக்காரா’’ என்பார்கள். ஆனால், இடரும்போதும், சிக்கலில் சிக்கும்போதும் தாயின் சொற்கள் நினைவுக்கு வரும். ‘‘மத்தவங்க சொல்றபோது செய்யக் கூடாது; தனக்குன்னு எப்போ தோணுதோ அப்போ செய்யணும்’’ என்று முரண்டு பிடிப்பார்கள். தாமதித்து எதையும் செய்ய வைக்கும்.

    ஏழரைச் சனியில் பெறக்கூடிய அனுபவங்களும் அவமானங்களும் காயங்களும் வடுக்களாகி, வாழ்க்கை முழுதும் மறக்க முடியாதபடி இருக்கும். இப்படி வருத்தப்பட வைத்தே வாழ்க்கையை வளர்ப்பார், சனிபகவான். அப்போ என்னதான் செய்யறது?‘‘குழந்தைகளை விட்டுப் பிடியுங்கள். நீ இப்படிப் பண்ணா இதுதான் ரிசல்ட்’’ என்று அன்பை மனதிற்குள் பூட்டி, வெளியே கண்டிப்பு காட்டுங்கள்.

    Thiruvannamalai Arulmigu Sri Kala Bairavar, Image source


    சனி நேர்மறையாக மாறுவார். சனி தர்மதேவன். அதர்மத்தில் திருப்பி விட்டு சோதிப்பார். வலையில் மாட்டாது வெளியேற வேண்டும்; அதற்கு சில உபாயங்களையும் சொல்லித் தருவார்; இவற்றை நாம்தான் சரியாகப் புரிந்துகொண்டு கெட்டியாகப் பிடித்துக் கொள்ளவேண்டும். ‘‘நீ படிக்கறியோ இல்லையோ. வாராவாரம் அந்த கோயிலுக்கு மட்டும் போயிட்டு வந்துடு. காலையில சீக்கிரமா எழுந்திரு. பத்து நிமிஷம் சுவாமிகிட்ட உட்கார்ந்து நான் சொல்ற சுலோகத்தை மட்டும் சொல்லு’’ என்று பழக்குங்கள். சனி என்கிற கரி, வைரமாக மாறும் அதிசயம் நிகழும்.

    இரண்டாவது சுற்று

     
    Sri Rangam Arulmigu Appan Sri Ranganatha Swamy, Image source

    இருபத்தேழு வயதுக்கு மேல் யாருக்கு ஏழரைச் சனி நடந்தாலும் அதற்கு பொங்கு சனி என்று பெயர். பறித்தல், பாதுகாத்தல், பலமடங்காக பெருக்கித் தருதல் & இதுதான் இரண்டாவது சுற்றின் கான்செப்ட். உள்ளுக்குள் கிடந்த திறமைகளை பூவாணம்போல பொங்க வைக்கும். செல்வத்தை அள்ளிக் கொடுக்கும். ஆனால், கொஞ்சம் கெடுக்கும். அதனால்தான் கொடுத்துக் கெடுப்பவர்; கெடுத்து கொடுக்கிறவர் என்ற பெயர் சனிக்கு உண்டு. ‘‘சும்மா, ஒண்ணுமே இல்லாத ஒட்டாண்டியா வந்தான். இப்போ உசரத்துக்கு போயிட்டான்’’ என்பார்கள். காசு, பணம், பதவி, கல்யாணம், சொத்து, சுகம் எல்லாவற்றையும் கொடுப்பார். ஆனால், நடுவில் பிடுங்கிக் கொள்வார். ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும்?

    Kanchipuram Arulmigu Ammai Sri Kamakshi, Image source


    ‘‘என்னால்தான் எல்லாமும் நடக்கிறது, எனக்கு மிஞ்சி என்ன இருக்கு!’’ என்று ஆணவத்தோடு பேசுவோரின் அனைத்து செல்வங்களையும் பறிக்கிறார். ஏனெனில், இந்த இரண்டாவது சுற்றின்போது சில மிதமிஞ்சிய செல்வ வளத்தால் தாமே சில பிரச்னைகளை உருவாக்கிக் கொள்வார்கள். ‘‘நான் யார் தெரியுமா?’’ என்று ஆணவத்துடன் தன் செல்வாக்கை நிரூபிக்க துணிவார்கள். தான்தான் பெரிய ஆள் என்று அடக்கமற்ற மனோநிலையில் திரிவார்கள். அப்படி மாறிய அடுத்த நிமிடமே சனி உங்களை ஆட்டம் காண வைக்கும் முயற்சியில் இறங்குவார். ஆகவே பேச்சிலோ, செயலிலோ கர்வக் கொம்பு முளைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

    Trichy Arulmigu Appan Sri Thayumana Swmay Ammai Sri Mattuvarkulali, Image source

    சனிபகவானால் தான் நம் அறிவுக்கும் சக்திக்கும் அப்பாற்பட்ட பல விஷயங்கள் இருக்கிறது என்பதை உணருவோம். ‘‘நம்ம கையில எதுவும் இல்லை’’ என்கிற சரணாகதி தத்துவமும் புரியும். ஏழரைச் சனியின்போது முடிந்தவரை கோர்ட் கேஸ் என்று போகக் கூடாது. பத்து லட்ச ரூபாய் பொருளுக்காக காக்கிக்கும் கருப்புக்கும் இருபது லட்ச ரூபாய் செலவு செய்வீர்கள். எல்லா வி.ஐ.பி.யையும் தெரிந்து வைத்திருப்பீர்கள். ஆனால் ‘‘இந்த விஷயத்தைப்போய் நாம எப்படி சொல்றது! அவர் என்னை தப்பா நினைச்சிட்டா...?’’ என்று தயங்குவீர்கள். 

    அப்போது எப்படித்தான் இருக்க வேண்டும்? 

     

    Thiru Vinnagaram Arulmigu Sri Oppliappan Ammai Arulmigu Sri Booma Devi Arulmigu Sri Markandayar, Image source

    வசதி இருக்கும்போது எதையும் தலையில் ஏற்றிக் கொள்ளாமல் இருங்கள். கூழ் கிடைத்தாலும் குடியுங்கள். ஸ்டார் ஹோட்டலில் இருந்தாலும் கூழ் குடிக்கும் மனோநிலையிலேயே இருங்கள். அத்தனைக்கும் ஆசைப்பட்டு அத்தனையும் தனக்கே என்று வாரி சுருட்டும்போது சனிபகவான் சும்மாயிருக்க மாட்டார். அமைதியாக இருந்தால் வேலை பார்க்கும் நிறுவனத்தையே விலை பேசும் நிலைக்கு உயர்த்துவார். இந்த இரண்டாவது சுற்றில்தான் வியாபாரம் விருத்தியாகும். அதனால் தைரியமாக தொழில் தொடங்கலாம். ‘‘ரெண்டாவது ரவுண்டுல ரெட்டை வருமானம்’’ என்றொரு வாக்கியம் உள்ளது.


    Dhaksinakasi Arulmigu Appan Sri Kalabairavar, Image source

    ஆனால், பாதை மாறினால் அதல பாதாளம்தான். ‘‘சார், நம்ம பிராண்டுக்கு மார்க்கெட்ல தனி மவுசு இருக்கு. அதனால டூப்ளிகேட்டையும் நாமே விடுவோம்’’ என்று சனி சிலரை அனுப்பி சோதிப்பார். ஏனெனில், ஒரு மனிதனின் மனதை சோதித்துப் பார்ப்பதில் இவருக்கு நிகர் எவருமிலர். ‘‘சாப்பாட்டுக்கே வழியில்லாம வந்து சேர்ந்தான். சரின்னு சேர்த்துகிட்டேன். அவன் கொடுத்த ஐடியாவை நம்பினேன். இப்போ அம்போன்னு நிக்கறேன். தப்பான வழியை காட்டிட்டு என்னையும் காட்டிக் கொடுத்துட்டான்’’ என்பீர்கள். நேர்மை என்கிற வார்த்தையை கல்வெட்டாக பதித்துக் கொள்ளுங்கள். ஏழரைச் சனியின் முடிவில் நீங்கள்தான் அந்த வட்டாரத்தின் முக்கியஸ்தர். செல்வந்தர். 

    கோடிகோடியாக வைரம், வைடூரியம் குவிந்திருக்கும் திருப்பதியில், வெங்கடாஜலபதிக்கு மண் சட்டியில், தயிர் சாதம்தான் நிவேதனம். பெருமாளே அத்தனை எளிமையெனில் நாமெல்லாம் எப்படியிருக்க வேண்டும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். 

    Sikkal Arulmigu Ammai Sri Valli Ammai Sri Devasena sametha Appan Sri Singaravelvar, Image source

     
    இன்னொரு விஷயம். நம்பிக்கை துரோகம் செய்தவர்களைப் பார்த்து துடிக்காதீர்கள். டென்ஷன் ஆகாதீர்கள். ஆரோக்யம் பாதிக்கும். ஏழரைச் சனியில் யார் உங்கள் காசை சாப்பிட்டாலும் அது ஏற்கனவே நீங்கள்பட்ட கடன் என்று நினைத்துக் கொள்ளுங்கள். அது பூர்வ ஜென்ம தொடர்பு என்பதாகவே எடுத்துக் கொள்ளுங்கள். முக்கியமாக இந்த இரண்டாவது சுற்று ஜென்ம சனியின்போது பார்ட்டி, கேளிக்கைகளையெல்லாம் கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள். எல்லாவற்றையும் தானே அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்படக் கூடாது. சனி பகவான், ‘‘நீ போய் கேளு. அவர் தறாரா இல்லையான்னு பார்க்கறேன்’’ என்று சிலரை அனுப்பி வைப்பார். அதனால் பிரதிபலன் பாராத உதவிகள் செய்தால் பொங்கு சனி நல்ல பலன்களை கொடுக்கும்.

     

    மூன்றாவது சுற்று

     

    Thirukadaiyur Arulmigu Appan Sri Kala Samhara Murthy Ammai Arulmigu Sri Balaambhika, Image source

     

    கிட்டத்தட்ட ஐம்பது வயதைத்தாண்டி வரும் ஏழரைச் சனி. இதுதான் உங்களுக்கு கடைசி சனி என்று யாராவது பயமுறுத்தினால் பயப்படாதீர்கள். படபடப்பையும், பயத்தையும் தரும் சுற்று இது. உங்களை முடக்க முயற்சி செய்யும். அதற்குள், உங்களை மீறி உங்களிடத்தில் ஒரு கட்டுப்பாடு வந்துவிட வேண்டும். ‘‘காலையில நாலு இட்லி சாப்பிடுவேன்’’ என்றால் அதை மூணாக்கி அப்புறம் இரண்டே போதும் என்று நிறுத்திக் கொள்ளும் தெளிவு வேண்டும். அவ்வளவுதான். அதீத இயக்கத்தை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். தன்னை தாழ்த்தியே உயர்த்திக் கொள்ள தயாராக இருக்க வேண்டும். மருமகள் மார்க்கெட்டிற்கு போக தயாராக இருந்தால் நீங்கள்போய் வாங்கிக் கொண்டு வரவேண்டும்.

    Thiruvanaikavai Appan Arulmigu Sri Jambukeshwarar Ammai Arulmigu Sri Akhilandeshwari, Image source


    எது நடந்தாலும் குற்றத்தை கண்டுபிடித்துக் கொண்டிருக்கக் கூடாது. இள வட்டங்கள் ஏளனமாகப் பேசும். இந்த மூன்றாவது சனியில் முதல் மரியாதையை எதிர்பார்க்கக் கூடாது. ‘‘எங்க போறாங்கன்னு எங்கிட்ட சொல்றதேயில்லை’’ என்று அடிக்கடி சொல்லக் கூடாது. வீட்டில் தனக்குத் தெரியாமல் எதுவும் நடக்கக் கூடாது என்று நினைக்கக் கூடாது. ‘‘நான் எவ்ளோ பெரிய போஸ்ட்டுல இருந்தேன்’’ என்றெல்லாம் பேசிக்கொண்டு வீட்டை அலுவலகமாக்கக் கூடாது. ஆடையைத் துறந்தால் மகாத்மாவாகலாம். ஆசையைத் துறந்தால் புத்தனாகலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

    எல்லோருக்கும் எல்லா பணிகளிலும் உதவியாக இருங்கள். உங்களை சனி உயர்ந்த இடத்தில் வைத்து அழகு பார்ப்பார்.

    Chidamabaram Arulmigu Valli Thayar Devasena Thayar sametha Appan Sri Muthukumara Swamy, Image source


    ஏழரைச் சனியில் எப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்று திரும்பத் திரும்ப சந்தேகம் வருகிறதா? 
    ஏழரையில் மனசாட்சிக்கு பயப்படுங்கள். மனசாட்சியை மீறி எது செய்தாலும் சனியின் பாதிப்பிற்கு ஆளாவீர்கள். உங்கள் மனசாட்சி வேறல்ல... சனிபகவான் வேறல்ல என்பதை நீங்களே அறிவீர்கள்.


    எம் தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ
    சிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனையாள்
    கந்தா, கதிர் வேலவனே, உமையாள்
    மைந்தா, குமரா, மறை நாயகனே.

    - திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி

     

    Om Guruve Namaha...

     

    நேசத்துடன்
    குபேரன் ஜோதிடர்