Friday, March 31, 2017

Sri Pamban Kumaragurudasa Swamigal

மனநலம் நல்கும் பாம்பன் ஸ்வாமிகள்!

 

Arulmigu Sri Pamaban Kumaragurudasa Swamigal (Picture credit)














நகரமயத்துக்கும் வேகமான வாழ்க்கைக்கும் உதாரணமாகிவிட்ட சென்னையில் கலியுக காமதேணுவாக மக்களுக்கு நல்லருள் பரப்புகிறது திருவான்மியூரில் உள்ள பாம்பன் ஸ்வாமிகள் ஜீவசமாதி.

1850-ம் ஆண்டு ராமேசுவரம் தீவில் உள்ள பாம்பன் பகுதியில் பிறந்த குமர குருதாச ஸ்வாமிகள் தமிழாலும், கந்தர் சஷ்டி கவசத்தாலும் ஈர்க்கப்பட்டார். எத்தனையோ தமிழ்ப் பாடல்களை பிற்காலத்தில் அவர் படைத்தாலும் அவர் இயற்றிய சண்முகக் கவசம் நீங்கா புகழ் பெற்றது.

தமிழின் மீதும், தமிழ் கடவுளின் மீது எல்லையில்லா ஈர்ப்பு கொண்டு அவர் மேற்கொண்ட தவத்தால், கலியுகத்தில் முருகனின் திருக்காட்சியைக் காணும் பெரும் பாக்கியத்தை பெற்றார். 1894-ம் ஆண்டு ராமநாதபுரத்துக்கு அருகே பிரப்பன்வலசை பகுதியில் அவர் மேற்கொண்ட அருந்தவத்தால் முருகனே நேரில் காட்சியளித்து அருள்பாலித்ததாக அவரது சீடர்கள் பதிவு செய்துள்ளனர்.

அருணகிரிநாதர் மீது கொண்ட பேரன்பால் அவரை ஞானகுருவாக ஏற்று பிற்காலத்தில் "உபய அருணகிரியார்" என போற்றப்பட்டார். அவரது வடமொழிப் புலமையையும், உபநிடதங்களை உடனுக்குடன் தமிழில் விவரிக்கும் பேராற்றலையும் தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்கள் தனது நூல்களில் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அவரது கனவுகளில் முருகனே வந்து நல்வழிகாட்டி சைவப் பணியில் ஈடுபடுத்தியதாக அவரது சீடர்கள் கூறுகின்றனர். உடல்நலிவுற்று சென்னை பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, ஆங்கிலேயே டாக்டர்கள் கூட கைவிட்ட நிலையில், மயிலேறி வந்த மருகனால் உடல்வினைகள் நீங்கியதால் இன்றும், ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் "மயூர சேவன விழா" திருவான்மியூர் ஜீவ சமாதியில் கொண்டாடப்படுகிறது.

1929-ல் முக்தியடைந்த பாம்பன் ஸ்வாமிகள், திருவான்மியூரில் ஜீவசமாதியாக குடி கொண்டு அண்டியவர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

மனநலம் குன்றிய குழந்தைகள், மனப் பிழற்சி, தாளாத மன உளைச்சல், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட அன்பர்கள், திருவான்மியூர் பாம்பன் ஜீவசமாதியில் பவுர்ணமி தினத்தில் இரவு முழுவதும் தங்கி வழிபட்டும், தியானம் செய்தும் பரிபூரண குணமடைந்து வருகின்றனர். பாம்பன் ஸ்வாமிகளின் அருளால் பூரண மனநலம் பெறுவது உறுதி.

Sri Pamban Swamigal, (Picture credit)

பித்ரு தோஷத்துக்கும், அஷ்டம குரு மற்றும் குருப் பார்வையின்மையால் வரும் பிரச்சினைகள், குரு பகவானின் அருட்கடாட்சத்தைப் பெற திருவான்மியூர் பாம்பன் ஸ்வாமிகள் ஜீவ சமாதியில் வியாழக்கிழமைதோறும் சென்று வழிபடுவது அவசியமாகும்.

வேகமான வாழ்க்கையில் அன்பையும் ஆன்மீகத்தையும் தொலைத்துவிட்டதாக ஏங்கும் அன்பர்கள் அனைவரும் திருவான்மியூர் பாம்பன் ஸ்வாமிகள் ஜீவசமாதி எனும் கலியுக காமதேணுவை இறுகபிடித்துக் கொள்வது நலம்.

  Velum Mayilum Thunai

 Om Guruve Namaha....

   

தேசத்துடன்
குபேரன் ஜோதிடர்

Thursday, March 30, 2017

Thangal Sri Mounaguru Swamigal Jeeva Samadhi

இருந்தும் இல்லாமல் இரு 

 

Thangal Ashram Sri Mounaguru Swmaigal, Photo credit


Myilai Sri Sundara Ram Swamigal, Photo credit




Om Guruve Namaha.... 

தேசத்துடன்
குபேரன் ஜோதிடர்

Thursday, March 23, 2017

Shiva, the Mother

சுடுகாட்டில் சிவன் ஏன் ??? மாபெரும் கருணையை உணரவேண்டி !!!!

 நமசிவாய


சிவன் சுடுகாட்டில் ஆடும் சாமி!!! என்று இன்று பலர் குழம்பி, மற்றவர்களையும் குழப்பி??? மெய் உணராமல் இருப்பவர்கள், மெய் உணரவேண்டி ஈசன் திருவருளால் இப்பதிவு.

மெய் உணர்ந்து, மெய்யை பற்றி இன்புறும் அடியார்கள் பாதம் பணிகிறேன்,
சுடுகாடு :
உயிராகிய மெய், இருந்த கூடுஆகிய உடலை விட்டு பிரிந்த பின், கூடுஆகிய உடலை ( பயனற்ற கூட்டை ) நெருப்பு கொண்டு எரிக்கும் இடம்.

சுடுகாட்டில் உயிரின் நிலை :
உயிர் உடல் என்னும் கூட்டில் இருக்கும் வரை, உயிரினம், உயிர்யற்ற உடல் பிணம் ( சவம் ), 50 – 60 ஆண்டு காலம் வாழ்ந்த கூடாகிய உடலை விட்டு உயிர் பிரியும்போது, தான் இத்தனை ஆண்டுகள் இருந்த கூட்டில் மீண்டும் நுழைய முடியாமல் பரிதவிக்கும், ( 1 ஆண்டு வசித்தாலும் ஒரு வீட்டை விட்டு பிரியும்போது ஏற்படும் உணர்வு போல - 50 – 60 ஆண்டு காலம் இருந்த கூடு )
தமக்கு என்றும் நிரந்தரம் நினைத்து பேணி காத்த உறவுகள் அனைத்தும் உடலை எரித்துவிட்டு திரும்பிக்கூட பார்க்காமல் சென்றுவிட்டனர், இன்புற சேர்த்த சொத்து அனைத்தும் தமது இல்லை என்று மெய்யை உணர்ந்து பரிதவிக்கும் போது.

சுடுகாட்டில் சிவம் :
உயிர் பரிதவிக்கும் போது மாபெரும் கருணையாளன் நம்பெரும் ஈசன் கருணையுடன் உயிரை தன்னுள்ளே ஒடுக்கி அபயம் அளிக்கிறார்,

இதை உணர்த்தவே அப்பர் பெருமான் “ திருஅங்கமாலை “ தேவாரத்தில்
"உற்றார் ஆருளரோ - உயிர் கொண்டு போகும்பொழுது குற்றாலத்துறை கூத்தனல்லால் நமக்குற்றா ராருளரோ." மிக தெளிவாக கூறியுள்ளார்.

யார் உதவியும் ஆறுதலும் கிட்டாது அல்லல்ப்பட்டு பரிதவிக்கும் நேரத்தில் கருணையுடன் அடைக்கலம் தந்து அருளும் மாபெரும் கருணையை உணராமல் சுடுகாட்டில் ஆடும் கடவுள் என்று கூறுவது எவ்வளவு சிறுமை !!! என்று உணருங்கள் .

சுடுகாட்டில் மட்டும் ஆடிக்கொண்டு இருக்கும் கடவுள் இல்லை, அகிலத்தையே ஆட்டுவிக்கும் ஆண்டவன், நம் உயிரின் பரிதவிப்பை பொறுக்காமல் அந்த உயிருக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டி சுடுகாட்டிலும் எழுந்தருளி மாபெருமும் கருணையோடு காக்கிறான் என்று உணர்த்தவே, ஈசன் திருவருளால் இப்பதிவு.

உய்வு பெறவேண்டிய உயிர்கள் உய்யும் பொருட்டு


Arulmigu Anandathandva Natarajar, (Thillai Vanam) Chidambaram. Image Source


திருச்சிற்றம்பலம்


Om Guruve Namaha....


தேசத்துடன்
குபேரன் ஜோதிடர்